தெரியுமா

09 October 2009

* அதிகப் புத்திசாலித்தனம் கொண்ட இந்திய மக்களில் 25% பேர் அமெரிக்க மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம் பேராவார்.
* அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இந்தியாவில் திறனும் மதிப்பும் மிக்க குழந்தைகள் அதிகம்.
* 2010ல் அதிகம் ஆள் தேடப்படும் அல்லது விருப்பப்படும் முதல் பத்து வேலைகள் 2004ல் இல்லாத வேலைகளாகவே இருக்கும்.
* இப்போது இல்லாத சில வேலைகளுக்காக இன்னும் கண்டுபிடிக்காத தொழில் நுட்பங்களை வைத்து நாம் தற்போது மாணவர்களைத் தயார் செய்து கொண்டிருக்கிறோம். எதற்காகத் தெரியுமா? இன்னும் பிரச்சினைகள் என்று கண்டறியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக.
* நான்கு ஆண்டு தொழில் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் முதல் இரண்டு ஆண்டுகளில் படிப்பதில் பாதி மூன்றாவது ஆண்டில் பழைய தொழில் நுட்பமாகிவிடும்.
* அமெரிக்க அரசின் வேலை வாய்ப்பு துறை அறிவிப்பின் படி இன்றைய மாணவர்களுக்கு அவர்களின் 38 வயதில் 10முதல் 14 வேலைகள் இருக்கும்.
* தற்போது நான்கு ஊழியர்களில் ஒருவர் அவருடைய நிறுவனத்தில் ஓராண்டுக்கும் குறைவாகவே பணியாற்றுகிறார். இருவரில் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகவே பணியாற்றுகிறார்.
* மை ஸ்பேஸ் தளத்தில் பதிந்தவர்கள் எண்ணிக்கை 20 கோடி. மை ஸ்பேஸ் ஒரு நாடாக இருக்கும் பட்சத்தில் அது உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இந்தோனேஷியாவிற்கும் பிரேஸிலுக்கும் இடையே இருக்கும்.
* ஒரு நாட்டின் மக்கள் தொகையில் இன்டர்நெட் அதிகம் பயன்படுத்துபவர்களின் நாடாக பெர்முடா உள்ளது. இந்த வகையில் அமெரிக்க 19 ஆவது இடத்தையும், ஜப்பான் 22 ஆவது இடத்தையும் கொண்டுள்ளன.
* ஒவ்வொரு மாதமும் கூகுள் தளத்தில் 3100 கோடி தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்ற 2006ல் இது 270 கோடியாக இருந்தது. அப்படியானால் கூகுளுக்கு முன்னால் இந்த கேள்விகளை யாரிடம் கேட்டார்கள்? தெரியலயே!
* முதல் எஸ்.எம்.எஸ். வர்த்தக செய்தி 1992 டிசம்பரில் அனுப்பப்பட்டது. இன்று ஒரு நாளில் அனுப்பப்படும் மற்றும் பெறப்படும் டெக்ஸ்ட் மெசேஜ் எண்ணிக்கை உலக மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
* விற்பனை மூலம் மக்கள் தொகையில் 5 கோடி பேரை எட்டிப் பிடிக்க ரேடியோவிற்கு 38 ஆண்டுகள் ஆயின. டிவிக்கு 13 ஆண்டுகள் பிடித்தன. இன்டர்நெட்டுக்கு 4 ஆண்டுகள் பிடித்தன. ஐ பாட் ஜஸ்ட் 3 ஆண்டுகள் தான் எடுத்துக் கொண்டது. பேஸ் புக் தளம் இந்த எண்ணிக்கையை 2 ஆண்டுகளிலேயே எட்டியது
* 1984ல் இன்டர்நெட் டுக்கான சாதனங்களின் எண்ணிக்கை 1,000. 1992ல் இது பத்து லட்சம். 2008ல் இது நூறு கோடி
* ஆங்கில மொழியில் ஏறத்தாழ 10,00,000 சொற்கள் இருக்கின்றன. ஷேக்ஸ்பியர் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் இது 7 மடங்கு அதிகமாகும்.
* புதிய தொழில் நுட்பம் குறித்த செய்திகளின் எண்ணிக்கை ஒவ்வொரு இரண்டு ஆண்டிலும் இரு மடங்காக உயர்கிறது.
* தற்போது உலகில் நாள்தோறும் 3,000 நூல்கள் வெளியாகின்றன. வருங்காலத்தில் இபேப்பர் என்னும் எலக்டரானிக் செய்தித்தாளின் விலை அச்சிட்டு வெளியாகும் செய்தித்தாளைக் காட்டிலும் விலை குறைவாகவே இருக்கும்.
* ஜப்பானின் என்.டி.டி. நிறுவனம் வெற்றிகரமாக ஒரு பைபர் ஆப்டிக் இழை மீது சோதனை நடத்தியுள்ளது. இதன் ஒரு இழை மூலம் ஒரு நொடியில் 14 ட்ரில்லியன் பட்ஸ் தகவல்களை அனுப்பலாம். இது 2,660 சிடியில் உள்ள தகவல்களுக்கு சமமாகும். இது ஒரு நொடியில் 21 கோடி போன் கால்களுக்கு இணையாகும். தற்போது ஒவ்வொரு ஆறு மாத காலத்திலும் மூன்று பங்கு உயர்ந்து வருகிறது. இதே உயர்வு இன்னும் 20 ஆண்டுகள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* 2013ல் மனித மூளையின் செயல்பாட்டினை மிஞ்சும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்படும்.
* 2049ல் 1000 டாலருக்குக் கிடைக்க இருக்கும் கம்ப்யூட்டர் உலகின் அனைத்து மனித மூளைகளுக்கும் உள்ள கணக்கிடும் திறனைக் காட்டிலும் வேகமும் திறனும் கொண்டதாக இருக்கும்.
* இந்த செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த கால அவகாசமான 8 நிமிடத்தில் அமெரிக்காவில் 67 குழந்தைகள் பிறந்திருக்கும். சீனாவில் 274 பிறந்திருக்கும். 395 குழந்தைகள் நம் நாட்டில், இந்தியாவில், பிறந்திருக்கும். 6 லட்சத்து 94 ஆயிரம் பாடல்கள் இன்டர்நெட்டிலிருந்து திருட்டுத்தனமாக டவுண்லோட் செய்யப்பட்டிருக்கும். இவை எல்லாம் எதை நோக்கிப் போகின்றன? இதன் பொருள் என்ன? யாருக்குத் தெரியும்? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லலாம்.

Read more...

மாணவிக்கு மொபைல் போனில் 'ரூட்' போட்ட வாலிபர்

03 October 2009

மொபைல் போன் நல்லதாக இருந்தாலும் அடிக்கடி புதியதாக மொபைல்களை மாற்றவில்லை என்றால் சிலருக்கு தூக்கமே வராது. சிலர் காசு கொடுத்து புதியதாக வங்கிவிடுவார்கள். ஆனால் பல பேர் பழைய மொபைலை கொடுத்துவிட்டு புதியதை வாங்குவார்கள். அப்படி அடிக்கடி மொபைலை மாற்றுபவர்கள் மிகவும் கவணமாக இருக்க வேண்டும் . இப்படித்தான் பல் மருத்துவம் படிக்கும் மாணவிக்கு மொபைல் போனில் "ரூட்' போட்ட, டீ கடை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மந்தைவெளியை சேர்ந்த பிரபலமான பிரமுகரின் மகள். இவர், சென்னை அருகேயுள்ள கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வருகிறார். இவரது மொபைல் போன் எண்ணை, கல்லூரியில் படிக்கும் தோழியிடம் கொடுத்திருந்தார்.வேறு மொபைல் போன் வாங்க நினைத்த அவரது தோழி, மொபைல் போனை "செகண்ட்ஸ் சேல்ஸ்' கடையில் விற்றார். அந்த மொபைல் போனில் மாணவியின் மொபைல் எண் பதிவாகியிருந்தது.

அந்த மொபைல் போனை திருவள்ளூர் ஏகாட்டூரைச் சேர்ந்த, டீ கடையில் வேலை பார்க்கும் உலகநாதன் (25) வாங்கி பயன்படுத்தினார். போனில் பதிவாகியிருந்த மாணவியின் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்டு கல்லூரி மாணவர் போல் பேசினார்.இந்த விவரம், மாணவின் வீட்டிற்கு தெரியவந்தது. மொபைல் போனில் பேசி ரூட் போட்ட வாலிபரை பொறி வைத்து பிடிக்க, மாணவியின் பெற்றோர் முடிவு செய்தனர். டீ கடை வாலிபரிடம் இனிமையாக மாணவியை பேச வைத்தனர்.சென்னை காமராஜர் சாலையில் உள்ள கண்ணகி சிலை அருகே, "டிப் டாப்' உடையுடன் டீ கடை வாலிபர் உலநாதன் காத்திருந்தார்.
தங்கள் காரில் சென்ற மாணவியின் உறவினர்கள், வாலிபரை காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு பறந்தனர்.தனி இடத்திற்கு அழைத்துச் சென்று நன்றாக "கவனித்தனர்'. பிறகு அபிராமபுரம் போலீசில் உலகநாதனை ஒப்படைத்தனர். உதவி கமிஷனர் ஐசக்பால்ராஜ் உத்தரவின் படி, மொபைல் போனில் ஆபாசமாக பேசி ஈவ் டீசிங் செய்த பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
.

Read more...

எலும்பு மாற்று அறுவை சிகிச்சை

01 October 2009

புதுடில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் எலும்புகள் வங்கியில், இரண்டு ஆண்டுக்கு பின் முதல் முறையாக ஒருவரது உடல் எலும்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தான், ரத்த மாற்று சிகிச்சைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மேற்கொள்ளப் படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கு, நான்கு பேரும், அமெரிக்காவில் இருவரிடம் இருந்து எலும்புகள் தானம் பெறப் படுகின்றன. ஆனால், இந்தியாவில் இது தொடர்பாக விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது.எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, டில்லி, அகில இந்திய மருத்துவ அறிவியல் பல்லைக் கழகத்தில் பேராசிரியர் மல்கோத்ராவால், முதல் முதலாக, 1999ம் ஆண்டு, எலும்புகள் வங்கி துவக்கப்பட்டது. இந்தியாவிலேயே உள்ள ஒரே எலும்புகள் வங்கி இது ஒன்று மட்டும் தான்.ஆனால், ஆண்டுக்கு ஒருவரிடம் இருந்து கூட, எலும்புகள் தானம் கிடைப்பது இல்லை. கடைசி யாக, 2007ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி, அகில இந்திய மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டு, பலனின்றி உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தார், அவரது எலும்புகளை தானமாக அளித்தனர். அதன் பின், யாரும் எலும்புகள் தானம் செய்ய முன்வரவில்லை. இதனால், எலும்புகள் வங்கி, பெரும் பற்றாக்குறை சிக்கலை சந்தித்தது. அங்கு மிகச்சில எலும்பு பாகங்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளன. பெரிதும் தேவைப்படும், இரண்டு ஜோடி கை, கால் எலும்புகள் கூட இல்லாத நிலை இருந்தது. தற்போது இந்த எலும்பு வங்கியில், நான்கு முழங்கால் எலும்புகளும், இரண்டு இடது பக்க எலும்பு கிண்ணங்களும் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. தொடை எலும்பே இல்லாத நிலை இருந்தது.இந்நிலையில், அகில இந்திய மருத்துவமனைக்கு இதயம் பழுதான நிலையில் காசியாபாத்தை சேர்ந்த ஒருவர் கொண்டு வரப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் முழுவதையும் தானம் செய்ய அவரது குடும்பத் தினர் முன் வந்தனர். ஆனால், இதில் இவர்கள் விளம்பரம் தேடிக் கொள்ள விரும்ப வில்லை. உடல் தானம் செய்வோரின் பெயரையோ, விவரங்களையோ வெளியிடக் கூடாது என்பது தான் அவர்கள் விதித்த ஒரே நிபந்தனை.ஆனால், இதய நோயால் அவர் இறந்ததால், அவரது கண்கள் மற்றும் எலும்புகளை மட்டும் தானமாக பெற டாக்டர்கள் ஒப்புக் கொண்டனர். இதன் படி, அவரது கண்கள் எடுக்கப்பட்டன.இறந்து போனவரின் இடுப்பு எலும்பு, இரண்டு கால்களின் தொடை எலும்புகள், முழங்கால் எலும்புகள், முழங்கால் எலும்பு மூட்டு, அதனுடன் இணைந்த தசைநார் போன்றவை எடுக்கப் பட்டுள்ளன.பொதுவாக, இவ்வாறு தானம் பெறப்படும் எலும்புகள் மற்றும் தசை நார்கள், மைனஸ் 70 டிகிரி சென்டிகிரேட் குளிர்நிலையில் வைக்கப்படும். இவற்றை ஐந்து ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.தற்போது எலும்பு தானம் அளித்தவரால், குறைந்தபட்சம் 15 பேர் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறந்தவரிடம் இருந்து எடுக்கப்பட்ட தசைநார்கள், விளையாட்டு போட்டிகளில் தசைநார் பாதிப்படையும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பொருத்த உதவும். இடுப்பு எலும்பு, முழு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். பல்வேறு விபத்துக்களில் கை, கால்களில் பல இடங்களில் எலும்புகள் உடைந்தும் நொறுங்கியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது பயன்படுத்தப்படும். அதே போல, எலும்பு மஜ்ஜை நோய், எலும்பு புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும்.இது போன்று மேற்கொள்ளப்பட்டுள்ள எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகள் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. எலும்புகள் வங்கி துவக்கப்பட்ட பின் இதுவரை ஒன்பது பேர் மட்டுமே உறுப்பு தானம் வழங்கி உள்ளனர். அவர்களில் ஆறு பேர் ஆண்கள்; மூவர் பெண்கள். இவர்களிடம் இருந்து தானம் பெறப்பட்ட எலும்புகள் மூலம், 250 நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர். எலும்புகளை தானம் கொடுப்பதால், இறந்தவரின் உடல் பார்ப்பதற்கு அருவெறுப்பான தோற்றத்தில் காணப்படும் என்ற தவறான எண்ணமும், மக்கள் மத்தியில் உள்ளது. எலும்புகளை தானமாக எடுக்கும் போது, எலும்புகள் எடுக்கப்பட்ட இடத்தில், அவற்றுக்கு பதிலாக கட்டைகள், சிந்தடிக் கம்பளி போன்றவற்றை பயன்படுத்தி, எலும்புகள் இருந்த இடங்கள் அடைக் கப்பட்டு விடும். உடலை பெற்றுச் செல்லும் போது, எலும்புகள் எடுக்கப்பட்ட பகுதிகளில், தையல் போடப்பட்டு இருப்பது மட்டுமே தெரியும்."ஆனால், எலும்புகள் தானம் கொடுத்தால், உடல் துண்டு துண்டாகத் தான் கிடைக்கும் என்ற தவறான எண்ணம் கொண்டுள்ளனர் அப்பாவி மக்கள்' என்று வருத்தப்படுகிறார், எலும்பு வங்கியை துவக்கிய மல்கோத்ரா.

Read more...

மனித உடல் மதிப்பு மிக்கதே!

19 August 2009


மனித உடலுக்கு மதிப்பு இருக்கிறதா ?

இந்தக் கேள்விக்கு "இருக்கிறது " என்றும் உயிர் போனபின் உடலுக்கு ஏது மதிப்பு என்றும் இருவகையான ப்தில்களை நாம் பெற இயலும். இறந்தபின் அனைத்து உடல்களும் அடக்கப்பட வேண்டியதுதான்.

என்வே அதற்கு மதிப்பில்லை என்ற சிலரின் வாதம் ஒரு புறமிருக்க, இறந்த சில நிமிடங்களுக்குள் இறந்தவரின் சில உறுப்புகளை எடுத்து அதை மற்றவருக்கு பொருத்துவதன் மூலம் அது கதிப்படைகிறது என்ற வாதத்தையும் ஒதுக்க இயலாது. குறிப்பாக கண்களை இவ்வாறு தரலாம் என்பது அறிந்த ஒன்றே!

நவீன மருத்துவமானது மூளை மற்றும் இதயம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகளைக்கூட தேவைக்கு ஏற்ப இறந்தவரின் உடலில் இருந்து எடுத்து பயன்படுத்திட முயன்று வருகிறது.மேலும் ஒருவன் இறப்பதற்கு முன்பேகூட சிறுநீரகங்களில் ஒன்றை தேவைப்படும் மற்றவருக்கு தந்து மதிப்பு மிக்கதாக ஆக்கலாம்.

நமது உடலில் சுரக்கும் இரத்தம்கூட இரத்ததானம் செய்யப்படுவதன் மூலம் பல்வேறு சமயங்களில் மற்றவர்களின் உயிர் காக்க உதவுகிறதுதானே. இன்னும் சொல்லப் போனால் ஒவ்வொறு மனிதனின் உடலில் உள்ள சில உலோக , அலோகபொருள்களுக்கு (அதாவது இரசாயானப் பொருள்கள் ) விளைகள் நிர்ணயித்து பட்டியலிட்டாலும் மதிப்புதான் பெருகிறதே தவிற வேறில்லை.

ஆகவே மனித உடல் ( இறப்புக்கு முன்பும் பின்பும் ) அவனுக்கும் பயன் தந்து தேவைக்கேற்ப மற்றவருக்கும் உதவுவதால் அது மதிப்பு மிக்கது என்பதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். இத்தகைய மதிப்பு மிக்க உடலை தந்து இறுதிகாலம்வரை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள வேண்டும் என்ற நியதியை மட்டும் மனிதர்களில் சிலர் மதிப்பதே இல்லை என்பதுதான் நிதர்சனமாகும்!

தகுந்த உடல் உழைப்பு, தேவைக்கேற்ப ஒய்வு மற்றும் உறக்கம், சரியான நேரத்தில் அளவான உணவு ஆகிய எதையும் முறையாகச் செய்யாமல் பரபரப்பாக இயங்கிக் கொள்ளும் இன்றைய மனிதர்கள் தெரிந்தோ தெரியாமலோ தமது ஆரோக்கியத்தோடு விளையாடுபவர்களாகிறார்கள்.

வேறு சிலரோ கண்ட, கண்ட பழக்க வழக்கங்களுக்கு அடிமையாகி தெரிந்தே தனது மதிப்பு மிக்க உடலை சிதைத்து வருகின்றனர். இவ்வாறு தனது உடல் நலன்பற்றி எண்ணாமல் ஆரோக்கித்திற்கு எதிராக செயல்படும் ஒவ்வொரு மனிதனும் தனக்குத்தானே தீங்கு செய்பவனாகிறான்.

தங்களது உடல்நலம் பற்றி கவலைப்படாமல் இருக்கும் சிலரால் மற்றவர்களுக்கு ஏதும் தீதில்லைதான். ஆனால் புகைபிடிப்பது முதல் மது குடிப்பது வரையிலான சில தனி மனிதத் தீமைகள் அவனுடைய ஆரோக்கியத்தை பாதிப்பதோடு மட்டும் நின்று விடுவதில்லை.

அவைகளினால் அதாவது தனக்குத்தானே செய்து கொள்ளும் இத்தகைய தீமைகளினால் மற்றவர்களும் பாதிக்கப் படும்போது அது சமூக பிரச்சனையாகி விடுகிறது. புகைப் பிடிப்பவர்கள் விடும் நச்சுக்காற்று இந்தப் புவியில் பரவி அருகில் இருப்பவர்களையும் பாதிக்கிறது.

அதேபோல் குடித்துவிட்டு கும்மாளம் போடும் ஒருவனால் குடும்பத்தினர் பாதிக்கப் படுவதும் இந்த வகையைச் சேர்ந்ததுதான். ஆக தனது மதிப்பு மிக்க உடலுக்கு ஒருவனால் வைக்கப்படும் உலை மற்றவர்களின் ஆரோக்கியத்தையும் மகிழ்ச்சியையும் கெடுப்பதாக அமைந்து விடுகிறது.

இத்தகைய தனிமனித செயல்கள் தீதுதான் என்றாலும் நாம் விவரிக்கவிருப்பது
வேறுவகையான தீமைப் பற்றியே. மனிதன் தனது இனத்திற்கோ அல்லது சமுதாயத்திற்கோ செய்துவரும் தீமைகளில் முக்கியமான அதைப்பற்றி அடுத்து நாம் அலசுவோம்.

தீமைகள் அகலும் ..... இன்ஷா அல்லாஹ்

*********************************
படித்துவிடீர்களா?

ஒடுக்கப் பட்டோரின் உரிமைக்குரல் உணர்வு வாரஇதழ்
ஒரிறைக் கொள்கை விளக்க மாத இதழ் ஏகத்துவம்.
மகளீர் மாத இதழ் தீன்குலப் பெண்மனி




Read more...

தீமைகள் களைந்திட தீவிரம் காட்டுவோம்

13 August 2009

ஒரு மனிதன் சந்திக்கும் தீய நிகழ்வுகளுக்கோ அல்லது நல்ல நிகழ்கவுகளுக்கோ (பெரும்பாலும் ) அவனே காரணமாகிறானே தவிற மற்றவர்கள் அல்ல .

தீமையென்றாலும் தீதென்றாலும் அவை பாவம் என்ற ஒரே பொருள் தரக்கூடிய சொற்களாகத்தான் பார்க்கப் படுகின்றன. தீமைகள் செய்யாதிருப்பதும் கூட நன்மைதான். ஆனால் நன்மைகள் செய்யாதிருக்கும் ஒருவரை தீயவரென்று அவ்வளவு எளிதில் கூறிவிட முடியாது.

மனிதர்கள் செய்கின்ற பாவங்களை அல்லது தீமைகளைப் பொறுத்தவரை பின் வரும் மூன்று தலைப்புகளாக அவற்றை வகைப்படுத்தலாம் என்கிறார்கள் சமூக ஆர்வளர்கள். அவைகளில் முதல் இரண்டு எவைகளெனில் மனிதன் இறைவனுக்குச் செய்யும் தீமைகள் மற்றும் மனிதன் (மற்ற) மனிதனுக்குச் செய்யும் தீமைகள் என்பனவாகும். இது வல்லாமல் மூன்றாவதாக நாம் கூறவருவது மனிதன் மற்ற உயிரினங்களுக்கோ அல்லது தாவரங்களுக்கோ செய்யும் தீமைகளாகும். இந்தத் தீதும்கூட பாவம்தான் என்றாலும் இந்த மூன்றாவது வகைச் செயல்கள் மனிதர்களிடையே அவ்வளவாக பேசப்படுவதில்லை. ஒரு வேளை மனிதத் தீமைகளினால் பாதிக்கப்படும் விலங்குகள் மற்ற உயிரினங்கள் தங்களுக்குள் இதைப்பற்றி பேசிக் கொள்கின்றனவா எனபதும் படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரிந்த ( மனிதர்களுக்கு தெரியாத ) ஒன்றுதான்.


Image Ref: 12-54-3 - English Country Garden, Viewed 11182 times Image Ref: 12-54-73 - English Country Garden, Viewed 5638 times Image Ref: 12-54-53 - English Country Garden, Viewed 13695 times Image Ref: 12-04-9 - Plant Pots, Viewed 7682 times Image Ref: 12-04-6 - English Country Garden, Viewed 7803 times


Heading Home - Aryshire cattle Heading Home - Aryshire cattle




தாவரங்கள் உள்ளிட்டவைகளுக்கு கூட உயிர் இருக்கிறது என்று கூறப்படும் இந்த விஞ்ஞான யுகத்தில் ஒன்றை நினைவில் கொள்வது பொருத்தம் என எண்ணுகிறோம். உண்ண அனுமதிக்கப்பட்ட உயிரினங்களையோ அல்லது தாவர வகைகளையோ சமைத்து உன்பது இங்கே பாவமாக கருதப்பட மாட்டாது. அதே நேரத்தில், தான் பராமரிக்கும் ஒரு தாவரச் செடிக்கு உரிய நேரத்தில் தண்ணீர் ஊற்றாமலோ அல்லது தனது வளர்ப்பு பிராணிகளுக்கு வேளாவேளைக்கு உணவு தராமலோ இருந்தால் அது தீதில்லாமல் வேரில்லைதானே ?. இதைத்தான் கொண்றால் பாவம் தின்றால் தீரும் என்கிற பழமொழியும் உணர்த்துகிறது. பிற உயிரினங்களுக்கோ அல்லது தாவரங்களுக்கோ செய்யப்படும் துன்புறுத்தல்களில் எவையெல்லாம் பாவங்கள் என்பதை அளவிடுவதில் ஒவ்வொறு சமூகத்தவருக்கும் வெவ்வேறு கருத்து வேறுபாடுகள் காணப்படுகின்றன.

எனவேதான் இந்த மூன்றாவது வகை செயல்களை நா(மு)ம் அவ்வளவாக இத்தொடரில் கண்டு கொள்ளப்போவதில்லை.

நாம் இங்கே விவாதிக்கவிருக்கும் பாவங்கள் அல்லது தீமைகள் இரண்டாவது வகையைச் சார்ந்ததாகும். ஆம்! மனிதன் மனிதனுக்கே செய்யும் தீதைத்தான் இத்தொடரில் அலசவிருக்கிறோம்.

இந்த இரண்டாவது வகை தீமையையும் இரண்டு வகைப்படுத்தலாம் என்கின்றனர் அறிஞர் பெருமக்கள். அதாவது மனிதன் தனக்குத்தானே செய்துகொள்ளும் தீமை முதல் வகை. என்றும் தனது இனத்திற்கோ அல்லது சமுதாயத்திற்கோ செய்யும் தீது இரண்டாம் வகை என்றும் கூறுகிறனர் அவர்கள்.

என்னது ? ஒரு மனிதன் தனக்குத்தானே தீமை செய்து கொள்வானா ? புறியவில்லையே" என எண்ணுபவர்கள் அடுத்த அத்தியாயம்வரை காத்திருங்கத்தான் வேண்டும்.
மர்யம் செல்வன் M.A
தீமைகள் அகலும் ..... இன்ஷா அல்லாஹ்
**********************************************
ஒடுக்கப் பட்டோரின் உரிமைக்குரல்உணர்வு வாரஇதழ்
ஒரிறைக் கொள்கை விளக்க மாத இதழ் ஏகத்துவம்.
மகளீர் மாத இதழ் தீன்குலப் பெண்மனி


Read more...

பராஅத்தும் மத்ஹபுகளும்

29 July 2009

இதைப் படித்துவிட்டு கீழே உள்ளதையும் படியுங்கள்

ஐக்கிய அரபு அமீரகம் அபுதாபியில் 'ஷஃபே பராஅத்' எனும் புனித இரவு சிறப்பு நிகழ்ச்சி நாளை (ஆகஸ்ட் 5) மாலை நஜ்தா ரோடு, ரெட் டேக் பில்டிங், பிளாட் நம்பர் 304, ETA HRD ஹாலில் நடைபெறுகிறது.

ஷஃபான் மாதம் பிறை 15ம் தேதி புனித இரவாகும். இவ்விரவின் சிறப்புப்பற்றி காயல்பட்டினம் ஹாபிழ் ஹுஸைன் மக்கி ஆலிம் உரை நிகழத்துகிறார்.

பெண்களுக்கு தனி இட வசதி செய்யப்பட்டுள்ளதாக இந்த
நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டை செய்துள்ள இந்தியன் முஸ்லிம் பேரவை கூறியுள்ளது.

துபாயில் ஈமான் அமைப்பு சார்பில்...

அதே போல துபாய் ஈமான் அமைப்பு சார்பில் நாளை மாலை தெய்ரா லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜிதில் (குவைத் ப‌ள்ளி) ப‌ராஅத் இர‌வு சிற‌ப்பு நிக‌ழ்ச்சி ந‌டைபெற‌ உள்ள‌து.

லூத்தா ஜாமிஆ ம‌ஸ்ஜித் இமாம் ம‌வ்ல‌வி எம்.ஏ. காஜா முஹ‌ம்ம‌து ஜ‌மாலி ம‌க்கி ம‌ன்ப‌ஈ, ம‌வ்ல‌வி ஏ.எஸ். முத்து அஹ்ம‌து ஆலிம் ம‌ஹ்ள‌ரி உள்ளிட்டோர் சிற‌ப்புரை நிக‌ழ்த்த‌ உள்ள‌ன‌ர்.

மேல‌திக‌ விப‌ர‌ங்க‌ளுக்கு: காய‌ல் ய‌ஹ்யா முஹ்யித்தீன், விழாக்குழு செய‌லாள‌ர் 050 5853 888
மின்ன‌ஞ்ச‌ல்: yahyatsa@hotmail.com



நம்முடைய இஸ்லாமிய சமுதாயத்தவர்களுக்கு மத்தியில் ஒவ்வொரு மாதமும் நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத ஏதாவது ஒரு புதுப் புது காரியங்கள் , வழிபாடுகள் நிறைந்து காணப்படுகிறது. அப்படிப்பட்ட நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களில் உள்ளதுதான் ஷஅபான் மாதம் 15 ஆம் பிறை இரவில் மூன்று யாசீன்கள் ஓதுவதும், அன்று இரவில் நின்று வணங்குவதும்., அன்றைய பகற்பொழுதில் நோன்பு வைப்பதும் ஆகும்.

இப்படிப்பட்ட காரியங்களை செய்யக்கூடிய இவர்கள் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு வழிகாட்டியிருக்கிறார்களா? அல்லது இவ்வாறு செய்யுமாறு கட்டளையிட்டிருக்கிறார்களா? என்று சிந்தித்துப் பார்ப்பது கிடையாது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ” நம்முடைய மார்க்கத்தில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகிறானோ அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : புகாரி (2697)

மற்றொரு ஹதீஸில் வருகிறது

நபி (ஸல்) அவர்கள் : ” என் சமுதயாத்தில் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர.” என்று கூறினார்கள். மக்கள் ” அல்லாஹ்வின் தூதரே ஏற்க மறுத்தவன் யார்? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ” எனக்கு கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்.எனக்கு மாறு செய்தவர் (சத்தயத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்.” என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ ஹ‎ýரைரா (ரலி) நூல் : புகாரி (7280)

நபி (ஸல்) அவர்களால் காட்டித்தரப்படாத காரியங்களை நன்மை என்று எண்ணி நாம் செய்தாலும் அது அல்லாஹ்வால் ஏற்றுக் கொள்ளப்படாது என்பதையும், அவ்வாறு செய்பவர்கள் நபியவர்களுக்கு மாறுசெய்தவர்கள், நரகவாசிகள் என்பதையும் மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடிகிறது.

அன்பிற்குரிய பெரியோர்களே தாய்மார்களே சற்று சிந்தித்துப் பாருங்கள் ” பராஅத் இரவு” என்ற பெயரில் மூன்று யாசீன்கள் ஓதுகிறீர்களே இவ்வாறு நபி (ஸல்) செய்தார்கள் என்பதற்கு ஒரே ஒரு ஆதாரப் பூர்வமான ஹதீஸாவது இருக்கின்றதா? அல்லது ஸஹாபாக்கள் இவ்வாறு செய்திருக்கிறார்களா? அல்லது மத்ஹபு இமாம்கள் என்று கூறுகின்றீர்களே அந்த நான்கு இமாம்களாவது இவ்வாறு செய்திருக்கிறார்கள் என்று உங்களால் கூறமுடியுமா? நிச்சயமாக ஒருபோதும் அவ்வாறு உங்களால் கூறமுடியாது. வேறு எந்த ஆதாரங்களின் அடிப்படையில் இவ்வாறு செய்கிறீர்கள். சற்று சிந்தித்துப் பாருங்கள்,

மேலும் ”பராஅத் இரவு” என்பதற்கு அரபியில் ”லைலத்துல் பராஅத்” என்று கூறப்படும். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய வாழ்நாளில் இப்படி வார்த்தையைக் கூட கூறியது கிடையாது. இவையெல்லாம் நபியவர்களுக்குப் பின் உருவாக்கப்பட்ட வழிகேடுகளாகும்.

மேலும் பிறை பதினைந்தாம் நாள் அன்று மட்டும் சிறப்பாக நீங்கள் ” பராஅத் நோன்பு” என்று வைக்கிறீர்களே இதையாவது நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்கள் என்று உங்களால் , காட்ட முடியுமா?நிச்சயமாக முடியாது . மாறாக இதற்கு மாற்றமாக ஒவ்வொரு மாதமும் வழமையாக நோன்பு வைப்பவர்களைத் தவிர வேறு யாரும் அன்றைய தினத்திலிருந்து நோன்பு நோற்கக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இவ்வாறு நீங்கள் ஏற்றுள்ள மத்ஹப நூல்களிலேயே கூறப்பட்டுள்ளது. ஷாஃபி மத்ஹப் நூலான இஆனதுத் தாலிபீன் என்ற நூலில் கூறப்பட்டிருப்பதைப் பாருங்கள்

وكذلك يحرم الصوم بعد نصف شعبان لما صح من قوله صلى الله عليه وسلم إذا انتصف شعبان فلا تصوموا ( إعانة الطالبين ج: 2 ص: 273)

ஷஅபான் பாதிக்குப் பிறகு நோன்பு நோற்பது ஹராம் ஆகும். ஏனென்றால் ” ஷஅபான் பாதியயை அடைந்து விட்டால் நோன்பு நோற்காதீர்கள்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஸஹீஹான ஹதீஸில் வந்துள்ளது. (நூல் : இஆனா பாகம் : 2 பக்கம் : 273)

மத்ஹபைப் பின்பற்றுபவர்கள்தான் பள்ளிவாசலுக்குத் தொழவரவேண்டும் என்று ஒவ்வொரு பள்ளியிலும் போடு மாட்டி வைத்துள்ளிர்களே நீங்கள் உங்கள் மத்ஹபிலேயே ஹராம் எனக் கூறப்பட்ட ஒரு காரியத்தை எப்படிச் செய்கிறீர்கள். இவ்வாறு மத்ஹப் நூற்களில் உள்ளது உண்மைதானா? என்று உங்களுடைய ஆலிம் பெருமக்களிடம் கேட்டுப்பாருங்கள். உண்மையை நிலையை உணர்வீர்கள்.

ومن البدع المذمومة التي يأثم فاعلها ويجب على ولاة الأمر منع فاعلها صلاة الرغائب اثنتا عشرة ركعة بين العشاءين ليلة أول جمعة من رجب وصلاة ليلة نصف شعبان مائة ركعة (إعانة الطالبين ج: 1 ص: 270)

ரஜப் மாத்தின் முதல் வெள்ளிக் கிழமை இரவில் மஃரிப் , இஷாவிற்கு மத்தியில் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுவதும். ஷஅபான் பதினைந்தாம் இரவில் நூறு இரக்அத்துகள் சிறப்பாக தொழுவதும் பழிக்கப்படவேண்டிய பித்அத்துகளாகும். அவ்வாறு தொழுபவன் பாவியாவான். இதை செய்பவனை தடுப்பது ஆட்சியாளர்கள் மீது கடமையாகும். (ஷாஃபி மத்ஹப் நூல் : இஆனா பாகம் : 1 பக்கம் : 270 )

فائدة أما الصلاة المعروفة ليلة الرغائب ونصف شعبان ويوم عاشوراء فبدعة قبيحة وأحاديثها موضوعة (فتح المعين ج: 1 ص: 270)

(ரஜப் மாதத்தின்) குறிப்பிட்ட ஒரு இரவிலும், ஷஅபான் பதினைந்தாம் இரவிலும் , ஆஷுரா உடைய நாளிலும் தொழப்படும் குறிப்பிட்ட தொழுகைகள் மோசமான பித்அத்களாகும். அவைகளைப் பற்றி வரக்கூடிய ஹதீஸ்கள் இட்டுக் கட்டப்பட்டவையாகும் (ஷாஃபி மத்ஹப் நூல் : ஃபத் ஹுல் முயீன் பாகம் : 1 பக்கம் : 270 )

وإسراج السرج الكثيرة في السكك والأسواق ليلة البراءة بدعة وكذا في المساجد (البحر الرائق ج: 5 ص: 232)

பராஅத் இரவில் தெருக்களிலும், கடைவீதிகளிலும், அவ்வாறே பள்ளிவாசல்களிலும் அதிகமான விளக்குகளை எரிய வைப்பது பித்அத்தான காரியமாகும். (ஹனபி மத்ஹப் நூல் அல் பஹ்ருர் ராயிக் பாகம் : 5 பக்கம் : 232)
அன்பிற்குரிய இஸ்லாமிய பெருமக்களே உங்களுடைய ஆலிம்கள் எந்த மத்ஹபை பின்பற்ற வேண்டும் என் உங்களுக்குப் போதிக்கிறார்களோடு அந்த மத்ஹப் கிரந்தங்களில்தான் நாங்கள் எடுத்துக்காட்டிய மேற்கண்ட கருத்துக்கள் இடம்பெற்றுள்ளது. இதனை என்றைக்காவது உங்களுடைய ஆலிம் பெருமக்கள் உங்களுக்கு எடுத்துக் கூறியுள்ளார்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மத்ஹப் நூற்களிலேயே செய்யக் கூடாது . பித்அத், தடுக்கப்படவேண்டிய மோசமான காரியம் என்று கூறப்பட்ட விஷயங்களைத்தான் உங்களோடு சேரந்து உங்களுடைய ஆலிம் பெருமக்கள் செய்து கொண்டிருக்கிறார்கள். இதிலிருந்தே இவர்கள் மார்க்கத்தை மட்டுமல்ல மத்ஹபையும் சேர்த்தே மறைக்கிறார்கள் என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

குறிப்பு: இந்த கட்டுரை ஷாஃபான் மாதத்தில் TNTJ கிளைகளில் நோட்டிஸாக அடித்து வெளியிடுவதற்காக தயாரிக்கப்பட்டது!


Read more...

இன்று நம் சந்திக்கும் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று மொபைல்.........

கடந்த சில நாட்களுக்கு முன்பு தினமலர் செய்தி தாளில் ஒரு செய்தியை படித்தருப்பீர்கள். சில வக்கிரம் எண்ணம் கொண்டவர்கள். தன்னுடன் பழகிய, படித்த, பணி புரிந்த பெண்களை வக்கிரமாக மொபைல் போனில் படம் பிடித்து நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள அது பரவி சம்பந்தப்பட்ட சில பெண்கள் தற்கொலை செய்து கொள்ளும் துயர சம்பவமும் நடந்ததது.

இது போன்ற சம்பவம் எனது காவல் நிலையத்திலும் நடந்ததால் இந்த பதிவை எழுதுகிறேன். கடந்த சில நாட்களுக்குமுன்பு இரவு பணி செய்து கொண்டிருந்த போது ஒரு 16 வயது மதிக்கத்தக்க ஒருவன் சந்தேகப்படும்படி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்ததாக சக அலுவலர் அழைத்து வந்தார். அவரை சோதனையி்ட்ட போது அவர் வைத்திருந்த போன் விலை உயர்ந்ததாக இருக்க சரி பார்க்கலாம் என்று அந்த போனை நோண்டி கொண்டிருந்தேன். அதில் சில வீடியோக்களும் இருக்க பார்த்தால் அத்தனையும் குடும்ப பெண்கள். வீடு கூட்டும் போது, துவைக்கும் போது உடை மாற்றும் போது, குளிக்கும் போது இதை விடக் கொடுமை ஒரு தாய் தன் குழந்தைக்கு பால் ஊட்டும் போது அந்த வீடியோக்கள் எடுக்கப்பட்டிருந்தது.

பிறகு அவனை அழைத்து "உரிய" முறையில் விசாரிக்க அவர்கள் தன் வீட்டின் அருகில் வசிப்பவர்கள் என்றும் தான் விளையாட்டாய் எடுத்ததாகவும் கூறினான். பிறகு அடுத்த நாள் காலை வரை வைத்திருந்து அவனது தந்தைக்கு போன் செய்து வரச் சொல்லி, வீடியோவில் சம்மந்தப்பட்டவர்களையும் வரச் சொல்லி இது குறித்து கூற அவர்கள் அனைவரும் அவன் இப்படி செய்வான் என்று எதிர்பார்க்கவில்லை என்றும் தங்களின் வீட்டருகே பல வருடங்களாக குடியிருப்பதாகவும் சிறு வயதிலிருந்தே அவனை தெரியும் என்பதால் தாங்கள் அவனை சந்தேக படவில்லை என்றும் புகார் அளித்தால் தங்கள் பெயரும் கெட்டுவிடும் என்று கூறியதால் அவனது தந்தையை அழைத்து எச்சரித்து எனக்கு தெரிந்த மொபைல் கடையில் அவனது மொபைல் ஐ கொடுத்து பிளாஷ் செய்து அவனது மெமரி கார்டை அவர்கள் முன்னிலையிலேயே உடைத்து. விட்டேன்.

பெண்களுக்கு : உங்கள் நெருங்கிய தோழியாக இருந்தாலும் உங்களை அரைகுறை ஆடையுடன் படம் எடுக்க அனுமதிக்க வேண்டாம் ( விளையாட்டாக இருந்தாலும் கூட ) ஏனென்றால் தோழி என்றும் உங்களுக்கு தோழியாக இருக்க போவதில்லை சின்னப்பிரச்சினை வந்தாலும் உங்களின் நிலை ?

இன்னொரு பிரச்சினை பெண்களுக்கு ( ஆண்களுக்கும் கூட ) வரும் மொபைல் அழைப்புகள் முடிந்தவரை உங்களுக்கு தெரியாத எண்களில் அழைப்புகள் வந்தால் அட்டன் செய்ய வேண்டாம். இரண்டு முறை முன்று முறை அழைப்புகள் வந்தால் அருகில் உள்ள ஆண் நண்பர்கள் அல்லது உறவினர்களிடம் கொடுத்து பேச செய்யுங்கள் தெரிந்தவர்கள் என்றால் வாங்கி பேசுங்கள்.

மற்றொன்று நீங்கள் உங்கள் காதலனிடமே அல்லது காதலியிடமோ ( அல்லது மற்றவரிடமோ) மொபைலில் பேசும் எதிர் முனை பீப்... பீப்...பீப்... என்ற ஒலி கேட்கிறதா என்று பாருங்கள் அப்படி ஒரு ஒலி கேட்டால் உங்கள் பேச்சுக்கள் ரெக்கார்டு செய்யப்படுகிறது என்று அர்த்தம். முடிந்தவரை அப்போதே உங்கள் தொடர்பை துண்டியுங்கள்.

பேசும் போது சரி தெரியாதவர்களிடமிருந்து எஸ்எம்.எஸ் வந்தால் ? கண்டு கொள்ளாதீர்கள். திரும்ப நீங்கள் Who are You ? / Who is This ? / Your Name Pls என்று எஸ்எம்.எஸ் அனுப்ப ஆரம்பித்தால் அங்கு ஆரம்பிக்கும் சனி. எஸ்எம்.எஸ் அனுப்பியவன் உங்களின் பதிலால் உற்ச்சாகமாகி உங்களிடம் பேச்சை வளர்ப்பான். உங்களிடம் உரிய பதில் இல்லை என்றால் மறுபடி எஸ்எம்.எஸ் வராது. அப்படி மீறி எஸ்எம்.எஸ் ஓ தேவையில்லாத அழைப்புகள் வந்தால் தாராளமாக உங்களுக்கு அருகில் உள்ள காவல் நிலையத்தில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம். ( தமிழ் நாடு காவல் நிலைய தொலைபேசி எண்கள் )

ஒன்றை புரிந்து கொள்ளுங்கள் காவல் துறைச் சேர்ந்தவர்கள் அனைவரும் மோசமானவர்கள் அல்ல. தாராளமாக புகார் தெரிவிக்கலாம். உங்களை பாதிக்கும் என்றால் உங்களை பற்றிய விபரங்கள் ரகசியமாக வைப்பார்கள். எங்களுக்கும் நண்பர்கள், குடும்பம், உறவினர்கள் உண்டு.

மேற்கண்ட பிரச்சினைகளை தவிர்க்க :

  1. பெண்கள் முடிந்தவரை கணவனோ, காதலனோ தன்னை ஆபாசமாக படம் எடுப்பதை அனுமதிக்கூடாது.
  2. முடிந்தவரை தனது மொபைல் எண்களை அவசியம் ஏற்பட்டாலன்றி யாருக்கும் அளிக்க வேண்டாம்.
  3. முடிந்தவரை ஈஸி ரீச்சார்ஜ் ஐ பயன் படுத்தாதீர்கள் ( ஒரு கடையில் பெண்களின் எண்களை மட்டும் தனியாக குறித்து அவர்களுக்கு கடை பையன் எஸ்.எம்.எஸ் அனுப்பி பெண்கள் பாதிக்கப்பட்டதனால் இந்த குறிப்பு )
  4. வீடு மற்றும் பொது இடங்களில் தங்களின் உடலை வெளிப்படுத்தும் வண்ண்ம் உடை அணிய வேண்டாம்.

என்னடா எல்லாம் பெண்களுக்கே அட்வைஸ் பண்றானே நமக்கில்லையா என்று யோசிக்கும் ஆண் நண்பர்களுக்கு...

முடிந்தவரை உங்கள் பிள்ளைகளுக்கு கேமிரா, புளுடுத் இல்லாத மொபைல்களை வாங்கி கொடுங்கள். மொபைல் என்பத நாம் அவர்களை தொடர்பு கொள்வதற்காக மட்டுமே இருக்கட்டும்.

அப்புறம் ஒன்னு. நம்மளையெல்லம் அரைகுறையா போட்டோ எடுத்து எவன் பாக்கறது. முடிந்தவரை உங்கள் உறவினர்கள், பெண் தோழிகளுக்கு மொபைல் போனால் ஏற்படும் விபரீதங்களை எடுத்து சொல்லுங்கள்.

மெயிலில் வந்தது.

Read more...

நியாயம்தான் சட்டம்

15 May 2009


உலகில் ஒருவர் எந்த நாட்டவராக இருந்தாலும், எந்த மதத்தவராக இருந்தாலும், எந்த இனத்தவராக இருந்தாலும் அவருக்கு, அவருடைய நாட்டில் என்னென்ன உரிமைகள் உண்டோ அத்தனை உரிமைகளையும் வழங்கும் ஒரே நாடு நமது இந்தியா தான்.
இதன் அடிப்படையில் இந்தியக் குடிமகன் அல்லது குடிமகள் என்பதற்காக நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும். ஆனால் நமது ஒட்டுமொத்த மக்கள் தொகையில் ஒரு சதவிகிதமாவது பெருமைப்படுவார்களா? என்பது சந்தேகமே. காரணம் ஒவ்வொரு மதத்திற்கும் எனத் தனித்தனியாகச் சட்டம் இருந்தாலும் கூட அது பற்றிய விழிப்புணர்வு இன்மையே.
நாமெல்லாம் சட்டப்படி தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ஆனால் சட்டம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று சொன்னால் உங்களால் நம்ப இயலாது. ஆனால் அது உண்மை. ஆம்! சட்டப்படி வாழ்வதால்தான் ""வெளியில் இருக்கிறோம்'' இல்லையென்றால் ""சிறையில்தானே இருப்போம்?''
சட்டம் தெரியாமலே சட்டப்படி வாழ்ந்து வரும் நமக்கு, சட்டத்தைத் தெரிந்து கொள்வதில் என்ன சிரமம் இருக்க முடியும்? ஒன்றுமே இல்லை என்பது தான் எனது ஆணித்தரமான கருத்து.
நாட்டில் நடக்கும் அத்தனை செயல்களும் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக உருவாக்கப்பட்ட ஒரு வரையறைதான் "சட்டம்'.
எனவே, சட்டத்தில் ஆயிரத்தெட்டு ஓட்டை என்பதெல்லாம் அதை கையாள்பவர்களின் கையாலாகாத்தனமே தவிர சட்டத்தின் தன்மையல்ல.
நாம் முன்னரே படித்தவாறு சட்டம் என்பது எல்லாம் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பதற்காக யார், யார் எப்படிச் செயல்பட வேண்டும் என எழுதப்பட்ட அதிகார வரையறை தொகுப்பே. இந்த அதிகாரத்தை எவர் ஒருவர் தவறாகப் பயன்படுத்தினாலும் சட்டம் ஒன்றும் செய்யாது. செய்யவும் முடியாது. காரணம் அது எழுத்து மூலமான ஓர் அறிவுறுத்தல் தொகுப்புத்தானே தவிர, நம்மைப்போல் வாய் உள்ள நபர் அல்ல என்பதை முதலில் நாம் நன்றாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
நாட்டில் எந்த விதத்திலும் யார் பெரிய ஆள் என்று கேட்டால், நமது நாட்டின் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் முதல் வறுமை கோட்டிற்குக் கீழ் உள்ள குடிமகன் வரை ஒவ்வாருவரும் ஒவ்வொரு விதத்தில் பெரியாளாக இருப்பார்கள். ஆனால் இவர்கள் எல்லாருமே ஒன்றுக்குக் கட்டுப்பட்டவர்கள் என்றால், அது சட்டத்துக்கு மட்டும் தான்.
சட்டம் என்பது நாம் நினைப்பது போல் மிகவும் கடினமான ஒன்றல்ல. எளிமையான விஷயமே. சட்ட விழிப்புணர்வு பெற இருக்கிற சட்டங்களை எல்லாம் கரைத்துக் குடிக்க வேண்டும் என்ற அவசியமில்லை.
நமது உடம்பில் எப்படி ஐம்புலன்கள் முக்கியமோ அதுபோல, நாட்டில் நாம் நல்ல முறையில் வாழ வேண்டும் என்றால், இந்திய அரசமைப்பு, இந்திய சாட்சிய சட்டம், இந்திய தண்டனைச் சட்டம், குற்ற விசாரணை முறை விதிகள், உரிமையியல் விசாரணை முறை விதிகள் என்ற இந்த 5 சட்டங்கள் மிகமிக முக்கியம்.
இந்திய அரசமைப்புதான் இந்தியாவின் தலையாய சட்டம். இதில் சொல்லப்பட்டுள்ளபடிதான் நாடு இயங்க வேண்டும். நாட்டில் உள்ள குடிமக்கள் தங்களின் அடிப்படை உரிமைகள் முதல் அனைத்து விதமான உரிமைகளை நிலைநாட்டிக் கொள்வதோடு தமக்கென விதிக்கப்பட்டுள்ள கடமைகளை ஆற்ற வேண்டும்.
இதில் என்ன விசித்திரம் என்றால், சட்ட விழிப்புணர்வு இல்லாதவர்கள் கூட உரிமையை நிலைநாட்டிக் கொள்வதில் கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஆனால் கடமையைச் செய்வதில் கண்டும் காணாமலும் இருக்கின்றனர்.
உரிமையை நிலைநாட்டுவதில் கண்ணும் கருத்துமாக இருந்தாலும் கூட அதற்காக வாழ்நாள் முழுவதும் போராட வேண்டியிருக்கிறது அல்லவா? இதற்கு என்ன காரணம்? யாருமே கடமையைச் செய்யாதுதான். ஒருவர் தான் ஆற்ற வேண்டிய கடமையை ஆற்றினால் மட்டும்தானே அதன் மூலமாக பல பேருக்கு கிடைக்க வேண்டிய உரிமை பலனாகக் கிடைக்கும். எல்லோருமே உரிமைக்காகப் போராடிக் கொண்டிருந்தால் உரிமை எப்படிக் கிடைக்கும்?
சாதாரண ஆவணம் முதல் சான்று ஆவணங்கள் வரை, ஆண்டி முதல் அரசன் வரையிலான சாட்சிகள் எவை எவை எத்தன்மை வாய்ந்தது என்று வகைப்படுத்தப்பட்டு நீதிமன்றங்கள் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதற்கான வழிகாட்டுதல்களை இந்திய சாட்சிய சட்டம் வழங்குகிறது.
இந்திய தண்டனைச் சட்டமோ, நாம் எதையெல்லாம் செய்யக் கூடாது, எதையெல்லாம் செய்ய வேண்டும், செய்யக்கூடாததை செய்தால் அது எந்த விதத்தில் குற்றமாகும்? செய்ய வேண்டியதை செய்யாமல் இருந்தால் அது எந்த விதத்தில் குற்றமாகும்? இவைகளுக்கு என்ன தண்டனை என்பதை விளக்குகிறது.
எந்த ஒரு சட்டத்தின் கீழும் தண்டிக்கத்தக்க குற்றம் நடக்கும் போது அதற்கான முதல் தகவல் அறிக்கை, புலனாய்வு, கைது, பிணை, விசாரணை, தண்டனை அல்லது விடுதலை ஆகியவை குறித்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து விளக்குவதே குற்ற விசாரணை முறை விதிகள்.
எந்த ஒரு சட்டத்தின் கீழ் நமது உரிமையைக் கோருவதாக இருந்தாலும், அதற்கு மனு தாக்கல், பதில் மனு தாக்கல், சாட்சிகள் விசாரணை, ஆவணங்கள் ஆய்வு, தீர்ப்புரை என அனைத்தும் எப்படிச் செயல்படுத்தப்பட வேண்டும் என அறிவுறுத்துவது உரிமையியல் விசாரணை விதிமுறைகள்.
இந்த ஐந்து சட்ட விஷயங்களை சாதாரணமாகத் தெரிந்து வைத்திருந்தாலே போதும். தப்பு தண்டா ஏதும் செய்து விடாமல் நல்ல முறையில் நமது வாழ்க்கையை கழித்துவிடலாம்.
ஒருவேளை தப்பு தண்டா ஏதும் செய்துவிட்டால்கூட அதற்காகப் பயப்படத் தேவையில்லை. நேராக நீதிமன்றம் சென்று ஒப்புக் கொண்டு விட்டால் "" முதல் குற்றம் என்ற காரணத்தால் அதிகபட்சம் மன்னிக்க வாய்ப்புண்டு அல்லது மிகக்குறைந்த தண்டனையே கொடுப்பார்கள். அத்தண்டனை நாம் நமது தவறுகளைச் சரி செய்து கொள்வதற்கு வழிகோலாக அமையும்''.
நாமே நேரடியாக நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொள்ள முடியுமா? என்று உங்களுக்கு ஒரு பெருத்த சந்தேகம் வரலாம். குற்றத்தை ஒப்புக் கொள்வதற்கு மட்டுமல்ல, நமது பிரச்னைக்காக "நாமே எந்த நீதிமன்றத்தில் வேண்டுமானாலும் வாதாடலாம்!''
நம் வழக்குக்காக நாமே வாதாடுவதற்கு எந்தவிதத் தடையும் கிடையாது. இனி விதிக்கவும் முடியாது. ஏன் தெரியுமா?
உங்களிடம் நான் தற்போது எதன் அடிப்படையில் பேசிக் கொண்டு இருக்கிறேனோ அதே அடிப்படையில் நீங்கள் நீதிபதிகளிடம் மட்டுமல்ல, யாரிடம் வேண்டுமானலும் உங்களின் நியாயத்துக்காக வாதாட முடியும். இப்படி வாதாடுவது உங்களின் அடிப்படை உரிமை.
அடிப்படை உரிமை என்றால் நமக்குத் தேவையானதை யாரிடமும் அனுமதி கேட்காமல் நாமே எடுத்துக் கொள்வதாகும்.
நீங்களே வாதாடும் போது முக்கியமாக செலவு கிடையாது. உங்களை எதிர் தரப்பினர் விலை கொடுத்து வாங்கமுடியாது என்பதால் ஏமாற வாய்ப்பில்லை. வழக்கு முடியும்வரை வேறு வேலை கிடையாது என்பதால், வாய்தா வாங்கமாட்டீர்கள். வழக்கு விரைவில் முடியும்.
வக்கீல்கள் நீதிமன்றப் புறக்கணிப்பை அடுத்து பல்வேறு தரப்பினரும் தாங்களே வாதாடி ஒரே நாளில் நிவாரணம் பெற்றனர்.
"நியாயம்தான் சட்டம். அதற்குத் தேவையில்லை வக்கீல் பட்டம்' என்ற கருத்தை ஆழமாக உணர்ந்து வாதாடியவர்களே, செலவில்லாமல், ஏமாறாமல், விரைவாக தனக்கான நீதியைப் பெற்றார்கள். இந்த நற்கொள்கை மிக்க உணர்வை ஏன் இந்தியக் குடிமகனாகிய நாம் ஒவ்வொருவரும் பின்பற்றக் கூடாது. கட்டாயம் பின்பற்ற வேண்டும்.
நமக்குள்ள அளவுகடந்த சுதந்திரம் அடுத்தவரின் சுதந்திரத்தை எந்த விதத்திலும் பாதித்து விடக்கூடாது என்பது மிகவும் முக்கியம். அப்படி பாதித்து விட்டால் அதுதான் "குற்றம்'.
அதேபோல தனக்கு இருக்கும் உரிமை அடுத்தவருக்கும் உண்டு என நினைக்க வேண்டும். அப்படி இல்லை என்று நினைக்கிற இடம்தான் "பிரச்னையின் ஆரம்பம்'.
குற்றம், பிரச்னை ஆகிய இரண்டும் முற்றிலுமாகக் களையப்பட வேண்டும். குடிமக்கள் அனைவரும் சண்டை, சச்சரவு இல்லாமல் நிம்மதியாக வாழ வேண்டும். உலகத்துக்கே வழிகாட்டியாக விளங்க வேண்டும்.

Read more...

கோடை காலம் தொடங்கி விட்டது.

04 April 2009

கோடை காலம் தொடங்கி விட்டது. அடுத்த 3 அல்லது 4 மாதங்களுக்கு வெயில் கடுமையாகக் கொளுத்தித் தீர்க்கும்.ஆண்டுதோறும் கோடை காலம் வந்தாலும், நாம் கோடையை எதிர்கொள்ளும் வழிமுறைகளை சில நேரங்களில் கடைபிடிக்கத் தவறி விடுகிறோம்.இதனால் பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்படக்கூடும்.கோடையை எதிர்கொள்ள இதோ சில எளிய யோசனைகள்:தண்ணீர் தேவையை விட அதிகமாக அருந்துங்கள். உடலில இருக்கும் தண்ணீர் வியர்வையாக அதிகம் வெளியேறும் என்பதால், தண்ணீர் அதிகமாக குடிப்பது உடல் சோர்வைத் தடுத்து புத்துணர்வை அளிக்கும்.கண்டிப்பாக மாலையிலோ அல்லது இரவிலோ ஒருமுறை குளிர்ந்த நீரில் குளியுங்கள். இதனால் தோலில் ஏற்படும் வெயில் பாதிப்பு நீங்கும். பகல் நேரத்தில் வெளியே சுற்றித் திரியும் பணியில் இருப்பவர்கள், அடிக்கடி ஜூஸ், பழச்சாறு போன்ற குளிர்பானங்களை தேவைக்கேற்ப பருகவும். இதனால் உடல் சோர்வு நீங்கும்.இளநீர் கண்டிப்பாக அருந்துங்கள். இது உடல் சூட்டைத் தவிர்த்து சிறுநீரை எளிதாக பிரிய வழிவகுக்கும்.முடிந்தவரை எளிதில் ஜீரணமாகக் கூடிய உணவு வகைகளை இரவில் உண்ணவும். இது ஜீரணத்தை விரைவுபடுத்தி, உடல் சோர்வு மற்றும் அஜீரணக் கோளாறுகளைத் தவிர்க்கச் செய்யும். தினமும் ஒரு வாழைப்பழம் சாப்பிடலாம். உடல் சூட்டை அது தணிப்பதுடன், மலச்சிக்கல் வராமலும் இருக்க ஏதுவாகும்.வெயிலில் வெளியே செல்ல நேரிட்டால், கண்டிப்பாக தொப்பி அணிந்து செல்லவும். தலையில் வெயில் தாக்குதல் இல்லாதவாறு பார்த்துக் கொள்ளுங்கள்.அதிக தண்ணீர், தண்ணீர்ச் சத்துடைய பழங்க்ளை அதிகளவில் சாப்பிடுங்கள். கோடையைத் தவிர்த்து நலமுடன் இருங்கள்.
*******************************************************************************************
நீங்கள் பார்கின்ற தூண்களின்றி வானங்களை அல்லாஹ்வே உயர்த்தினான். .240 பின்னர் அர்ஷின்மீது அமர்ந்தான். சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறான். ஒவ்வொன்றும் குறிப்பிட்ட தவனைவரை ஓடுகின்றன. .241 காரியத்தை அவனே நிர்வகிக்கிறான். உங்கள் இறைவனின் சந்திப்பை நீங்கள் உறுதியாக நம்புவதற்காக சான்றுகளை அவன் தெளிவுபடுத்துகிறான்.‌
(விரிவான விவரங்களுக்கு எண்ணின் மேல் அழுத்தவும். pls download Automatic font install)

Read more...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP