இந்தியாவிலேயே தமிழகம் முதலிடம்

26 November 2010


இதனால் சகலவிதமான மக்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தை பிடித்துள்ளது. எந்த துறை என்று கேட்கிறீர்களா? வேறு எந்த துறை, தொலைநோக்கு பார்வையுடன் அரசே ஏற்று நடத்தும் மதுபான துறையில்தான். தமிழ்நாட்டில் இதுவரை பத்து மதுபான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. இது இல்லாமல் தற்போது, புதிதாக மூன்று மதுபான தொழிற்சாலைகளுக்கு அனுமதி வழங்கப்பட உள்ளதாக செய்திகள் கசிகின்றன. இப்படி, மூன்று தொழிற்சாலைகளும் தொடங்கப்பட்டுவிட்டால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிக மதுபான தொழிற்சாலைகள் இயங்குகின்றன என்ற பெயரை பெற்று, தமிழ்நாடு முதலிடத்தை அடையும். இதனால் மதுவகைகளின் விலைகள் குறையும் என்று எந்த குடிமகனாவது தப்புக்கணக்கு போட்டால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல. மக்கள் அனைவரும் சோமபானத்தையும், சுறாபானத்தையும் வயிறு முட்ட குடித்து வாழ்நாள் (ஏது?) முழுதும் மகிழ்ச்சியாக இருக்கவேண்டும் என்பதே கடந்தகால, நிகழ்கால, வருங்கால தமிழக அரசுகளின் முக்கிய விருப்பம் ஆகும்.






குடிமக்களும் எந்தவித விருப்பு, வெறுப்புகளுக்கும் ஆளாகாமல் தினமும் குடித்து நாட்டின் வருவாயை பெருக்கிதருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். வரி வருவாய் என்பது, கேட்டு வாங்கமுடியவில்லை. கட்டாதவர்கள் அனைவரும், பணக்காரர்களாய் இருப்பதாலும், பாதிக்கும் மேற்பட்டோர் அரசியல்வாதிகளாய் இருப்பதாலும் அவர்களின் நலனை கருதி வரியினை தள்ளுபடி செய்யவேண்டியதாய் உள்ளது. எனவே, தற்போது வருமானத்தை பெருக்க ஒரே வழி, குடிமக்கள் ஆகிய உங்கள் கையில்தான் உள்ளது.

நீங்கள் தினமும் குடித்து குடித்து, அரசினை வளமாக்கினால் நாங்கள் உங்களுக்கு நன்றி தெரிவிப்போம். மேலும், இப்போது ஆசிய பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்றிருக்கும் நமது தமிழக அரசியல்வாதிகள், விரைவிலேயே உலகப் பணக்காரர்கள் வரிசையில் இடம்பெற்று, தமிழகத்திற்கு பெருமை சேர்ப்போம். அவ்வளவு ஏன்? முடிந்தால், உலகிலேயே பணக்காரர்கள் வரிசையில் முதலிடத்தையும் பிடிப்போம். யோசித்துப் பாருங்கள். தமிழகத்தில் இருந்து, உலகின் நெ.1 பணக்காரர். எப்படி இருக்கும்? இதற்கு நீங்கள் செய்யவேண்டியதெல்லாம், உங்கள் சொத்துக்களை நமது டாஸ்மாக் கடையில் இழந்து போண்டியாய் போகவேண்டியதுதான். அப்படி நீங்கள் செய்தால், நாங்களும் நன்றி மறவாமல், உங்களை மேம்படுத்த இலவசமாக சில பொருட்களை எலும்புத் துண்டாக தருவோம் என்பதை மிகவும் கர்வத்தோடு கூறிக்கொள்கிறோம்.

மதுபான தொழிற்சாலையில் முதலிடத்தைப் பெற்றுள்ள நாம், விரைவிலேயே மதுவகைகள் விற்பனையிலும் முதலிடத்தை பிடித்து இந்தியாவுக்கே முன்மாதிரியாக திகழ்வோம் என்பதை இந்த நேரத்தில் சபதமாக ஏற்போம். வாழ்க திராவிட பாரம்பரியம்! வாழ்க நமது கொள்கைகள்!

Read more...

சிறிய விஷ​யங்​க​ளில்​தான் ஏரா​ள​மாக கற்​றுக் கொள்ள முடி​யும்

25 November 2010


பிரம்​மாண்​டங்​க​ளைப் பார்த்​துப் பார்த்து,​​ சிறிய விஷ​யங்​க​ளைக் கண்​டு​கொள்​வ​தில்லை; ஆனால்,​​ அந்​தச் சிறிய விஷ​யங்​க​ளில்​தான்  ஏரா​ள​மாக கற்​றுக் கொள்ள முடி​கி​றது.​ அமெ​ரிக்க எழுத்​தா​ளர் தோரோ நடப்​பது பற்றி மட்​டும் 100 பக்​கங்​க​ளைக் கொண்ட புத்​த​கம் ஒன்றை எழு​தி​யுள்​ளார்.​ பூமி​யு​டன் நேர​டி​யா​கத் தொடர்​புள்​ளவை கால்​கள் மட்​டுமே.​ பள்​ளிக் காலங்​க​ளில் விளை​யா​டு​வ​தைத் தவிர கால்​க​ளுக்கு இப்​போது வேறெந்த வேலை​யும் நாம் கொடுப்​ப​தில்லை.​ சோம்​பேறி ஆவ​தற்கு முதல் அறி​குறி கால்​க​ளுக்கு எந்த வேலை​யும் கொடுக்​கா​த​து​தான்.​ சைபீ​ரிய பற​வை​கூட இந்​தி​யா​வுக்கு பறந்து வரு​கி​றது.​ நாம் வசதிகள் இருந்தாலும் இங்​குள்ள தாஜ்​ம​கா​லைக்​கூட பார்க்​கச் செல்​வ​தில்லை.​ பய​ணம் செய்​வ​தி​லுள்ள அனு​ப​வம் வேறெ​தி​லும் கிடைக்​காது.​ கல்​விக் கூடங்​க​ளில் பயி​லும் கல்வி மனித வாழ்க்​கைக்கு நேர​டி​யாக பயன்​பட்​ட​தில்லை.​ வகுப்​பறை,​​ பாடங்​கள்,​​ தண்​ட​னைக்​குள்​ளேயே நாம் முடங்​கி​வி​டு​கி​றோம்.
ரஷிய எழுத்​தா​ளர் ஆன்​டன் ஷெக்​காவோ தனது வீட்​டின் முன் இருந்த காலி​யி​டத்​தில் ஆசி​ரி​யர்​க​ளுக்​காக ஒரு முகாமை அமைக்​கப்​போ தாகக் கூறி​னார்.​ ரஷிய ஆசி​ரி​யர்​கள் கம்​பீ​ரத்​து​டன் இருப்​ப​தில்லை; அவர்​க​ளைக் கண்​ட​றிய முடி​ய​வில்லை என அவர் குறிப்​பிட்​டார்.​ கல்வி என்​பது ஊதி​யம் பெறும் வேலை என்​ப​தோடு ஆசி​ரி​யர்​கள் நின்​று​வி​டு​கி​றார்​கள்.​ பணி​யாற்​றும் ஊரின் வர​லாறு,​​ அந்த மக்​க​ளின் பண்​பாடு போன்​ற​வற்​றைத் தெரிந்து கொள்ள ஆசி​ரி​யர்​கள் முனைப்பு காட்​டு​வ​தில்லை என்​ப​தெல்​லாம் ஷெக்​கா​வோ​வின் வருத்​தங்​கள்.​
 
நம் வகுப்​ப​றை​க​ளில்​தான் பேதங்​களே தொடங்​கு​கின்​றன.​ அடிமை முறையை ஒழித்து ஆயி​ரம் ஆண்​டு​க​ளா​கி​யும் தொலைக்​காட்​சி​கள் ஒரே நாளில் அடிமை முறையை நமக்​குக் கற்​றுக் கொடுத்து விடு​கின்​றன.​ வீடு​க​ளில் குழந்​தை​க​ளைப் பேசவே விடு​வ​தில்லை; தொலைக்​காட்​சி​கள்​தான் பேசிக் கொண்டே இருக்​கின்​றன.​ நாம் பிரம்​மாண்​டங்​களை நோக்​கியே பார்க்​கி​றோம்.​ அத​னால்,​​சிறிய சிறிய விஷ​யங்​களை கண்​டு​கொள்​வ​தில்லை.​ உண்​மை​யில் சிறிய விஷ​யங்​கள்​தான்,​​ நமக்கு நிறைய கற்​றுத் தரு​கின்​றன.​ தன்​னை​விட 5 மடங்கு அதிக எடை கொண்​ட​வற்றை எறும்பு சுமக்​கி​றது.​ நாம் எறும்​பைக் கண்​ட​வு​டன் நசுக்​கிக் கொள்​கி​றோம்.​ அதில் நாம் சுகம் கொள்​கி​றோம்.​

ஒரு கல்லை எடுத்​தால்,​​ அதை யார் மீதா​வது வீசிப் பார்க்​கத்​தான் நாம் முனை​கி​றோம்.​ அந்​தக் கல் பெரிய மலை​யின் ஒரு பகுதி என்​றுப் பார்ப்​ப​தில்லை.​ நம்முடைய சிறிய அலட்சியங்களால் கொஞ்​சம் கொஞ்​ச​மாக இந்த உலகை நர​க​மாக மாற்றி நமக்கு நாமே கேடு செய்து வரு​கி​றோம்.​ மனி​தர்​கள் தங்​க​ளி​ட​முள்ள சில சொற்​களை,​​ சிந்​த​னை​களை,​​ செய்​கை​களை மாற்​றிக் கொள்ள முன்​வர வேண்​டும் அபோதுதான் 
அது நமக்கும் மற்றவருக்கும் பயனுள்ளதாக அமையும். 

Read more...

உலகிலேயே மிக அதிகமான சாலை விபத்துகள்

17 November 2010


 உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டிருக்கும் சமீபத்திய அறிக்கை ஒன்று திடுக்கிடும் புள்ளிவிவரத்தைத் தருகிறது. 2006 - 2007-ம் ஆண்டுகளில் 178 நாடுகளில் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையிலான அறிக்கையின்படி, சுமார் 12 லட்சத்துக்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் ஆண்டுதோறும் மரணமடைவதாகத் தெரிகிறது. படுகாயமடைவோரின் எண்ணிக்கை இரண்டரை கோடிக்கும் அதிகம் என்கிறது அந்த ஆய்வு.


அந்த ஆய்வில் அதைவிட அதிர்ச்சி அளிக்கும் விஷயம் என்னவென்றால், உலகிலேயே மிக அதிகமானோர் சாலை விபத்துகளில் பலியாவது இந்தியாவில்தான் என்பதுதான். 2007-ல் மட்டும் இந்தியாவில் சாலை விபத்துகளில் பலியானவர்களின் எண்ணிக்கை 1,14,590. அதாவது, ஒவ்வொரு மணி நேரத்திலும் சுமார் 13 பேர் இந்தியாவில் சாலையில் நடக்கும் விபத்துகளில் மரணமடைகிறார்கள். இந்த எண்ணிக்கை அதற்கு முந்தைய ஆண்டின் எண்ணிக்கையைவிட 6.9 சதவிகிதம் அதிகம்.


Fatal Car Accidents   Traffic Jam Crash

இந்தியாவைவிட அதிகம் மக்கள்தொகையும், மோட்டார் வாகனங்களும் உள்ள நாடு சீனா. ஆனால், அங்கே 2006-ம் ஆண்டு புள்ளிவிவரப்படி சாலை விபத்தில் மரணமடைந்தவர்கள் 89,455 பேர்தான். அதுமட்டுமல்ல, இந்தியாவில் சாலை மரணங்கள் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் அதேவேளையில் சீனாவில் இந்த எண்ணிக்கையைக் கணிசமாகக் குறைத்து வருகிறார்கள் என்பதுதான் நாம் அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம்.

சாலை விபத்துகளில் மரணமடைந்தோரின் எண்ணிக்கை புள்ளிவிவரத்தில் குறிப்பிட்டிருப்பதைவிட மிகவும் அதிகமாக இருக்க வாய்ப்பு உள்ளது. பல விபத்துகள் முறையாக வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை. படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் மரணமடைவது இந்தப் புள்ளிவிவரத்தில் சேர்க்கப்படவும் இல்லை.

52843415_d4332aa90c.jpg

இந்தியாவைவிட அதிக அளவில் வாகனங்கள் இருந்தாலும், வளர்ச்சி அடைந்த நாடுகளில் சாலை விபத்துகள் கணிசமாகக் குறைந்து இருப்பதற்கு முக்கியக் காரணம், அங்கே சாலை விதிகள் மிகவும் கடுமையாகப் பின்பற்றப்படுகின்றன என்பதும், விபத்துகள் நேராமல் இருப்பதற்கான வழிகளைத் தொடர்ந்து ஆய்வு செய்து திருத்தங்களை அவ்வப்போது கொண்டு வந்தபடி இருப்பதும்தான். சுவீடன், ஜப்பான், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் மிகக் குறைவாகவே சாலை விபத்துகள் நடைபெறுவதை அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளில் மிக அதிகமாகப் பலியாவது லாரி ஓட்டுநர்களும், உதவியாளர்களும்தான். சாலை மரணங்களில் 22 சதவிகிதம் பலியாவது இவர்களாகத்தான் இருக்கிறார்கள் என்கிறது அறிக்கை. அதற்கு முக்கியக் காரணம், குடித்துவிட்டு வாகனங்களை ஓட்டுவதும், முறையான உரிமம் இல்லாமல் உதவியாளர்கள் லாரியை இயக்குவதும், சரியான வாகனப் பரிசோதனை இல்லாமல் இருப்பதும்தான் என்பதையும் அறிக்கை வெட்ட வெளிச்சமாக்கி இருக்கிறது.

19 சதவிகிதம் இரண்டு சக்கர வாகனங்களும், 11 சதவிகிதம் பஸ்களும், 9 சதவிகிதம் பாதசாரிகளும் சாலை விபத்துகளில் பலியாவதாகத் தெரிகிறது. இந்தியாவிலேயே மிக அதிகமாக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலங்கள் என்கிற பெருமையை ஆந்திரப் பிரதேசமும் மகாராஷ்டிரமும் தட்டிச் செல்கின்றன. அடுத்தபடியாக 12.5 சதவிகிதம் சாலை மரணங்களுடன் உத்தரப் பிரதேசமும், 12 சதவிகிதம் சாலை மரணங்களுடன் தமிழ்நாடும் சாலை விபத்துகளில் சாதனையாளர்களாகத் தலைகுனிகின்றன.


  நகர்ப்புற சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள், அரசு போக்குவரத்துக் கழகங்கள்தான் என்று பல்வேறு அறிக்கைகள் சுட்டிக்காட்டி உள்ளன. மேலும் ஆட்டோக்களும், இரு சக்கர வாகனங்களும் சாலை விபத்துகளுக்கு முக்கியக் காரணங்கள் என்று குற்றம்சாட்டப்படுகின்றன. ஆனால், நாம் கவனிக்காமல் விட்டுவிடும் விஷயம் என்னவென்றால், சாலை விதிகளை மதிக்காமல் நினைத்த இடத்தில் சாலையைக் கடக்கும் பாதசாரிகளும்கூட சாலை விபத்துகளுக்குக் காரணமானவர்கள் என்பதை.



வளர்ச்சி பெற்ற நாடுகளில் பாதசாரிகள் மற்றும் சைக்கிள்கள் செல்ல அகலமான நடைமேடைகள் நகர்ப்புறங்களில் எல்லாம் முறையாகப் பராமரிக்கப்படுகின்றன. பிளாட்பாரங்கள் கடைத்தெருவாகி விடும் நிலையில் பாதசாரிகள் சாலையைப் பயன்படுத்தியாக வேண்டிய நிர்பந்தம் இங்கே ஏற்பட்டு விடுகிறது. மேலும், ஆங்காங்கே இடைவெளிவிட்டு பாதசாரிகள் சாலையைக் கடக்கப் போதிய வசதிகள் செய்யப்படுகிறதா என்றால் அதுவும் இல்லை. பாதசாரிகளின் பயன்பாட்டைக் கருத்தில்கொண்டு சாலைகளும், சாலை விதிகளும் வளர்ச்சி பெற்ற நாடுகளில் அமைக்கப்படுவதால்தான் அங்கே விபத்து விகிதம் குறைகிறது என்று தோன்றுகிறது.

சாலைகளைக் கட்டணச் சாலைகளாக்குவதில் அரசு காட்டும் முனைப்பும் அக்கறையும் விபத்துகளைத் தவிர்ப்பதில் காட்டத் தவறுகிறதே, அங்கேதான் பிரச்னையே எழுகிறது. உரிமம் வழங்குவதிலும், வாகனப் பரிசோதனையிலும் லஞ்சம் வாங்க அனுமதித்துவிட்டு, கணக்கு வழக்கில்லாமல் வாகனங்களைச் சாலையில் ஓட விட்டுவிட்டு, பிரமாதமாக சாலைகளை அமைத்துக் கட்டணம் வசூலித்து என்ன பயன்?

Read more...

யதார்த்த உணர்வோடு மனம்விட்டுப் பேசாதீர்கள்!

12 November 2010



மற்றவர்களிடத்தில் சொல்லலாமா? இப்படி மனம்விட்டுச் சொல்வதால் நீங்கள் உங்களுக்குப் பழக்கமானவரிடத்தில் எல்லா விஷயங்களையும் மனம்விட்டுப் பேசுகிறீர்கள். நடந்த உண்மைகளை அப்படியே யதார்த்தமாகச் சொல்கிறீர்கள்! எல்லா விஷயங்களையும் உங்களுக்கு ஆறுதல் கிடைக்குமா? கடுகளவு ஆறுதல்கூடக் கிடைக்காது.

எனவே ஒருபோதும் எவரிடமும் மனம்திறந்து பேசாதீர்கள். சில விஷயங்களைப் பிறரிடம் சொல்லவே கூடாது. பணம் கொடுக்கல் வாங்கல், வீட்டுப் பிரச்னை, தாம்பத்ய அனுபவம், செய்த தானம், அடைந்த புகழ், ஏற்பட்ட அவமானங்கள் ஆகியவற்றைப் பிறரிடம் சொல்லவே கூடாது. இதை மற்றவர்களிடத்தில் சொன்னால், நீங்கள் பலவீனர்களாகி விடுவீர்கள். உங்களுடைய பலவீனம் மற்றவர்களுக்குத் தெரிந்தால் உங்கள் பலத்தை நீங்கள் இழப்பதுடன் அவர்களுடைய அடக்குமுறைக்கும் ஆளாகிவிடுவீர்கள்.

உங்களுக்குக் கிடைக்கும் வருமானம், புகழ் ஆகியவற்றைக் கேட்டு மற்றவர்கள் பொறாமை கொள்வார்கள். ""அடேங்கப்பா!... இவருக்கு மாதந்தோறும் இவ்வளவு வருமானமா? மக்கள் மத்தியில் இவ்வளவு செல்வாக்கா?'' என்று ஆதங்கப் பெருமூச்சு விட்டுக்கொண்டே இருப்பார்கள். அவர்களின பார்வை மற்றும் பேச்சுகள் உங்கள் வாழ்வில் பின்னடைவை ஏற்படுத்திவிடும்.  

உங்கள் கருத்துகளைப் பிறரிடம் கூறவே கூடாது. இதனால் உங்கள் பிரச்னைகளின் தீவிரம் கொஞ்சம்கூடக் குறையாது. எனவே ஒருபோதும் மற்றவர்களிடம் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளாதீர்கள். உங்கள் உயிர் நண்பராக இருந்தாலும் சரி, அவரிடத்திலும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளாதீர்கள். அவர் உங்கள் உயிரை வாங்கும் எமனாக மாறிவிடுவார். இடுக்கண் களையும் நட்பை இன்று தேடிப்பிடிக்க வேண்டியுள்ளது.

கணவன் மனைவியிடமும், மனைவி கணவனிடமும் கருத்துப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். இதில் பிழையொன்றும் இல்லை. திருமணத்துக்கு முன்பு தாயிடமும் தந்தையிடமும் கருத்துகளைப் பரிமாறிக் கொள்ளுங்கள்.

நீங்கள் உங்கள் வாழ்வில் பட்ட அவமானங்கள், துன்பங்கள், உங்களுக்கு ஏற்பட்ட சோதனைகள், உங்களுக்கு உண்டான கேவலங்கள் எதுவாக இருந்தாலும் எல்லாவற்றையும் இறைவனிடம் மனம் திறந்து சொல்லுங்கள். உங்களுக்கு மன நிம்மதி உறுதியாகக் கிடைக்கும்.

மன அமைதி என்பது உங்களுக்கு இல்லாமல் போய்விட்டதா? நல்ல நூல்களைப் படியுங்கள். நம்பிக்கை தரும் நூல்களைப் படியுங்கள். மார்க்கச் சொற்பொழிவுகளைக் கேளுங்கள்.
சான்றோர்களுடைய நல்லுரைகளைக் கேளுங்கள். இவைகளால் உங்களுடைய மனம் விவரிக்க முடியாத ஆனந்தத்தை அடையும்.

நீங்கள் வறுமையில் வாடியபோது உங்களுக்கு உதவி செய்ய எவரும் வந்திருக்கமாட்டார். ஆனால் நீங்கள் செல்வச் செழிப்புடன் வாழும்போது உங்களை நாடி ஆயிரம் பேர் வருவார்கள். உயர்ந்த நட்புடையவர்கள் எப்போதும் மலர்ந்தபடியே உள்ள குவளை மலர்போல இருப்பார்கள். ஆனால் கெட்டவர்கள் பகலில் குவிந்து இரவில் மலரும் ஆம்பல் மலர் போல அடிக்கடி மாறுவார்கள். ஆதாயம் இருந்தால் மட்டுமே அண்டி வருவார்கள்.

அன்புடையவர்கள் உயர்ந்த நட்புடையவர்களாகவே இருப்பார்கள். அவர்கள் எப்போதும் ஒரே தன்மையுடன் பழகும் பண்புடையவர்களாகத் திகழ்வார்கள். நற்குடியில் பிறந்தவர்கள் கடமை தவறாமல் காரியங்களைச் செய்வார்கள். சமூகத்தில் பெரிதும் புகழப்படுவார்கள். கௌரவிக்கப்படுவார்கள்.

எனவே, உயர்ந்த நட்புடையவர், அன்புடையவர், நற்குடியில் பிறந்தவர், நட்புக்காகத் தன்னையே தியாகம் செய்யத் துணிபவர், ஒருவர் பொறை இருவர் நட்பு என்பதைத் தெளிவாக உணர்ந்தவர், சிறந்த குணநலம் உடையவர் ஆகியோர் யார் என்பதைத் தெளிவாக உணர்ந்தவர். சிறந்த குணநலம் உடையவர் ஆகியோர் யார் என்பதை ஆராய்ந்து பார்த்து, அவரிடம் நட்புக்கொண்டு, அவரிடம் மனம்விட்டுப் பேசுங்கள்! இதை விட்டுவிட்டு எல்லோரிடத்திலும் யதார்த்த உணர்வோடு மனம்விட்டுப் பேசாதீர்கள்!

Read more...

மழை நீரை சேமிப்பது காலத்தின் கட்டாயம்.

(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ் மேகத்தை மெதுவாக இழுத்து, பின்னர் அவற்றை ஒன்றாக இணையச்செய்து, அதன் பின் அதை (ஒன்றின் மீது ஒன்று சேர்த்து) அடர்த்தியாக்குகிறான்; அப்பால் அதன் நடுவேயிருந்து மழை வெளியாவதைப் பார்க்கிறீர்; இன்னும் அவன் வானத்தில் மலைக(ளைப் போன்ற மேக கூட்டங்க)ளிலிருந்து பனிக்கட்டியையும் இறக்கி வைக்கின்றான்; அதைத் தான் நாடியவர்கள் மீது விழும்படிச் செய்கிறான் - தான் நாடியவர்களை விட்டும் அதை விலக்கியும் விடுகிறான் - அதன் மின்னொளி பார்வைகளைப் பறிக்க நெருங்குகிறது. (அல்குர்ஆன்:24:43)
-----------------------------------------------
தமிழ் நாட்டின் முன்னாள் முதன் மந்திரி ஒரு சட்டம் கொண்டு வந்தார். ஒவ்வொருவரும் கட்டாயமாக மழைநீர் சேமிப்புக்கான எற்பாடுகளைச் செய்ய வேண்டும். புது வீடுகள் கட்ட முனைவோர் அவர் செய்யப் போகும் மழை நீர் சேமிப்பிற்கான ஏற்பாடுகள் என்ன என்பதை வரைபடத்தில் காட்டினால்தான் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனுமதி அளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டார் அவர். அந்த உத்தரவினை மிகச் சிலரே ஆர்வம் காட்டினர்.  
அந்த உத்தரவுகள் வந்த உடன் அவசர அவசரமாக சென்னைவாசிகள் மண்ணில் ஒரு சிறு பள்ளம் தோண்டி அதற்குள் நான்கு கற்களைப் போட்டு வீட்டுக் கூரைகளிலிருந்து வரும் மழை நீர்க் குழாய்களை அதற்குள் விட்டு மூடிவிட்டார்கள். இந்த வேலை செய்து தந்தவர்களின் காட்டில் நல்ல பண மழை பெய்தது. ஒரு நல்ல மழை பெய்த உடன் மூடியிருந்த பள்ளத்தைத் திறந்து கொண்டு மீண்டும் மழை நீர் சாக்கடைகளைத்தான் சென்றடைந்தது

மழைநீரை சேமிக்க வேண்டுமானால் இரண்டு விதமாகச் செயல்படலாம். ஒன்று மழைநீரை நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்வது. மற்றொன்று அப்படியே உபயோகத்திற்காக சேமித்து வைப்பது.

நிலத்தடி நீரோடு சென்றடையச் செய்ய ஒரு சுமார் மூன்றடி விட்டமும் 8 -10 அடி ஆழமும் கொண்ட பள்ளம் தோண்டி அதில் உடைந்த செங்கற்களை சுமார் 6 – 8 அடிக்கு நிரப்பி பின் அதன் மேல் 1 – 2 அடி உயரத்திற்கு மணல் நிரப்பி, கூரையில் இருந்து வரும் மழை நீர்க்குழாயைக் கொண்டு அதற்குள் விட வேண்டும். இப்படிச் செய்தால் தான் மழை நீர் நிலத்தடி நீரைச் சென்றடையும்.


விளக்கப் படம் - மழை நீரை நிலத்தடியில் சேமிக்கும் முறை
RainWaterHarvesting.jpg


சராசரியாக நிலத்தில் பெய்யும் மழையில், 40% நிலத்தின் மேல் ஓடி கடலில் கலப்பதாகவும், 35% வெயிலில் ஆவியாகுவதாகவும், 14% பூமியால் உறிஞ்சப்படுவதாகவும், 10% மண்ணின் ஈரப்பதத்திற்கு உதவுவதாகவும் கணக்கிடப்பட்டுள்ளது.
ஆனால் தற்போது பெருநகரங்களில் வீடுகள், கட்டிடங்கள் அருகருகாக கட்டப்படுவதும்,  தவிர திறந்தவெளிகளையும் சிமெண்ட் தளங்கள் அமைத்தும்,  தார் சாலைகள் அமைத்தும் மூடி விடுவதால், இங்கு பெய்யும் மழை நீரில் 5% அளவிற்கு கூட நிலத்தில் உறிஞ்சப்படுவதில்லை. கடலோர நகரங்களில் நிலத்தினுள் புகும் நீர் அளவு குறைந்து, ஆழ்குழாய் கிணறுகள் மூலம் நிலத்தடி நீர் அதிகமாக எடுக்கப்படும் போது, கடல் நீர் நிலத்தடியில் கலந்து பயன்படுத்த இயலாத அளவிற்கு மாறி விடுகிறது. இதனை மழை நீர் சேகரிப்பு முறைகள் மூலம் தவிர்க்கலாம்.


June Water Feature.jpg


இவைகள் தமக்குள்ளும்,  தம்மை சுற்றிலும் உள்ள ஏரிகளிலும், குளங்களிலும் சேமிக்கப்படுகிற மழைநீரை,  தம்முடைய அன்றாட தேவைக்கு பயன்படுத்துகின்றன. நம்முடைய மக்கள் அன்றாட தேவைக்கு 60 சதவீதம் வரை, நிலத்தடி நீரையே நம்பி உள்ளனர்.சென்னை நகரில், 1998ம் ஆண்டிலிருந்து ஒரு சில வருடங்களுக்கு கடும் தண்ணீர் பற்றாக்குறை இருந்தது. அந்த சமயத்தில் நிலத்தடி நீர்மட்டம் அதிகளவில் குறைந்து,  கிணறுகள் யாவும் வற்றிப் போயின. இதற்கான ஒரு சில காரணங்கள்... சென்னை முழுவதிலும் அடுக்கு மாடி குடியிருப்புகள் அதிகளவில் கட்டப்பட்டன. அந்த ஒரு சில ஆண்டுகளில் 2000, 2001ஐ தவிர, மற்ற ஆண்டுகளில் பெய்த மழை, சராசரியை விட குறைவாகவே இருந்தது.

ஆகவே நிலத்தடி நீர் பற்றி அதிக கவனம் தேவை. பூமிக்கடியில் உள்ள நிலத்தடி நீர் ஒன்றுக்கொன்று தொடர்பில்லாத இரண்டு மட்டங்களில் (நிலையில்) நமக்கு கிடைக்கிறது. இவை கடின பாறைக்கு மேலே உள்ள நீராகவும், கடின பாறைக்குள் காணப்படும் நீராகவும் உள்ளது. இவைகளை மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீர் என்றும் அழைக்கலாம். மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மற்றும் அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் மூலமும், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலமும் எடுத்து உபயோகிக்கலாம். மேல் நிலத்தடி நீர் தான், மழைநீரை பூமிக்குள் செலுத்துவதன் மூலம் ஒவ்வொரு வருடமும்,  தக்கவைத்துக் கொள்ளப்படுகிறது. கீழ் நிலத்தடி நீர் பாறைக்குள் காணப்படுவதால், அதை தக்க வைத்துக் கொள்வது அவ்வளவு எளிதல்ல. சென்னையில் ஒவ்வொரு பகுதியிலும் கடின பாறை, ஒவ்வொரு ஆழத்தில் அமைந்துள்ளது.

உதாரணமாக, சில பகுதியில் மூன்று அடி ஆழத்திலும்,  சில பகுதியில் 60 அடி ஆழத்திலும் ஒரு சில பகுதிகளில் 100 மற்றும் 150 அடி ஆழத்திலும் அமைந்துள்ளது. இதை பொருத்தே அந்தந்த பகுதியில் மேல் நிலத்தடி நீரின் கொள்ளளவு நிர்ணயிக்கப்படுகிறது.  மக்கள், 30 ஆண்டுகளுக்கு முன் வரை, மேல் நிலத்தடி நீரை கிணறுகள் மூலம் எடுத்து, தங்களுடைய தண்ணீர் தேவையை பூர்த்தி செய்து வந்தனர். அதன் பிறகு தேவைகள் அதிகரித்ததால், கீழ் நிலத்தடி நீரை அதிக ஆழமுள்ள ஆழ்துளை கிணறுகள் மூலம் எடுக்கத் துவங்கினர். இதற்கு ஆகும் மின்சார செலவும் அதிகமாகவே இருக்கும். இப்போது இது தான் புழக்கத்தில் அதிகமாக காணப்படுகிறது. அப்படி கீழ் நிலத்தடி நீரை எடுக்க ஆரம்பித்த பிறகு, மேல் நிலத்தடி நீரை அறவே மறந்து விட்டனர்.
மழைநீர் சேமிப்பை தமிழக அரசு கட்டாயப்படுத்தி, 2002 - 2003ல் கொண்டு வந்த சட்டத்தால், தமிழகத்தில் குறிப்பாக சென்னையில் மக்கள்,  மழை நீரை அதிக அளவில் பூமியில் செலுத்தியுள்ளனர். இதன் பயனாக, மேல் நிலத்தடி நீரின் மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. ஒரு சில பகுதிகளில் குறைந்தபட்சமாக ஆறு மீட்டரும் (20 அடி), ஒரு சில பகுதிகளில் எட்டு மீட்டரும் உயர்ந்துள்ளது. பொதுவாக, மேல் நிலத்தடி நீரின் தன்மை, கீழ் நிலத்தடி நீரை விட நன்றாகவே இருக்கும்.

வாஸ்து காரணம் காட்டி கிணறை மூட வேண்டாம்:

மழை நீரை, நம் தேவையை பூர்த்தி செய்து கொள்ள பயன்படுத்தவும்,  அதை நல்ல முறையில் தக்க வைத்துக் கொள்ளவும்,  தமிழக மக்களுக்கு ஒரு சில ஆலோசனைகள்.
ஒவ்வொரு குடியிருப்பிலும், அது தனி வீடாக இருந்தாலும் அல்லது அடுக்குமாடி குடியிருப்பாக இருந்தாலும், ஒரு கிணறு இருந்தால், அதை தக்க வைத்துக் கொள்ள வேண்டும். கிணறுகளை வாஸ்து போன்ற காரணங்களுக்காகவோ அல்லது அது சில வருடங்களாக வற்றிக் கிடக்கிறது என்பதற்காகவோ, மூடிவிட நினைப்பது முற்றிலும் தவறான செயல்.
இக்கிணறுகள், வரப்போகிற காலங்களுக்கு ஒரு வரப்பிரசாதம். தேவைப்பட்டால் அக்கிணறுகளை சிறிய வட்டமுள்ள உறைகள் போட்டு ஆழப்படுத்துவதும் பயனை அளிக்கும்.
அதிக ஆழமில்லாத ஆழ்துளை கிணறுகள் இருந்து,  இப்போது பயன்படுத்தாமல் இருந்தால், அவைகளையும் பழுது பார்த்து வைத்துக் கொள்வதும் எதிர்காலத்திற்கு பயன் உள்ளதாகவே இருக்கும்.
ஏனென்றால், அப்படி ஏற்படுத்திக் கொண்ட கிணறுகளில், மொட்டை மாடியில் பெய்யும் மழைநீரை செலுத்தி, நிலத்தடி நீரை அதிகப்படுத்திக் கொள்வது மட்டுமல்லாமல், கிணற்று நீரின் தன்மையையும் சிறப்படைய செய்ய முடியும். இப்படி கிணறுகளை ஏற்படுத்திக் கொள்ள வாய்ப்பில்லாத ஆழ்துளை கிணற்றை (கடின பாறை வரை) கண்டிப்பாக ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
மழை காலங்களிலும் மற்றும் மழை முடிந்து ஒரு சில மாதங்கள் வரைக்கும், மேல் நிலத்தடி நீர் அதிகமாக காணப்படும். அதை அம்மாதங்களில் எடுத்து உபயோகித்து,  தீர்ந்த பின், குடியிருப்புகளில் உள்ள ஆழமான ஆழ்துளை கிணறுகள் மூலம், கீழ் நிலத்தடி நீரை அன்றாட தேவைக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.
ஆழமான ஆழ்துளை கிணறுகளை தங்கள் வீடுகளில் மற்றும் குடியிருப்புகளில் புதிதாக ஏற்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு ஓர் ஆலோசனை... ஆழமான ஆழ்துளை கிணறுகள், கடின பாறைக்குள் இயந்திரத்தின் மூலம் குடைந்து ஏற்படுத்தப்படுகிறது. குடைந்த பின் பாறை வரைக்கும் ஐந்து அல்லது ஆறு அங்குலம் விட்டமுள்ள சாதாரண குழாய்களை பொருத்துவதே ஆழ்துளை கிணறு தோண்டுபவர்களின் பழக்கமாக இருந்து வருகிறது. இப்படிசெய்வதால், மேல் நிலத்தடி நீர், கீழ் நிலத்தடி நீரை சென்றடைவதையே முற்றிலும் தவிர்த்து விடுகிறது. அதற்கு பதிலாக, மேல் நிலத்தடி நீர் பரவியுள்ள ஆழம் வரைக்கும் விரிசல் (துளையுள்ள) உள்ள குழாய்களை பொருத்துவதே சிறந்த முறை. இப்படித்தான் செய்ய வேண்டும் என பொதுமக்கள், கிணறு தோண்டுபவர்களிடம் கேட்டுக் கொள்ள வேண்டும்.


Read more...

ஏமாற்றங்களால் துவண்டு விட்டால் மாற்றங்கள் ஏற்படாது!

09 November 2010


அதிக மதிப்பெண் பெற்றால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும் என்பது உண்மைதான். அதற்காக மாணவர்களைப் பந்தயக் குதிரைகள் போல தனியார் பள்ளிகள் நடத்துவதும் இதை கல்வித்துறை கண்டும் காணாமல் இருப்பதும் புரியாத புதிர்.தமிழகத்தில் தனியார் பள்ளிகளில் படிக்கும் ஒன்பதாம் வகுப்பு ,பிளஸ்-1 மாணவ, மாணவியர் மட்டும் வழக்கம்போல பள்ளிக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். பல இடங்களில் முற்பகல் மட்டும் இவர்களுக்காகச் செயல்படுகிறது.பத்தாம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுக்குரிய பாடங்களை கோடை விடுமுறையிலேயே நடத்தி முடித்துவிடுகிறார்கள். சில தனியார் பள்ளிகளில் பிளஸ்-1 அரையாண்டுத் தேர்வு முடிந்ததும் பிளஸ்-2 தொடங்கிவிடுகிறது. இந்த மாணவர்கள் ஜூன் மாதம் பிளஸ்-2 வகுப்புக்குச் சென்றவுடன் அவர்களுக்குத் தொடர்ந்து நாள்தோறும் தேர்வுகள் வைத்துப் பழக்குகிறார்கள். வினா வங்கி முழுவதற்கும் பதில் சொல்லும் யந்திரன் போல மாணவர்களை மாற்றுவதற்கான பயிற்சி."அரசுப் பள்ளிகள்தான் நல்ல நாளிலேயே தில்லை நாயகமாக இருக்கின்றன; தனியார் பள்ளிகளிலாவது இத்தகைய நல்ல கல்வி கிடைக்கட்டுமே' என்ற தவறான கருத்தாக்கம் பொதுமக்களிடம் உள்ளது. மக்களிடம் ஏற்படும் இந்த நல்ல எண்ணம்தான் தனியார் பள்ளிகளுக்கு முதலீடு என்பதையும், மாணவர்களைப் பந்தயக் குதிரைகளாக வைத்து, பணம் சம்பாதிக்கிறார்கள் என்பதையும் பொதுமக்கள் அறிவதில்லை. தங்கள் பள்ளி மாணவர் மாநில அளவில் அதிக மதிப்பெண் பெற்றார் என்றும், மாவட்ட அளவில் அதிக மதிப்பெண் பெற்றார் என்றும் தொடர்ந்து இத்தனையாவது ஆண்டாக 100 சதவீத தேர்ச்சி என்றும் தம்பட்டம் அடிக்கத்தான் இப்படியாக மாணவர்களை பிழிந்தெடுக்கிறார்கள். இந்த மாணவர்கள் எந்தெந்தக் கல்லூரியில் சேர்ந்தார்கள் என்ற பட்டியலைத் தயாரித்து அதையும் விளம்பரப்படுத்தி, பொதுமக்களின் நன்மதிப்புடன் கல்விக் கட்டணத்தை மேலும் மேலும் உயர்த்துகிறார்கள். சில தனியார் பள்ளிகள், அவர்தம் கல்வி மாவட்டத்தில் பத்தாம் வகுப்பில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களைப் பணம் கொடுத்து (பங்குச் சந்தை போலவே) வாங்கி, கட்டணச் சலுகை தந்து, பிளஸ்-2 தேர்வில் அவர்கள் பெறும் சிறப்புகளைத் தங்களுடன் அடையாளப்படுத்தி கல்விக் கட்டணத்தை உயர்த்துகிறார்கள். பெற்றோரால் இந்தக் கல்விக் கட்டணத்தை மறுக்க முடியாத நிலைமையை உருவாக்குகிறார்கள்.  இந்த நடைமுறை மாணவர்களிடம் மிகப் பெரிய உளவியல் சிக்கலை ஏற்படுத்துகின்றன என்பதுடன் அகில இந்திய அளவில் கல்வி வாய்ப்புகளைப் பெறுவதிலும் தடையாக இருக்கின்றன என்பதுதான் உண்மை.இரண்டு ஆண்டுகளுக்குத் தொடர்ந்து வெறும் கேள்வி-பதிலை மட்டுமே மனப்பாடம் செய்து அதிக மதிப்பெண் பெற்று பொறியியல் அல்லது மருத்துவக் கல்லூரிகளில் சேரும்போது, அவர்கள் மதிப்பெண் பெற்றிருந்தாலும் மூளைத் திறன் மழுங்கடிக்கப்பட்டு விடுகிறது. மனவெறுமையை இட்டு நிரப்ப சிலர் போதைப் பழக்கத்துக்கு ஆளாகிறார்கள். சிலர் இரக்கமற்ற முரடர்களாக ஆகிறார்கள். சிலர் படிப்பின் மீது வெறுப்புற்று உயர்கல்வியில் கரையும் நிழல்களாக மாறுகிறார்கள்.இந்த நடைமுறையின் இன்னொரு பாதிப்பு தமிழகத்திற்கானது. அகில இந்திய நுழைவுத் தேர்வுகளில் தமிழக மாணவர்களால் தேர்ச்சி பெற முடிவதில்லை. காரணம், அங்கு கேட்கப்படும் கேள்விகள், அடிப்படை அறிவியலில் மூளையை சிந்திக்கத் தூண்டுபவை. ஆனால் இங்கோ வெறும் பல ஆயிரம் கேள்விக்கு உடனே பதில் எழுதும் பயிற்சி மட்டுமே தரப்படுகிறது. அரசுப் பள்ளிகளை மனதில் வைத்து, பாடத்திட்டங்களையும் குறைத்துவிட்டார்கள். தமிழ்நாட்டில் உயர்கல்விக்கு நுழைவுத் தேர்வு அவசியம் இல்லை என்றாகிவிட்டது. இதனால் சிபிஎஸ்இ பாடத்திட்ட மாணவர்கள் மட்டுமே நுழைவுத் தேர்வுகளில் தேர்ச்சி பெற முடிகிறது.இந்தியா முழுவதும் திறந்து கிடக்கும், மிகக் குறைந்த கட்டணத்திலான உயர்கல்வி வாய்ப்புகளை தமிழக மாணவர்கள் இழந்து வருகிறார்கள். ஊதுகிற சங்கை ஊதுவோம் என்றும், இந்தக் கல்வி ஆண்டிலாவது இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப்படாதா என்றும் ஆதங்கப்படுவதுதான் நமது தலைவிதி என்று நினைத்துவிட முடியாது. ஏமாற்றங்களால் துவண்டு விட்டால் மாற்றங்கள் ஏற்படாது!

Read more...

நெடுஞ்சாலை மோசடிகள்.

07 November 2010



செ‌ன்னை‌யி‌ல் இரு‌ந்து தெ‌ன் மாவ‌ட்ட‌ங்க‌ளு‌க்கு த‌மிழக அரசு ‌விரைவு பேரு‌ந்துக‌ளி‌ல் ஒருநாளை‌க்கு பல ஆ‌யிர‌க்கண‌க்கான ம‌க்க‌ள் செ‌ன்று வருகின்றனர்.இ‌ந்த பேரு‌ந்துக‌ளி‌ல் பயண‌ம் செ‌ய்பவ‌ர்க‌ள் சா‌ப்பிடு‌வத‌‌ற்கு, பே‌‌ரு‌ந்து ஓ‌ட்டுந‌ர்க‌ள் பேருந்து நிலையத்திலிருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவிலேயே, நெடு‌ஞ்சாலை‌யி‌ல் த‌னியாக இரு‌க்கு‌ம் மோ‌ட்ட‌ல்க‌ளி‌ல் பேரு‌ந்துகளை ‌நிறு‌த்‌தி ‌விடு‌கிறா‌ர்க‌ள்.
அ‌ங்கு சா‌ப்‌பிட போகு‌ம் ம‌க்களு‌க்கோ அ‌தி‌ர்‌ச்‌சி. ஒரு தோசை 30 ரூபா‌ய், ச‌ரி இ‌ட்‌லியை கொடு‌ங்க‌ள் எ‌ன்று கே‌ட்டா‌ல் ஒ‌ன்று ப‌த்து ரூபா‌ய். ச‌ரி இதுவு‌ம் வே‌ண்டா‌ம் புரோ‌ட்டா கொடு‌ங்க‌ள் எ‌ன்றா‌ல் அத‌ன் ‌விலையோ 20 ரூபா‌ய். வேறு எ‌ன்ன செ‌ய்வது ப‌சி‌க்கு சா‌ப்‌‌பி‌ட்டு‌த்தா‌ன் ஆக வே‌ண்டு‌‌ம் எ‌ன்ற ‌நினை‌ப்‌‌பி‌ல் இ‌ந்த தொகை‌க்கு கொடு‌‌த்து ‌படுமோசமான சா‌ப்பா‌‌டுகளை ம‌க்க‌ள் ச‌பி‌த்து‌க் கொ‌ண்டேதான் சா‌ப்‌பி‌‌ட்டு செ‌‌ல்‌கிறா‌ர்க‌ள்.
இ‌ப்படி இ‌ந்த மோ‌ட்ட‌ல்க‌ளி‌ல் நட‌ந்து கொ‌‌ண்டி‌ரு‌ப்பது ஓ‌ட்டுந‌ர், நட‌த்துன‌ர்களு‌க்கு தெ‌ரியு‌ம்.‌பி‌ன்ன‌ர் ஏ‌ன் அ‌ந்த மோ‌ட்ட‌‌ல்க‌ளி‌ல் பேரு‌ந்துகளை ‌நிறு‌த்து‌கிறா‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்கும் ம‌க்க‌ளிடம், மறைமுக (வாய்மொழி) மேலிட உ‌த்தர‌வினா‌ல்தா‌ன் ‌நிறு‌த்‌த‌ப்படு‌கிறது எ‌ன்‌கிறா‌ர்.
விழு‌ப்புரம் அருகே மோட்டல்கள் நிறுத்தபடுவதற்கு அம்மாவட்ட மாண்புமிகுவை கைகாட்டுகிறார்களாம் போக்குவரத்து துறை அதிகாரிகள்! இ‌தி‌ல் கொடுமை எ‌ன்னவெ‌ன்றா‌ல் சாலைக‌ளி‌ல் உ‌ள்ள அ‌ந்த மோ‌ட்ட‌ல்க‌ளி‌‌ல் இர‌ண்டு அரசு அ‌‌திகா‌‌ரிக‌ள் எ‌ப்போது‌ம் ‌நி‌ன்று கொ‌ண்டுதா‌ன் இரு‌க்‌கிறா‌ர்க‌ள். அவ‌ர்க‌ள்தான் அரசு பேரு‌ந்துகளை ச‌ம்ப‌ந்‌த‌ப்‌‌ப‌ட்ட மோ‌ட்‌ட‌ல்க‌ளு‌க்கு அனு‌ப்‌பி வை‌க்‌கி‌‌ன்றன‌ராம். அ‌ப்படி அ‌ந்த மோ‌ட்ட‌ல்களு‌க்கு செ‌‌ல்லாத பேரு‌ந்து ஓ‌ட்டுந‌ர்க‌ள், நட‌த்துன‌ர்க‌ள் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்படு‌கிறா‌ர்க‌ள்.

திரு‌ச்‌சி‌‌பக்கமும் இதே ‌நிலைதா‌ன் ‌நீடி‌த்து வருவதாக கூறுகிறா அண்மையில் ‌திரு‌ச்‌சியிலிருந்து சென்னை வந்த ப‌ய‌ணி ஒருவ‌ர்! திரு‌ச்‌சியிலிருந்து ‌அரசு பேரு‌ந்‌தி‌ல் அ‌திகாலை 5 ம‌ணி‌க்கு புற‌ப்ப‌டு‌கிறே‌ன். 8 ம‌ணி‌‌க்கு சா‌ப்‌பிட வே‌ண்டு‌ம் எ‌ன்று ஓ‌ட்டுந‌ரிட‌ம் கே‌ட்டபோது, ‌ ஒரு குறிப்பிட்ட ஊரைச் சொல்லி அதைத் தா‌ண்டி அ‌ந்த கு‌றி‌ப்‌பி‌ட்ட ‌விடு‌தி‌யி‌‌ல்தா‌ன் ‌‌‌நி‌று‌த்த முடியு‌ம் எ‌ன்றா‌ர்.ஏ‌ன் எ‌ன்று கே‌ட்டத‌ற்கு,அது ஒரு மா‌ண்பு‌மிகு‌வி‌ன் சகோத‌‌ரரி‌ன் ‌விடு‌தி எ‌ன்று‌ம் அ‌ங்குதா‌ன் ‌நிறு‌த்த வே‌ண்டு‌ம் எ‌ன்று எழு‌த்த‌ப்ப‌டாத உ‌த்தரவு ‌‌பிற‌‌ப்‌‌பி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது எ‌ன்று‌ம் அ‌ந்த ஓ‌ட்டுந‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர். மீ‌றி ‌‌நிறு‌த்தா‌ம‌ல் செ‌ன்றா‌ல் ஓ‌ட்டுநரு‌ம், நட‌த்துனரு‌ம் ப‌ணி‌யிடை ‌நீ‌க்க‌ம் செ‌ய்ய‌ப்படு‌வோ‌ம் எ‌ன்று‌ம் அ‌ந்த ஓ‌ட்டுந‌‌ர் தெ‌ரி‌வி‌த்தாக அ‌ந்த ப‌ய‌ணி கூ‌றினா‌ர்.
கன்னியாகுமரி மற்றும் நெல்லை பக்கமிருந்து வருபவர்களுக்கும் இதே அனுபவம்தான்! கயத்தார், விருதுநகர், சாத்தூர் மற்றும் மதுரை பேருந்து நிலையங்களில் பேருந்து நிற்காது! அதற்கு சில கிலோ மீட்டர் தொலைவில் அமைக்கப்பட்டிருக்கும் இத்தகைய மோட்டல்களில்தான் நிற்கும்.
இது ஒரு வகையான மோசடி என்றால்..., பேருந்து நிலையங்கள் மற்றும் மேற்கூறிய மோட்டல்கள் அமைந்திருக்கும் கட்டண கழிப்பறைகளில் நடைபெறும் மோசடி, அந்த இடத்தைப்போலவே முக சுளிக்க வைக்கிறது!

சென்னை‌, கோவை, தூ‌த்து‌க்குடி, ‌திருநெ‌‌ல்‌வே‌லி, ‌திரு‌ச்‌சி, சேல‌ம், மதுரை உ‌ள்‌ளி‌‌ட்ட ப‌ல்வேறு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் அரசு ப‌ல்வேறு மு‌க்‌கிய இட‌ங்க‌ளி‌ல் க‌‌ழி‌ப்‌பிட‌ம் க‌ட்டியு‌ள்ளது. இ‌‌‌ந்த க‌‌ழி‌ப்‌பிட‌த்தை ச‌ம்ப‌ந்‌த‌ப்ப‌ட்ட மாநகரா‌ட்‌‌சி த‌னியாரு‌க்கு ஒ‌ன்று மு‌த‌ல் இரண்டு ஆ‌ண்டுக‌ள் வரை குத்தகை‌க்கு ‌விடு‌கிறது. அதோடு ச‌ரி இ‌‌தி‌ல் எ‌ன்ன நட‌க்‌கிறது எ‌ன்று மாநகரா‌ட்‌சி அ‌‌திகா‌‌ரிக‌ள் க‌ண்டு கொ‌ள்வதே ‌கிடையாது.
அ‌ந்த ‌‌க‌‌ழி‌ப்‌பிட‌த்‌தி‌ல் ‌‌‌சீறு‌நீ‌ர் க‌ழி‌‌க்க முத‌லி‌ல் ஒரு ரூபா‌ய் வசூ‌லி‌க்க‌ப்ப‌ட்டது. இது படி‌ப்படியாக 2 ரூபா‌ய் ஆனது. த‌ற்போது 3 ரூபா‌ய் வசூ‌லி‌க்க‌ப்ப‌ட்டு வ‌ரு‌கிறது. மலம் க‌ழி‌க்க ‌ரூபா‌ய் 10 வசூ‌‌லி‌க்க‌ப்ப‌டுவதாக பொதும‌க்க‌ள் குமுறு‌கி‌ன்றன‌ர். ஏ‌ன் இ‌ப்படி செ‌ய்‌‌கி‌றீ‌ர்க‌ள் எ‌ன்று கே‌ட்டா‌ல் அ‌திகார தோரணை‌யி‌ல் அவ‌ர்க‌ள் பேசு‌ம் ஆபாச பேச்சுக்களை காதுகொடுத்து கேட்க முடியாது என்று கூறு‌‌கி‌ன்றன‌ர் பொதுமக்கள்!
உதாரணத்திற்கு நெ‌ல்லை இர‌யி‌ல் அருகே உ‌ள்ள மாநகரா‌ட்‌சி‌க்கு சொ‌ந்தமான க‌‌ழி‌ப்‌பிட‌த்தில் அண்மையில் க‌ண்கூடாக காண முடி‌ந்தது இத்தகைய கட்டணக் கொள்ளையை!
அவசரமாக சிறு நீர் கழிக்க வந்தவரிடம், 3 ரூபாயை வைத்துவிட்டு உள்ளே போ என்றார் அங்கிருந்த குத்தகைதாரர்!
தீபாவளி உள்ளிட்ட பண்டிகை காலங்கள் தொடங்கிவிட்ட நிலையில், சொந்த ஊர்களுக்கு பயணிக்கும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கும். இந்நிலையில் இத்தகைய கொள்ளைகளுக்கு அரசு முடிவு கட்டினால் நல்லது!

Read more...

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP