தெரியுமா

09 October 2009

* அதிகப் புத்திசாலித்தனம் கொண்ட இந்திய மக்களில் 25% பேர் அமெரிக்க மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகம் பேராவார்.
* அமெரிக்க குழந்தைகளின் எண்ணிக்கையைக் காட்டிலும் இந்தியாவில் திறனும் மதிப்பும் மிக்க குழந்தைகள் அதிகம்.
* 2010ல் அதிகம் ஆள் தேடப்படும் அல்லது விருப்பப்படும் முதல் பத்து வேலைகள் 2004ல் இல்லாத வேலைகளாகவே இருக்கும்.
* இப்போது இல்லாத சில வேலைகளுக்காக இன்னும் கண்டுபிடிக்காத தொழில் நுட்பங்களை வைத்து நாம் தற்போது மாணவர்களைத் தயார் செய்து கொண்டிருக்கிறோம். எதற்காகத் தெரியுமா? இன்னும் பிரச்சினைகள் என்று கண்டறியாத பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக.
* நான்கு ஆண்டு தொழில் படிப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்கள் முதல் இரண்டு ஆண்டுகளில் படிப்பதில் பாதி மூன்றாவது ஆண்டில் பழைய தொழில் நுட்பமாகிவிடும்.
* அமெரிக்க அரசின் வேலை வாய்ப்பு துறை அறிவிப்பின் படி இன்றைய மாணவர்களுக்கு அவர்களின் 38 வயதில் 10முதல் 14 வேலைகள் இருக்கும்.
* தற்போது நான்கு ஊழியர்களில் ஒருவர் அவருடைய நிறுவனத்தில் ஓராண்டுக்கும் குறைவாகவே பணியாற்றுகிறார். இருவரில் ஒருவர் ஐந்து ஆண்டுகளுக்கும் குறைவாகவே பணியாற்றுகிறார்.
* மை ஸ்பேஸ் தளத்தில் பதிந்தவர்கள் எண்ணிக்கை 20 கோடி. மை ஸ்பேஸ் ஒரு நாடாக இருக்கும் பட்சத்தில் அது உலகின் ஐந்தாவது பெரிய நாடாக இந்தோனேஷியாவிற்கும் பிரேஸிலுக்கும் இடையே இருக்கும்.
* ஒரு நாட்டின் மக்கள் தொகையில் இன்டர்நெட் அதிகம் பயன்படுத்துபவர்களின் நாடாக பெர்முடா உள்ளது. இந்த வகையில் அமெரிக்க 19 ஆவது இடத்தையும், ஜப்பான் 22 ஆவது இடத்தையும் கொண்டுள்ளன.
* ஒவ்வொரு மாதமும் கூகுள் தளத்தில் 3100 கோடி தேடல்கள் மேற்கொள்ளப்படுகின்றன. சென்ற 2006ல் இது 270 கோடியாக இருந்தது. அப்படியானால் கூகுளுக்கு முன்னால் இந்த கேள்விகளை யாரிடம் கேட்டார்கள்? தெரியலயே!
* முதல் எஸ்.எம்.எஸ். வர்த்தக செய்தி 1992 டிசம்பரில் அனுப்பப்பட்டது. இன்று ஒரு நாளில் அனுப்பப்படும் மற்றும் பெறப்படும் டெக்ஸ்ட் மெசேஜ் எண்ணிக்கை உலக மக்கள் தொகையைக் காட்டிலும் அதிகமாக உள்ளது.
* விற்பனை மூலம் மக்கள் தொகையில் 5 கோடி பேரை எட்டிப் பிடிக்க ரேடியோவிற்கு 38 ஆண்டுகள் ஆயின. டிவிக்கு 13 ஆண்டுகள் பிடித்தன. இன்டர்நெட்டுக்கு 4 ஆண்டுகள் பிடித்தன. ஐ பாட் ஜஸ்ட் 3 ஆண்டுகள் தான் எடுத்துக் கொண்டது. பேஸ் புக் தளம் இந்த எண்ணிக்கையை 2 ஆண்டுகளிலேயே எட்டியது
* 1984ல் இன்டர்நெட் டுக்கான சாதனங்களின் எண்ணிக்கை 1,000. 1992ல் இது பத்து லட்சம். 2008ல் இது நூறு கோடி
* ஆங்கில மொழியில் ஏறத்தாழ 10,00,000 சொற்கள் இருக்கின்றன. ஷேக்ஸ்பியர் காலத்தில் இருந்ததைக் காட்டிலும் இது 7 மடங்கு அதிகமாகும்.
* புதிய தொழில் நுட்பம் குறித்த செய்திகளின் எண்ணிக்கை ஒவ்வொரு இரண்டு ஆண்டிலும் இரு மடங்காக உயர்கிறது.
* தற்போது உலகில் நாள்தோறும் 3,000 நூல்கள் வெளியாகின்றன. வருங்காலத்தில் இபேப்பர் என்னும் எலக்டரானிக் செய்தித்தாளின் விலை அச்சிட்டு வெளியாகும் செய்தித்தாளைக் காட்டிலும் விலை குறைவாகவே இருக்கும்.
* ஜப்பானின் என்.டி.டி. நிறுவனம் வெற்றிகரமாக ஒரு பைபர் ஆப்டிக் இழை மீது சோதனை நடத்தியுள்ளது. இதன் ஒரு இழை மூலம் ஒரு நொடியில் 14 ட்ரில்லியன் பட்ஸ் தகவல்களை அனுப்பலாம். இது 2,660 சிடியில் உள்ள தகவல்களுக்கு சமமாகும். இது ஒரு நொடியில் 21 கோடி போன் கால்களுக்கு இணையாகும். தற்போது ஒவ்வொரு ஆறு மாத காலத்திலும் மூன்று பங்கு உயர்ந்து வருகிறது. இதே உயர்வு இன்னும் 20 ஆண்டுகள் நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
* 2013ல் மனித மூளையின் செயல்பாட்டினை மிஞ்சும் ஒரு சூப்பர் கம்ப்யூட்டர் வடிவமைக்கப்படும்.
* 2049ல் 1000 டாலருக்குக் கிடைக்க இருக்கும் கம்ப்யூட்டர் உலகின் அனைத்து மனித மூளைகளுக்கும் உள்ள கணக்கிடும் திறனைக் காட்டிலும் வேகமும் திறனும் கொண்டதாக இருக்கும்.
* இந்த செய்தியைப் படித்துக் கொண்டிருக்கும் இந்த கால அவகாசமான 8 நிமிடத்தில் அமெரிக்காவில் 67 குழந்தைகள் பிறந்திருக்கும். சீனாவில் 274 பிறந்திருக்கும். 395 குழந்தைகள் நம் நாட்டில், இந்தியாவில், பிறந்திருக்கும். 6 லட்சத்து 94 ஆயிரம் பாடல்கள் இன்டர்நெட்டிலிருந்து திருட்டுத்தனமாக டவுண்லோட் செய்யப்பட்டிருக்கும். இவை எல்லாம் எதை நோக்கிப் போகின்றன? இதன் பொருள் என்ன? யாருக்குத் தெரியும்? உங்களுக்குத் தெரிந்தால் சொல்லலாம்.

Read more...

மாணவிக்கு மொபைல் போனில் 'ரூட்' போட்ட வாலிபர்

03 October 2009

மொபைல் போன் நல்லதாக இருந்தாலும் அடிக்கடி புதியதாக மொபைல்களை மாற்றவில்லை என்றால் சிலருக்கு தூக்கமே வராது. சிலர் காசு கொடுத்து புதியதாக வங்கிவிடுவார்கள். ஆனால் பல பேர் பழைய மொபைலை கொடுத்துவிட்டு புதியதை வாங்குவார்கள். அப்படி அடிக்கடி மொபைலை மாற்றுபவர்கள் மிகவும் கவணமாக இருக்க வேண்டும் . இப்படித்தான் பல் மருத்துவம் படிக்கும் மாணவிக்கு மொபைல் போனில் "ரூட்' போட்ட, டீ கடை வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சென்னை மந்தைவெளியை சேர்ந்த பிரபலமான பிரமுகரின் மகள். இவர், சென்னை அருகேயுள்ள கல்லூரியில் பல் மருத்துவம் படித்து வருகிறார். இவரது மொபைல் போன் எண்ணை, கல்லூரியில் படிக்கும் தோழியிடம் கொடுத்திருந்தார்.வேறு மொபைல் போன் வாங்க நினைத்த அவரது தோழி, மொபைல் போனை "செகண்ட்ஸ் சேல்ஸ்' கடையில் விற்றார். அந்த மொபைல் போனில் மாணவியின் மொபைல் எண் பதிவாகியிருந்தது.

அந்த மொபைல் போனை திருவள்ளூர் ஏகாட்டூரைச் சேர்ந்த, டீ கடையில் வேலை பார்க்கும் உலகநாதன் (25) வாங்கி பயன்படுத்தினார். போனில் பதிவாகியிருந்த மாணவியின் மொபைல் எண்ணுக்கு தொடர்புகொண்டு கல்லூரி மாணவர் போல் பேசினார்.இந்த விவரம், மாணவின் வீட்டிற்கு தெரியவந்தது. மொபைல் போனில் பேசி ரூட் போட்ட வாலிபரை பொறி வைத்து பிடிக்க, மாணவியின் பெற்றோர் முடிவு செய்தனர். டீ கடை வாலிபரிடம் இனிமையாக மாணவியை பேச வைத்தனர்.சென்னை காமராஜர் சாலையில் உள்ள கண்ணகி சிலை அருகே, "டிப் டாப்' உடையுடன் டீ கடை வாலிபர் உலநாதன் காத்திருந்தார்.
தங்கள் காரில் சென்ற மாணவியின் உறவினர்கள், வாலிபரை காரில் தூக்கிப் போட்டுக்கொண்டு பறந்தனர்.தனி இடத்திற்கு அழைத்துச் சென்று நன்றாக "கவனித்தனர்'. பிறகு அபிராமபுரம் போலீசில் உலகநாதனை ஒப்படைத்தனர். உதவி கமிஷனர் ஐசக்பால்ராஜ் உத்தரவின் படி, மொபைல் போனில் ஆபாசமாக பேசி ஈவ் டீசிங் செய்த பிரிவில் வழக்கு பதிவு செய்தனர். கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்
.

Read more...

எலும்பு மாற்று அறுவை சிகிச்சை

01 October 2009

புதுடில்லியில் உள்ள அகில இந்திய மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் செயல்பட்டு வரும் எலும்புகள் வங்கியில், இரண்டு ஆண்டுக்கு பின் முதல் முறையாக ஒருவரது உடல் எலும்புகள் தானமாக வழங்கப்பட்டுள்ளன. சர்வதேச அளவில் எலும்பு மாற்று அறுவை சிகிச்சை தான், ரத்த மாற்று சிகிச்சைக்கு அடுத்தபடியாக அதிகளவில் மேற்கொள்ளப் படுகிறது. ஆஸ்திரேலியாவில் ஒவ்வொரு ஆண்டும் ஒரு லட்சம் பேருக்கு, நான்கு பேரும், அமெரிக்காவில் இருவரிடம் இருந்து எலும்புகள் தானம் பெறப் படுகின்றன. ஆனால், இந்தியாவில் இது தொடர்பாக விழிப்புணர்வு மிகவும் குறைவாக உள்ளது.எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக, டில்லி, அகில இந்திய மருத்துவ அறிவியல் பல்லைக் கழகத்தில் பேராசிரியர் மல்கோத்ராவால், முதல் முதலாக, 1999ம் ஆண்டு, எலும்புகள் வங்கி துவக்கப்பட்டது. இந்தியாவிலேயே உள்ள ஒரே எலும்புகள் வங்கி இது ஒன்று மட்டும் தான்.ஆனால், ஆண்டுக்கு ஒருவரிடம் இருந்து கூட, எலும்புகள் தானம் கிடைப்பது இல்லை. கடைசி யாக, 2007ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி, அகில இந்திய மருத்துவமனையில் சிகிச்சைக் காக சேர்க்கப்பட்டு, பலனின்றி உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தார், அவரது எலும்புகளை தானமாக அளித்தனர். அதன் பின், யாரும் எலும்புகள் தானம் செய்ய முன்வரவில்லை. இதனால், எலும்புகள் வங்கி, பெரும் பற்றாக்குறை சிக்கலை சந்தித்தது. அங்கு மிகச்சில எலும்பு பாகங்கள் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் உள்ளன. பெரிதும் தேவைப்படும், இரண்டு ஜோடி கை, கால் எலும்புகள் கூட இல்லாத நிலை இருந்தது. தற்போது இந்த எலும்பு வங்கியில், நான்கு முழங்கால் எலும்புகளும், இரண்டு இடது பக்க எலும்பு கிண்ணங்களும் மட்டுமே பயன்படுத்தும் நிலையில் வைக்கப் பட்டுள்ளன. தொடை எலும்பே இல்லாத நிலை இருந்தது.இந்நிலையில், அகில இந்திய மருத்துவமனைக்கு இதயம் பழுதான நிலையில் காசியாபாத்தை சேர்ந்த ஒருவர் கொண்டு வரப்பட்டார். சிகிச்சை பலனின்றி அவர் இறந்ததைத் தொடர்ந்து, அவரது உடல் முழுவதையும் தானம் செய்ய அவரது குடும்பத் தினர் முன் வந்தனர். ஆனால், இதில் இவர்கள் விளம்பரம் தேடிக் கொள்ள விரும்ப வில்லை. உடல் தானம் செய்வோரின் பெயரையோ, விவரங்களையோ வெளியிடக் கூடாது என்பது தான் அவர்கள் விதித்த ஒரே நிபந்தனை.ஆனால், இதய நோயால் அவர் இறந்ததால், அவரது கண்கள் மற்றும் எலும்புகளை மட்டும் தானமாக பெற டாக்டர்கள் ஒப்புக் கொண்டனர். இதன் படி, அவரது கண்கள் எடுக்கப்பட்டன.இறந்து போனவரின் இடுப்பு எலும்பு, இரண்டு கால்களின் தொடை எலும்புகள், முழங்கால் எலும்புகள், முழங்கால் எலும்பு மூட்டு, அதனுடன் இணைந்த தசைநார் போன்றவை எடுக்கப் பட்டுள்ளன.பொதுவாக, இவ்வாறு தானம் பெறப்படும் எலும்புகள் மற்றும் தசை நார்கள், மைனஸ் 70 டிகிரி சென்டிகிரேட் குளிர்நிலையில் வைக்கப்படும். இவற்றை ஐந்து ஆண்டுகள் வரை பயன்படுத்த முடியும்.தற்போது எலும்பு தானம் அளித்தவரால், குறைந்தபட்சம் 15 பேர் பயன்பெறுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இறந்தவரிடம் இருந்து எடுக்கப்பட்ட தசைநார்கள், விளையாட்டு போட்டிகளில் தசைநார் பாதிப்படையும் வீரர்கள், வீராங்கனைகளுக்கு பொருத்த உதவும். இடுப்பு எலும்பு, முழு இடுப்பு எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும். பல்வேறு விபத்துக்களில் கை, கால்களில் பல இடங்களில் எலும்புகள் உடைந்தும் நொறுங்கியும் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இது பயன்படுத்தப்படும். அதே போல, எலும்பு மஜ்ஜை நோய், எலும்பு புற்றுநோயால் பாதிக்கப் பட்டவர்களுக்கு, எலும்பு மாற்று அறுவை சிகிச்சைக்கு பயன்படுத்த முடியும்.இது போன்று மேற்கொள்ளப்பட்டுள்ள எலும்பு மாற்று அறுவை சிகிச்சைகள் 95 சதவீதம் வெற்றி பெற்றுள்ளன. எலும்புகள் வங்கி துவக்கப்பட்ட பின் இதுவரை ஒன்பது பேர் மட்டுமே உறுப்பு தானம் வழங்கி உள்ளனர். அவர்களில் ஆறு பேர் ஆண்கள்; மூவர் பெண்கள். இவர்களிடம் இருந்து தானம் பெறப்பட்ட எலும்புகள் மூலம், 250 நோயாளிகள் பயன் அடைந்துள்ளனர். எலும்புகளை தானம் கொடுப்பதால், இறந்தவரின் உடல் பார்ப்பதற்கு அருவெறுப்பான தோற்றத்தில் காணப்படும் என்ற தவறான எண்ணமும், மக்கள் மத்தியில் உள்ளது. எலும்புகளை தானமாக எடுக்கும் போது, எலும்புகள் எடுக்கப்பட்ட இடத்தில், அவற்றுக்கு பதிலாக கட்டைகள், சிந்தடிக் கம்பளி போன்றவற்றை பயன்படுத்தி, எலும்புகள் இருந்த இடங்கள் அடைக் கப்பட்டு விடும். உடலை பெற்றுச் செல்லும் போது, எலும்புகள் எடுக்கப்பட்ட பகுதிகளில், தையல் போடப்பட்டு இருப்பது மட்டுமே தெரியும்."ஆனால், எலும்புகள் தானம் கொடுத்தால், உடல் துண்டு துண்டாகத் தான் கிடைக்கும் என்ற தவறான எண்ணம் கொண்டுள்ளனர் அப்பாவி மக்கள்' என்று வருத்தப்படுகிறார், எலும்பு வங்கியை துவக்கிய மல்கோத்ரா.

Read more...

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP