விமானத்தின் கருப்பு பெட்டி

26 July 2010

விபத்துக்குள்ளான விமானம் குறித்து முழு விபரங்களையும் அறிவதற்கு உதவியாக இருப்பது கருப்புப் பெட்டியாகும். விமானத்தின் விவரங்கள் பதிவு சாதனம் ( ATR ) என்பதே கருப்புப் பெட்டி என அழைக்கப் படுகிறது. இந்த பெட்டியின்மீது பல அடுக்குகளாக எக்கு தகடுகள் சுற்றப்பட்டு இருக்கும். அதனால், விமானம் மோதினாலோ, தீ பிடித்தாலோ, தட்ப வெட்ப நிலையில் அதிகபட்ச்ச மாற்றம் ஏற்பட்டாலோ எந்த பாதிப்பும் கருப்புப் பெட்டிக்கு ஏற்படாது. மேலும் எத்தகைய விபத்து ஏற்பட்டாலும் பாதுகாப்பான பகுதியாக கருதப்படும் விமானத்தின் வால் பகுதியில் இந்த பெட்டி பொருத்தப் பட்டு இருக்கும். இவ்வளவு பாதுகாப்பான பகுதியில் அமைந்துள்ள கருப்பு பெட்டியில் விமானம் பறந்த உயரம், வேகம், நேர்குத்து இயக்கம், விமானத்தின் இடம் என விமானத்தை பற்றிய உண்மையான நிலவரங்கள் பதிவாகிக் கொண்டு இருக்கும். எனவே விபத்து நடந்த போது நிலவிய சூழ்நிலையை தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.


Airbus 340 cockpit.

இதுதவிர கருப்புப் பெட்டியின் மற்றொரு பிரிவில் ஒலிப் பதிவு கருவியும் உண்டு. விமானத்தில் உள்ள பைலட்டுகள் அறையில் நடந்த உரையாடல், அங்கு ஏற்படும் ஒலிகள், பைலட்டுகளின் குரல்கள், எஞ்ஜினின் இரைச்சல் என அனைத்துவித சப்தங்களும் அதில் பதிவாகிவிடும். இதன் மூலமாக விபத்து நடந்த போது பரிமாறப் பட்ட தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

Hell hole (avionics bay) of an Airbus A300

இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த்தாக இருப்பதாலேயே விபத்து நடந்த உடனேயே, விமானத்தின் கருப்புப் பெட்டியை தீவிரமாக தேடுகின்றனர். மேலும், சாலை விபத்துகளைக் கண்டறிவதற்குக் கூட, வாகனங்களில் அப்பெட்டி பொருத்தப்படுகிறது.

David Warren, inventor of the black box flight recorder, in the cockpit of a Boeing 747

ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வாரனின் அப்பா, ஆஸ்திரேலிய விமான ஆராய்ச்சி ஆய்வகத்தில் ஆய்வு விஞ்ஞானியாக பணிபுரிந்தவர். 1934ல் ஒரு விமான விபத்தில் பலியானார். கடந்த 1953ல் "காமெட்' என்ற ஜெட் விமானம் விபத்துக்குள்ளான போது, அது பற்றிய விசாரணையில் டேவிட் வாரனும் ஈடுபட்டு உதவினார். அப்போதுதான் இதுபோன்ற விமான விபத்துகளைக் கண்டறியும் ஒரு கருவியைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற முடிவுக்கு அவர் வந்தார். அதன் பின், 1956ல் அவர் கறுப்புப் பெட்டியைக் கண்டுபிடித்து வெளியுலகுக்கு அறிவித்தார். இருப்பினும் அவரது கண்டுபிடிப்பின் முழுப் பரிமாணம் மற்றும் பயனை உணர்ந்து அதை விமானங்களில் பொருத்த மேலும் ஐந்தாண்டுகள் தேவைப்பட்டன. அவரது கண்டுபிடிப்பு, உலக விமானப் போக்குவரத்தின் பாதுகாப்பான பயணத்துக்கு ஒப்பற்ற பங்காக கருதப்படுகிறது.


Cockpit voice recorder (CVR)

உலகிலேயே விமானத்தில் கருப்புப் பெட்டி பொருத்துவதை முதன் முதலில் கட்டாயமாக்கியது ஆஸ்திரேலியாதான். 1960 – ம் ஆண்டில் அது அமலுக்கு வந்த்து. கருப்புப் பெட்டி என அழைத்தாலும் அதன் உண்மையான நிறம் ஆரஞ்சு என்பது குறிப்பிட்த்தக்கது. விபத்துக்கு பிறகு எளிதாக அடையாளம் காண்பதற்காக அந்த பெட்டியின் மீது சிவப்பு அல்லது ஆரஞ்சு நிறத்தில் பெயின்ட் அடிக்கிறார்கள்.


Read more...

தைராய்டு

23 July 2010


நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.
இது தைராய்டு நோய்கள் வராமல் அல்லது தீவிரமாகாமல் தடுத்துக் கொள்வதற்கும் பொருந்தும்.
நாளமில்லாச் சுரப்பிகளுள் மிக முக்கியமானது தைராய்டு சுரப்பி. இதில் சுரக்கும் தைராக்சின் எனும் ஹார்மோன், உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சி மற்றும் ஆண், பெண் உறுப்புகள் முதிர்ச்சி பெறுவதற்கு உதவுகிறது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த தைராய்டு சுரப்பி, கழுத்துப் பகுதியில் மூச்சுக் குழாய்க்கு முன்பாக பட்டாம்பூச்சி வடிவத்தில் அமைந்துள்ளது. தாயின் வயிற்றில் கரு உருவாகி, 30-வது நாளிலேயே தைராய்டு சுரப்பி உருவாகி விடுகிறது.


தைராய்டு சுரப்பி சீராக இல்லாவிட்டால்...:



உடலில் தைராய்டு சுரப்பி சீராகச் செயல்படாமல் போகும்போது, உடல் நலப் பிரச்னைகள் ஏற்பட ஆரம்பிக்கிறது. தைராய்டு சுரப்பி செயல்பாட்டில் கோளாறு உருவானால், பல்வேறு நோய்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

ஏனெனில் தைராய்டு சுரப்பி அதிகமாகச் சுரந்தால், மிகை தைராய்டு நோய்கள் ("ஹைப்பர் தைராய்டிஸம்') ஏற்படும்; தைராய்டு சுரப்பி குறைவாகச் சுரந்தால் குறை தைராய்டு நோய்கள் ("ஹைப்போ தைராய்டிஸம்') ஏற்படும். தைராய்டு சுரப்பியே வீங்கும் நிலையில், முன் கழுத்துக் கழலை (எர்ண்ற்ழ்ங்) பிரச்னை ஏற்படும்.



அயோடின் உப்பு ஏன்?



குழந்தை வேண்டாம் என்பதற்காகச் சாப்பிடும் கருத்தடை மாத்திரைகளால் தைராய்டு நோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதேபோன்று அயோடின் சத்துக் குறைவு காரணமாக முன் கழுத்துக் கழலை நோய் ஏற்படலாம். இதனால்தான் உணவில் அயோடின் உப்பை பயன்படுத்துமாறு வலியுறுத்தப்படுகிறது.



மிகை தைராய்டு நோய் அறிகுறிகள்:



முன்பே சொன்னதுபோல் தைராய்டு அதிகமாகச் சுரப்பதால் மிகை தைராய்டு நோய்கள் வர வாய்ப்பு உண்டு.

1. பசி அதிகமாக இருக்கும்;

2. அடிக்கடி சாப்பிட்டாலும் உடல் மெலிந்து கொண்டே போகும்;

3. கை-கால் நடுக்கம் இருக்கும்;

4. சில சமயங்களில் உடல் முழுவதும் நடுங்கும்;

5. காரணம் எதுவுமின்றி கோபம் வரும்;

6. அடிக்கடி மலம் கழிக்க வேண்டியிருக்கும்;

7. தூக்கமின்மை பிரச்னை இருக்கும்;

8. நாடித் துடிப்பு அதிகமாக இருக்கும்;

9. சிலருக்கு கண் விழிகள் வெளியே தள்ளிக் கொண்டு விகாரமாகத் தெயும்;

10. மாதவிலக்குப் பிரச்னைகள் ஏற்படும்;

11. கால் வீக்கம், மூட்டுவலி, ஞாபக சக்தி குறைவு, வேலைகளில் ஈடுபாடற்ற தன்மை தோன்றும்;

குறை தைராய்டு நோய் அறிகுறிகள்:

1. உடல் பருமனாகும்;

2. மலச்சிக்கல் ஏற்படும்;

3. சோம்பேறித்தனமும், அசதியும், அதிக தூக்கமும் ஏற்படும்;

4. பசியின்மை, முடி கொட்டுதல், மாத விலக்குப் பிரச்னைகள், கால் வீக்கம், மூட்டு வலி ஏற்படும். பெண்கள் பூப்பெய்துவது தாமதமாகும்.



கட்டி ஏற்பட்டால்...:



கழுத்தில் தைராய்டு சுரப்பி உள்ள பகுதியில் சிறிய அளவில் கட்டி ஏற்பட்டால் அலட்சியமாக இருந்து விடக் கூடாது. ஏனெனில் தைராய்டு ஹார்மோன் அதிகமாகச் சுரக்கும் நிலையில் வீக்கமும் விஷக் கட்டியும் ஏற்படும். இது நச்சுக் கழலை ஆகும்.

ஆரம்ப நிலையில் வலி இருக்காது. திடீரென கட்டி பெதாக வலிக்கத் தொடங்கும். சில சமயங்களில் பேச்சு நரம்பு பாதிக்கப்பட்டு, பேச்சுத் திறன் பறி போகவும் வாய்ப்பு உண்டு. எனவே ஆரம்ப நிலையிலேயே சிகிச்சை அளிக்கும் நிலையில் எளிதாகக் கட்டுப்படுத்தி விடலாம்.



குழந்தைகள் படிப்பில் மந்தமாக இருந்தால்...:



குழந்தைகள் படிப்பில் மந்தமாக இருந்தால் தைராய்டு சுரப்பிகளில் குறைபாடு உள்ளதா என்று பார்ப்பது அவசியம். தைராய்டு பசோதனை செய்து சிகிச்சை பெறுவது அவசியம்.



அணுவியல் சிகிச்சை:



இன்று வேகமாக வளர்ந்து வரும் அணுவியல் மருத்துவத்தில் இத்தகைய நோய்களைக் கண்டுபிடிப்பதற்கும், குணப்படுத்துவதற்கும் ஐசோடோப் எனப்படும் அணுவியல் மருந்து பயன்படுத்தப்படுகிறது. கதிர் இயக்கத் தன்மை உடைய இந்த மருந்து, நோயாளிக்கு வாய் வழியாகவோ, ஊசி மூலமாகவோ செலுத்தப்படும். உடலில் உள்ள எல்லா உறுப்புகளிலும் ஏற்படும் புற்று நோய்களையும் குறிப்பாக மூளை, கல்லீரல், சிறுநீரகம், தைராய்டு ஆகியவற்றில் ஏற்படும் புற்று நோய்களை கண்டுபிடிக்க முடியும். இந்த மருந்து பாபா அணுவியல் ஆராய்ச்சி நிலையத்தில் தயாக்கப்பட்டு, அங்கீகக்கப்பட்ட மையங்களுக்கு இந்தியா முழுவதும் விநியோகிக்கப்படுகிறது.

Read more...

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP