சுகாதாரத்துறை அலட்சியமும்: பாதிப்புக்குள்ளாகும் பொதுமக்களும்

30 September 2011


கடமை தவறும் சுகாதாரத்துறையினரால் பொதுமக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அரசு உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவ அலுவலர்கள், மருந்தாளுனர், செவிலியர், கட்டுக்கட்டுபவர், கடைநிலை ஊழியர்கள், களப்பணியாளர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் பகுதி நேர மேற்பார்வையாளர்கள் பணியாற்றுகின்றனர். இதில் புறநோயாளிகள் பிரிவில் பொதுமக்களுக்கு சிகிச்சை அளிப்பது, களப்பணியாளர்களின் பணிகள் குறித்து ஆய்வு செய்வது மருத்துவ அலுவலர்களின் பணியாகும். புறநோயாளிக்கு மருந்து, மாத்திரைகள் வழங்குதல் மற்றும் மருந்துகளை இருப்பு வைத்தல் போன்றவைகள் மருந்தாளுநர்களின் பணியாகும். அதேபோல் புறநோயாளிகள் பிரிவுக்கு வரும் பொதுமக்களுக்கு ஊசி போடுதல் மற்றும் பிரசவம் பார்ப்பது செவிலியர்களின்
 பணியாகும். ஆரம்ப சுகாதார நிலையங்களை பராமரித்து வருவது, கடைநிலை ஊழியர்களின் பணியாகும். பிறப்பு, இறப்பு பதிவு, கொள்ளை நோய்த் தடுப்பு, காய்ச்சல் தடுப்பு, மற்றும் சிறு நோய்களுக்கு சிகிச்சை அளிப்பது, உணவு கலப்பட தடைச் சட்டத்தை அமுல்படுத்துவது. பொது சுகாதாரச் சட்டத்தை அமல்படுத்துவது, பாதுகாக்கப்பட்ட குடிநீர், உள்ளாட்சி நிர்வாகத்தால் முறையாக மருந்து கலந்து விநியோகிக்கப்படுகிறதா என்பதை ஆய்வு செய்தல், சுற்றுப்புற சுகாதாரத்தை பாதுக்காத்தல் போன்றவை சுகாதார ஆய்வாளர்களின் பணியாகும்.
கர்ப்பிணிப்பெண்கள் குறித்து பதிவு செய்தல், பிரசவம் பார்த்தல், தடுப்பூசி போடுதல், சிறு நோய்களுக்குச் சிகிச்சை அளித்தல், தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள துணைச் சுகாதார நிலையங்களில் தங்கி பணிபுரிதல், பள்ளிக் குழந்தைகள் நலம், மற்றும் கொள்ளை நோய் ஏற்படும்போது உதவியாக இருப்பது கிராம சுகாதார செவிலியரின் பணியாகும்.
 இதுமட்டுமின்றி சுகாதார ஆய்வாளர், கிராம சுகாதார செவிலியர் ஆகியோரது பணிகளை பகுதிநேர மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்ய வேண்டும். இந்நிலையில் இவர்கள் யாரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட ஊர்களுக்குச் சென்று முறையாக மேற்கண்ட பணிகளை பொதுமக்கள் பயன்பெறும் வகையில் செய்வது கிடையாது என்பது பொதுமக்களின் பொதுவான குற்றச்சாட்டு.
 குறிப்பாக மருத்துவ அலுவலர் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவுக்கு அரசு அறிவித்துள்ள நேரத்தின்படி பணி செய்வது கிடையாது. மேலும் இவர்கள் பணிக்கு வராததால் மாலை நேரத்தில் புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படுவதில்லை.
பொதுமக்கள் நலன் கருதி மாவட்டங்களில் துணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்)  இருந்தும், இம்மாவட்டத்தில் இயங்கிவரும் பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மாலை நேர புறநோயாளிகள் சிகிச்சைப் பிரிவு செயல்படுவதில்லை. இதுகுறித்து மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்வது கிடையாது என்றும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். உதாரணமாக துணை இயக்குநர்கள் (சுகாதாரப் பணிகள்) மருத்துவ அலுவலர்களின் பணிகளை களத்துக்குச் சென்று ஆய்வு செய்தால், மருத்துவ அலுவலர்கள் களத்துக்குச் செல்வார்கள்.  மருத்துவ அலுவலர்கள் களத்துக்குச் சென்றால் களப்பணியாளர்கள் கிராமத்துக்குச் சென்று தங்களது பணிகளை நிறைவாக செய்வார்கள். பொது மக்கள் பயன் பெறுவர். எனவே இனியாவது தங்களது கடமையை உணர்ந்து சுகாதாரத்துறையினர் பணி செய்தால் மக்களின் பிணி நீங்கும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.

Read more...

ஒவ்வொரு கரன்சி நோட்டிலும் யாரோ ஒரு அப்பாவியின் ரத்தம் தோய்ந்திருக்கிறது

29 September 2011

வாகன விபத்துகள் அதிகரிப்பதற்கான முக்கிய காரணம் வாகன ஓட்டிகளிடம் ஏற்படும் போட்டி மனப்பான்மை தான். விட்டுக் கொடுக்கும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக் கொண்டால் விபத்துகளை தவிர்க்கலாம்.  வாகனங்களை ஓட்டி பழகும் போதே முறையாக பழகவேண்டும். குறிப்பாக டிரைவிங் ஸ்கூல் வாகனங்களில் (இரட்டை கட்டுப்பாடு அமைப்பு) பழகும் போது, நுட்பங்களை கற்றுக் கொள்ள முடியும். நகர் பகுதியில் 40 கி.மீ., மற்ற இடங்களில் 60 - 80 கி.மீ., வேகத்தில் சென்றால் விபத்துகளை முற்றிலும் தவிர்க்கலாம். கியர்களை வேகத்திற்கு ஏற்ப மாற்றுவதன் மூலம் எரிபொருளை சிக்கனப்படுத்தலாம். சிலர் 60 கி.மீ., வேகம் வரை இரண்டாவது கியரில் செல்வார்கள் இது மிகவும் தவறு. நான்கு வழிச்சாலைகளில் செல்லும் போது, விளம்பரப் பலகைகளில் என்ன வேகத்தில் செல்லலாம் என குறிப்பிடப்பட்டுள்ளதோ, அந்த வேகத்தில் தான் செல்ல வேண்டும். போக்குவரத்து விதிமுறைகளை எந்த காரணத்தைக் கொண்டும் மீறக்கூடாது. வாகனங்களை மாறி மாறி ஓட்டுபவர்கள், ஓட்டும் வாகனத்தின் தன்மையை உணர்ந்து அதற்கேற்ப ஓட்ட வேண்டும். வாகனங்களை ஓட்டும் போதே மொபைலில் பேசுதல், குடிபோதை, தூக்கமின்மை மற்றும் ஓய்வின்மை போன்ற காரணங்களால் வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகின்றன. அதிவேகம், அதிக பாரம் இருந்தால் வாகனங்களை எளிதாக கட்டுப்படுத்தவே முடியாது. விபத்துகள் ஏற்பட்டும் வாய்ப்பு அதிகம். போட்டி போட்டு வாகனங்களை ஓட்டுவது விபத்தை அழைப்பது போன்றது. எந்த நிலையிலும் விட்டுக் கொடுக்கும் பண்பை வளர்த்துக் கொண்டால் வாகன பயணமும் இனிதாகவே அமையலாம்.

உலகில் மிக அதிக சாலை விபத்துகள் நடக்கும் நாடு என்ற பெயர் இந்தியாவுக்கு கிடைத்திருக்கிறது. அதிக மக்கள், அதிக வாகனங்கள், அதனால் விபத்தும் அதிகம் என்று பலரும் சாதாரணமாக எடுத்துக் கொள்கின்றனர். இந்தியாவை காட்டிலும்  மக்களும் வாகனங்களும் அதிகமுள்ள சீனாவில் விபத்துகள் குறையும்போது,  இங்கே கிடுகிடுவென அதிகரிக்கிறது என அவர்களுக்கு தெரியாது.

மூன்று நிமிடத்துக்கு ஒருவர் வீதம் இந்தியர்கள் நடுரோட்டில் செத்துக் கொண்டிருக்கிறார்கள். ஐக்கிய நாடுகள் சபையின் துணை அமைப்புகள் இந்த நிலை குறித்து ஏற்கனவே கவலை தெரிவித்தன. 2007ல் நம் நாட்டில் 2 லட்சம் பேர் பலியானதாகவும், 5 லட்சம் பேர் காயம் அடைந்ததாகவும் உலக நல்வாழ்வு நிறுவனம் அறிக்கை தயாரித்திருந்தது.  

தமிழகத்தில் ஆண்டுக்கு 62 ஆயிரம் விபத்துகளில் 15,000 பேர் பலியாவதாக கணக்கு சொல்லப்படுகிறது. விபத்துகளில் முக்கால்வாசி டிரைவரின் தவறால் நடக்கின்றன. ஓவர்டேக் செய்யும்போது நடக்கும் மோதல்கள் பிரதானம். ஒரு நொடியில் சரியான முடிவு எடுக்க தெரியவில்லை; அல்லது-முடியவில்லை.

தூக்கம், குடிபோதை, அலட்சியம், அறிவின்மை, வேகம், செல்போன் என ஏதோ ஒரு காரணம். விபத்துகளால் நேரும் உயிரிழப்புகள் குறித்து  பலமுறை எச்சரித்த பின்னரும், போக்குவரத்து விதிகளை தயவு தாட்சண்யம் பாராமல்  அமுல்படுத்துவதில் சம்பந்தப்பட்ட துறையினர் அக்கறை காட்டுவதாக தெரியவில்லை.

அதிரடி சோதனையில் கையும் களவுமாக அதிகாரிகள் சிக்கிய பின்னரும் ஆர்.டி.ஓ அலுவலகங்களில் புரோக்கர்களின் நடமாட்டம் ஓயவில்லை; பணப்புழக்கம் குறையவில்லை. லஞ்சமாக வாங்கும் ஒவ்வொரு கரன்சி நோட்டிலும் யாரோ ஒரு அப்பாவியின் ரத்தம் தோய்ந்திருக்கிறது என்று புத்தியில் உறைக்கும் போதுதான் சாலை மரணங்களுக்கு வேகத்தடை போடமுடியும்.

Read more...

இறைவன் நல்லவரைத்தான் சோதிப்பான்

28 September 2011


இந்த மாமனிதரையும் அவசியம் தெரிந்து கொள்ளுங்கள்
இங்கே சொடுக்கவும்http://onlinepj.com/books/mamanithar/
-------------------------------------------------------------------------

ரயிலில் கேட்பாரற்றுக் கிடந்த பணப்பையை எடுத்து அதில் பத்து லட்ச ரூபாய் இருப்பது தெரிந்தும் அதை உயரதிகாரிகளிடம் ஒப்படைத்த ரயில்வே பணியாளரின் நேர்மைக்கு பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டுள்ளது.
எத்தனையோ மணிதர்கள் தங்கள் வாழ்க்கையில் சிறுவயதில் கற்ற நேர்மையையும் உயர்ந்த பண்பையும் தங்கள் வறுமையிலும் செம்மையாகக் கடைப்பிடித்து வருகிறார்கள். அவர்களில் ஒருவர் பகவான் தாஸ்.
இந்திய ரயில்வே பணியாளரான இவர், கடந்த 1984 முதல் ரயில்வே துறையில் அட்டெண்டராகப் பணி செய்து வருகிறார். ரயில், நிலையத்தை வந்தடைந்த பிறகு, பெட்டிகளில் உள்ள ரயில்வேக்கு சொந்தமான பொருள்களை சரிபார்த்து ஒப்படைப்பதே இவர் வேலை. எத்தனையோ முறை நம் நேர்மையானஇந்திய பயணிகள், ரயில் பயணத்தில் கொடுக்கப்படும் துண்டு, போர்வைகளை இலவசபொருள்களாய் எடுத்துச் சென்றுவிடுவதுண்டு. அப்போதெல்லாம் அவற்றுக்கான தண்டத் தொகை பகவான் தாஸின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்டு, குடும்ப பட்ஜெட்டில் வெட்டுவிழுந்ததுண்டு. ஆனாலும், இளவயதில் பாரம்பரியமாகக் கற்ற நேர்மை குணத்தை அவர் கைவிட்டதில்லை.
கடந்த செப்.15ம் தேதி அவர் நேர்மைக்கு ஒரு சோதனை. ரயிலில் பயணம் செய்த காங்கிரஸ் எம்.பி. சந்தீப் தீக்‌ஷித் தான் கொண்டுவந்திருந்த ரூ.10 லட்சம் ரூபாய் உள்ள பையை ரயிலில் வைத்துவிட்டு இறங்கிவிட்டார். வழக்கம்போல் ரயில் பெட்டியில் சோதனை மேற்கொண்ட பகவான் தாஸ், பணப் பையைப் பார்த்தார். ரூபாய் கட்டுகள் தெரிந்தன. அவர் மனத்தில் ஒரு நொடிகூட சலனம் எழவில்லை. உடனடியாக அந்தப் பையை எடுத்தார். அலுவலகம் சென்றார். உயர் அதிகாரியிடம் சொல்லி ஒப்படைத்தார்.
ஊழல் செய்திகள் பத்திரிகைகளில் ஒரு சிறு இடத்தையும் விடாமல் ஆக்கிரமித்திருக்கும் இந்நாளில், பகவான் தாஸ் போன்றவர்களின் நேர்மை சின்னஞ்சிறு இடத்தையும் ஆக்கிரமிக்காதது ஆச்சரியம்தான். மக்களின் மனங்களில் இவர் போன்றவர்களின் நேர்மை ஆக்கிரமிக்குமானால் நிச்சயம் பத்திரிகைகளில் பத்திகளிலும் இடம்பெறுமோ என்னவோ?
தன் செயல் குறித்து பகவான் தாஸ் அலட்டிக் கொள்ளவில்லை. ஆனால் அவர் கூறுவதைக் கேட்டால் நமக்குள் இறைவன் நல்லவரைத்தான் சோதிப்பான் என்ற உண்மை நங்கூரம் பாய்ச்சி நிலைகொள்ளும்.
எனக்குக் கிடைக்கும் சொற்ப சம்பளத்தைக் கொண்டு வாழ்க்கையை நடத்துகிறேன். என் குடும்பமும் மகிழ்ச்சியாகத்தான் உள்ளது. அன்று ரயிலில் சோதனை மேற்கொண்ட போது பணப்பையைப் பார்த்தேன். உடனே மெக்கானிக்கை அழைத்துக் காட்டினேன். அவரிடம், இந்தப் பையை நாம் நம் உயரதிகாரிகளிடம் ஒப்படைத்து, இந்தப் பணத்தை உரியவரிடம் சேர்க்க உதவ வேண்டும் என்று சொன்னேன்.
பகவான் தாஸ் சொன்னது போல் செய்தார். அவருக்குப் பரிசாக ஜபல்பூர் பகுதி உயரதிகாரியிடம் இருந்து அவருக்குப் பரிசாக ரூ.2000 கிடைத்தது. இருப்பினும், உயரதிகாரிகள் பகவான் தாஸின் செயலுக்கு தகுந்த பரிசு அளிக்கும்படி ரயில்வேத் துறைக்கு சிபாரிசுக் கடிதம் அனுப்பி வைத்தனர்.
ஆனால், ஜான்ஸி அருகில் உள்ள லலித்பூரில் வசிக்கும் 54 வயது பகவான் தாஸோ, பணம் ஒரு பொருட்டல்ல என்கிறார். எனக்கு மூன்று மகன்கள். அவர்களுக்கு ஏழைக் குடும்பத்தில் இருந்துதான் பெண் எடுத்தேன். என் இரு மகள்களையும் ஏழைக் குடும்பத்துக்குத்தான் மருமகள்கள் ஆக்கினேன். ஆனால் அவர்கள் செம்மையாக வாழக் கற்றுக்  கொண்டவர்கள். பணத்துக்காக நற்பண்புகளை விட்டுவிடக்கூடாதுஎன்கிறார்.
அவர் மனத்தில் கொஞ்சமும் வருத்தம் ஏற்படவில்லை. ஒவ்வொரு நாளும் அழுக்கடைந்த பிளாட்பாரங்களில், அழுக்கடைந்த மனிதர்களுக்கு மத்தியில் நேர்மையோடு தூய்மையாக செயல்படும் பகவான் தாஸ் போன்றவர்களின் வாழ்க்கைச் செய்தி, ஆயிரம் அண்ணா ஹசாரேக்களின் உண்ணாவிரதச் செய்தியை விட மேலானது என்றால் அது மிகையில்லைதானே. 

Read more...

சூரிய சக்தியிலிருந்து மின்சாரம் அவசியமானதுதான்

24 September 2011


இந்தியாவில் தற்போது இருக்கும் மின்பற்றாக் குறையைவிட 2020-ல் இரு மடங்கு அதிகமாக இருக்கும் என ஆய்வுகள் சொல்கின்றன. இதற்கொரு தீர்வாக சூரிய சக்தியிலிருந்து மின்சாரத்தை தயாரிப்பது மிக அவசியமாகிறது. வெப்ப மண்டல நாடான இந்தியாவில் ஆண்டுக்கு 250-300 நாட்கள் சுமார் 3,000 மணி நேரம் சூரியஒளி கிடைக்கிறது. இதனைக் கொண்டு 5,000 டிரில்லியன் கிலோவாட் ஹவர் சூரியசக்தி ஆண்டு முழுவதும் தடையின்றி கிடைக்கும்.

      

இதனைக் கொண்டு மிகப் பெரிய அளவில் நம்மால் மின்சாரம் தயாரிக்க முடியும். வெறும் 250 நாட்கள் மட்டுமே சூரியஒளியைப் பெறும் ஃபிரான்ஸும்ஜெர்மனியும் சுமார் 9,000 மெகாவாட் மின்சக்தியை உற்பத்தி செய்கிறது. ஆனால் ஆண்டுக்கு 300நாட்கள் வரை சூரியஒளி பெறும் நாமோவெறும் 12 மெகாவாட்டுக்கும் குறைவாகவே உற்பத்தி செய்கிறோம். வீட்டுக்குத் தேவையான மின்சாரத்தையும் சிறிய அளவிலான கருவிகள் மூலம் உற்பத்தி செய்யலாம். வீட்டில் பயன்படுத்தும் சோலார் சாதனங்களைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை. மின்சாரம் இன்னும் கிடைக்காத கிராமங்கள் இந்தியாவில் உள்ளன. அங்கெல்லாம் சோலார் சாதனங்களைப் பயன்படுத்தி பலன் பெறலாம். சோலார் சக்தியின் பயன்பாடு நாடு முழுவதும் உடனே செயல்படுத்த வேண்டியது அவசியம்மும் அவசரமும் ஆகும். மாறாக தாமதித்தால் மின்சாரத்தினால் ஏற்படும் பாதிப்பு அனைத்து துரைகளிலும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.

Home Solar Power Systems  

நாடு தழுவிய அளவில் மின் பற்றாக்குறை நிலவுகிறது. மின்தடை பிரச்னையில் இருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை (டெடா) அறிமுகப்படுத்தியுள்ள "ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக்திட்டம் தற்போது வீட்டு உபயோகத்திறகு கைகொடுக்கிறது. வீடுகள் மற்றும் நிறுவனங்களில் மின்தடை ஏற்பட்டால் தற்போது "இன்வெர்ட்டர்கள்பயன்படுத்தப்படுகின்றன. இவற்றால் மூன்று மணி நேரம் மட்டுமே தொடர்ந்து செயல்பட முடியும். ஆனால்ஒரு கிலோ வாட் சோலார் பவர் பேக் மூலம் தொடர்ந்து 16 மணி நேரம் மின்சாரம் பெற முடியும். இதற்கான சோலார் அமைப்பை ஏற்படுத்த2.2 லட்சம் ரூபாய் செலவாகும். நாள் ஒன்றுக்கு எட்டு யூனிட் மின்சாரம் இதன் மூலம் உற்பத்தி செய்ய முடியும். வீடுகளில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் அனைத்து மின்சார பொருட்களையும் இந்த மின்சாரத்தால் இயக்க முடியும். சோலார் அமைப்பை ஏற்படுத்த 65 சதுர அடி இடம் தேவை. சாதாரணமாக பயன்படுத்தும் மின்சார செலவை ஒப்பிடுகையில்சோலார் அமைப்பை ஏற்படுத்திய எட்டு ஆண்டுகளுக்கு பின் கிடைக்கும் மின்சாரம் லாபக்கணக்கில் வரும். சோலார் அமைப்பை பராமரிப்பதும் எளிது. சோலார் தகடுகளை சுத்தம் செய்தால் போதும். இந்த நவீன சோலார் அமைப்பை ஏற்படுத்த விரும்புவோர்தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை அலுவலகங்களில் விண்ணப்பித்து 50 சதவீதம் மானியம் பெற்றுக் கொள்ளலாம்.
        

வீடுகளில் 'சோலார் பிளான்ட்அமைக்க, 50 சதவீதத்துக்கும் அதிகமாக மானியம் வழங்கப்படுகிறது, '' என தமிழ்நாடு எரிசக்தி வளர்ச்சி முகமை துணைப்பொது மேலாளர் சையது அகமது தெரிவித்துள்ளார்.அவர் கூறியதாவது : வீடுகளில் மின்உற்பத்தி செய்துவீட்டுத்தேவைக்கு மட்டும் பயன்படுத்துவோருக்கு ஐந்து கிலோவாட் வரை மானியம் உண்டு. வீட்டு கூரையின் மேல் சிறிய 'கிரிட்இணைப்புடன் கூடிய 'சோலார் பிளான்ட் ' (ஆர்.பி.எஸ்.எஸ்.ஜி.பி.,) அமைக்க எட்டு லட்ச ரூபாய் செலவாகிறது.
இதன்மூலம் ஒரு வாட்டுக்கு 90 ரூபாய் வீதம்அதிகபட்சம் நான்கரை லட்சம் வரை மானியம் கிடைக்கிறது. எரிசக்தி அமைச்சகம் ஊக்கத்தொகை வழங்குகிறது. ஐந்து கி.வாட் மின்உற்பத்தியின் மூலம் வீடுகளில் பயன்படுத்தும் ஏசி,பிரிட்ஜ்கம்ப்யூட்டர்வாஷிங் மெஷின்மின்விளக்குமின்விசிறிஉப்புத்தண்ணீர் மோட்டார்தண்ணீர் இறைக்கும் மோட்டார் அனைத்தையும் இயக்கலாம்.

  Solar_cell  : Vacuum solar water heating system on the house roof.     Solar_cell  : solar-powered cells on rooftop with blue clouded sky


முற்றிலும் மின் வாரியத்தின் தேவையிலிருந்து விலகலாம். மின்தட்டுப்பாடு என்ற பிரச்னையே ஏற்படாது. மின்சேமிப்பு : 'பிளான்ட்டில்பயன்படுத்தப்படும் சில குறிப்பிட்ட போட்டோ செல்கள் 85 டிகிரி வெப்பநிலையிலும்சிறப்பாக செயல்படுகின்றன. அதற்கான தரச்சான்றும் பெற்றுள்ளன. மழைக்காலங்களில் பேட்டரி மூலம் மின்சாரத்தை சேமித்து வைத்துமூன்று நாட்கள் பயன்படுத்தலாம்.
ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் எட்டுமணி நேரம் சூரியசக்தியை ஈர்க்க முடியும். குறைவான இடவசதி : வீட்டுக்கூரை அல்லது மாடியில் 500 சதுரஅடி இருந்தால் போதும். வாரம் ஒருமுறை போட்டோ செல் பேனல்களை கழுவி துடைத்தால்சூரிய ஒளி ஈர்க்கும் திறன் குறையாது. இயக்க யாரும் தேவையில்லை. 'பிளான்ட்அமைக்க அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் உள்ளன. வெப்சைட்டில் பார்க்கலாம். முதன்முறையாகவீடுகளில் பயன் படும் சோலார் குக்கர்களுக்கான மானியம் 20லிருந்து 60 சதவீதமாகவும்வாட்டர் ஹீட்டருக்கு 50 சதவீதமும் தரப்படுகிறது.

நிறுவனங்களுக்கும் சலுகை : லாபம் ஈட்டா நிறுவனங்கள்லாபம் ஈட்டும் நிறுவனங்கள் அதிகபட்சமாக 100 கிலோவாட் வரை மின்உற்பத்தி செய்யலாம்.. அதிகபட்சமாக 90 லட்சரூபாய் மானியம் கிடைக்கிறது. லாபம் ஈட்டா நிறுவனங்கள் மானியம் போகமீதமுள்ள தொகைக்கு வங்கிகளில் கடன் பெறலாம். லாபம் ஈட்டும் நிறுவனங்கள் மானியம் அல்லது கடன் இரண்டில் ஏதாவது ஒன்றைப் பெறலாம். இத்திட்டம்16.3.2010ல் அறிவிக்கப்பட்டுள்ளதுஎன்றார் சையது அகமது.மேலும் விவரங்களுக்கு மதுரையில் உள்ள எரிசக்தி வளர்ச்சி முகமையின் அலுவலக எண்: 0452 - 253 5067ல் தொடர்பு கொள்ளலாம்.

Read more...

தனிமனித வருமானமும், அன்னியச் செலாவணி இருப்பும் மட்டுமே வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல.

21 September 2011



குடும்பமானாலும் சரி, தேசமானாலும் சரி, மிகப்பெரிய மூலதனமும், அதிகப்படியான ஒதுக்கீடும் வருங்காலத்துக்காக ஒதுக்கப்படுவதுதான் புத்திசாலித்தனம். குறிப்பாக, இளைய தலைமுறையின் வளர்ச்சிக்காகச் செலவழிப்பது என்பது சரியான முதலீடுதானே தவிர செலவு என்று சொல்லலாகாது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை, சொல்லப் போனால், கூட்டுக் குடும்ப முறை வலுவாக இருந்தது வரை, குழந்தைகள்தான் மிகப்பெரிய பாதுகாப்பு என்று கருதியதுபோய்,  இப்போது குழந்தைகளுக்காகச் செலவழிப்பது தங்களது கடமை என்பதுபோல ஆகிவிட்டது. குழந்தைகளைப் படிக்க வைத்து நல்ல நிலையில் அமர்த்துவதுடன் தங்களது கடமை முடிந்துவிடுகிறது என்கிற எண்ண ஓட்டம் பெற்றோர் மத்தியில் இருப்பது போலவே, தேசிய அளவில் திட்டமிடும் அரசுகளும், குழந்தைகள் நலனில் செலவிடுவது என்பதை முதன்மையான செலவினமாகக் கருதாமல் இருக்கும் மனப்போக்கு காணப்படுகிறது.
வளர்ச்சி என்பது பங்குச் சந்தையிலோ, அன்னியச் செலாவணி கையிருப்பு அதிகரிப்பதிலோ தனிநபர் வருமானம் உயர்வதிலோ இல்லை என்பதை இப்போது, பொருளாதார தாராளமயம் பற்றிப் பேசிக் கொண்டிருந்த நாடுகள் உணர்ந்து கொள்ளத் தொடங்கிவிட்டன. இல்லையென்றால், மருத்துவக் காப்பீட்டுக்காக அமெரிக்கா வரலாறு காணாத அளவில் ஒதுக்கீடும் முக்கியத்துவமும் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
"ஹக்' என்கிற பெயரில் குழந்தைகளின் உரிமைப் பாதுகாப்பு மையம் ஒன்று செயல்படுகிறது. "ஹக்' என்றால் அரபி மொழியில் உரிமை என்று பொருள். இந்த அமைப்பு குழந்தைகளின் உரிமைகளைக் காப்பதை மட்டுமல்ல, அவர்களைச் சமுதாயப் பொறுப்புள்ள பிரஜைகளாக மாற்றுவதிலும், நாளைய தலைமுறை தேசத்தை நடத்திச் செல்பவர்களாக மாற்றுவதிலும் கவனம் செலுத்துகிறது. இந்த அமைப்பு வெளியிட்டிருக்கும் ஒரு அறிக்கை நம்மைத் திடுக்கிட வைக்கிறது.
கடந்த ஐந்து ஆண்டுகளாக மத்திய அரசு தாக்கல் செய்திருக்கும் நிதிநிலை அறிக்கைகளை ஆராய்ந்து இந்த அமைப்பு நாம் எந்த அளவுக்கு நாளைய தலைமுறை பற்றிக் கவலைப்படுகிறோம் என்பதை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது. இந்திய மக்கள் தொகையில் ஏறத்தாழ 42 விழுக்காடு குழந்தைகள்தான் என்றாலும், நமது நிதிநிலை அறிக்கைகளில் ஆண்டுதோறும் நாம் அவர்களது வளர்ச்சிக்காகவும், வருங்காலத்துக்காகவும் செய்யும் ஒதுக்கீடு வெறும் 4.12%தான்.
அனைவருக்கும் கல்வி (சர்வ சிக்ஷா அபியான்) போன்ற திட்டங்களின் மூலம் பல கோடி ரூபாய் குழந்தைகள் நலனுக்காகச் செலவிடப்படுவதாகச் சொல்லப்பட்டாலும், ஒட்டுமொத்த ஒதுக்கீட்டில் இதன் பங்கு வெறும் 4.12% மட்டுமே. கல்விக்கான ஒதுக்கீடு என்பது 2.9% சுகாதாரம் மற்றும் குழந்தைகள் வளர்ச்சி போன்றவை ஒரு விழுக்காட்டுக்கும் குறைவாகவே அரசின் ஒதுக்கீடு பெறுகின்றன.
இதில் இன்னொரு வேடிக்கையும் உண்டு. நிதிநிலை அறிக்கைகளில் ஒதுக்கீடு செய்யப்படும் தொகை மத்திய, மாநில அரசுகளால் முழுமையாகச் செலவிடப்படாமல் இருக்கின்றன என்பதுதான்.  
மத்திய சுங்க, கலால் துறைகள், ஆரம்பக் கல்வி வரி என்கிற பெயரில் ஒரு வரி வசூல் நடத்துகின்றன. இதுமட்டுமல்லாமல் நடுநிலைக் கல்வி வரி வசூலிக்கப்பட்டு (பிராரம்பிக் சிக்ஷா கோஷ்) அதன் மூலம் மதிய உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.  
இப்படித் துணை வரி வசூலிக்கப்படத் தொடங்கியது முதலே, அனைவருக்கும் கல்வி, மதிய உணவு ஆகிய இரண்டு திட்டங்களையும் அரசு "பிராரம்பிக் சிக்ஷா கோஷ்' திட்டத்தின் கீழ் கொண்டு வந்து தனது பொறுப்புகளைக் கை கழுவி விட்டுவிட்டது போலத் தோன்றுகிறது. அதன் பிறகு அரசின் ஒதுக்கீடு கணிசமாக உயரவே இல்லை.
குழந்தைகள் நலன் என்கிற பெயரில் நிதிநிலை அறிக்கைகளில் அதிக அளவு நிதி ஒதுக்கீடு செய்வதால் மட்டும், நாளைய தலைமுறையினரின் நல்வாழ்வு உறுதிப்படுத்தப்படும் என்பதில்லைதான். ஒதுக்கீடுகள் எல்லாமே பயனாளிகளை அடைந்திருக்குமேயானால், இந்தியா எப்போதோ உலக வல்லரசாக மாறியிருக்கும் என்பதை மீண்டும் மீண்டும் நாம் சொல்லி மனவேதனையை வெளிப்படுத்த வேண்டியதில்லை. ஆனால், நமது வருங்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கு ஒதுக்கீடு செய்வதில்கூடத்  தயக்கம் காட்டும் நாம் (அரசு), நல்லதொரு வருங்காலம் இந்த தேசத்துக்கு இருக்கும் என்று என்ன தைரியத்தில் நம்புகிறோம் என்பதுதான் மனதை நெருடும் கேள்வி.
கல்வி என்று எடுத்துக் கொண்டால், நாம் இரண்டு வகையான குழந்தைகளை உருவாக்க முற்பட்டிருக்கிறோம். ஒருபுறம், தாய்மொழிகூடத் தெரியாத, வறுமை என்றால் என்ன என்பதையே அறியாத, வாழ்க்கையில் எல்லா வளங்களையும் அனுபவிக்கும் பணக்காரத்தனமான குழந்தைகள் நகரங்களில் உருவாக்கப்படுகின்றனர். இந்தக் குழந்தைகள்தான் இந்தியாவின் முகமாக நவீன தொழில்நுட்ப சாதனைகளைப் படைத்து நமக்குப் பெருமை சேர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்னொருபுறம், ஆரம்பக் கல்வியுடன் படிப்பைத் தொடராத, அப்படியே தொடர்ந்தாலும், 30% மட்டுமே கல்லூரிப் படிப்பைத் தொடரும் அவலம். இன்றும் உலகின் 30% ஊட்டச்சத்துக் குறைந்த, 40% ரத்தசோகையால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் வாழும் நாடாக இந்தியா தொடர்கிறது. பள்ளிக்கே போகாத குழந்தைகள் இன்னும்கூட பலர் இந்தியாவில் இருக்கும் அவல நிலை.
நாம் விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது. நிதியமைச்சர் விரும்புவதுபோல 9% பொருளாதார வளர்ச்சியும், அதிகரித்த தனிமனித வருமானமும், அன்னியச் செலாவணி இருப்பும் மட்டுமே ஒரு தேசத்தின் வளர்ச்சிக்கு அளவுகோல் அல்ல. நமது குழந்தைகள்தான் நாளைய இந்தியா. அவர்கள் ஏற்றத்தாழ்வில்லாமல் கல்வியும், சுகாதாரமும், உணவும், உடையும் பெறுவதுதான் உண்மையான முன்னேற்றம்!

Read more...

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP