அறிவியல் இங்கு செல்லுபடியாவதில்லை.

17 July 2011


கடற்கரை பிடிக்காதவர்கள் உண்டா. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை நீண்டு கொண்டே செல்லும் கடல், இடைவெளிவிடாமல் கரை மீது வந்து மோதிக் கொண்டிருக்கும் அலைகள், மணல்வீடு கட்டி விளையாட குருணை குருணையாக நைசான மணல் ஆகியவற்றைக் கொண்ட கடற்கரையை யாருக்குத்தான் பிடிக்காது
உலகின் மொத்த பரப்பளவில் 71 சதவீதம் கடல். நிலத்தில் உள்ள உப்பு அனைத்தும் ஆறுகளில் அடித்துச் செல்லப்பட்டு காலங்காலமாக கடலில் கலந்து வருவதால், கடல்நீரில் உப்பு கூடி அது உவர்நீராகிவிட்டது. உலகிலேயே சாக்கடல் (டெட் சீ) என்ற கடலில்தான் இந்த உப்புத்தன்மை அதிகம். இதனால் நீர் அடர்த்தி அதிரித்து இருப்பதால், அந்தக் கடலில் இறங்கினால் நாம் மிதக்க முடியும்.

கஹ்ஃப் அத்தியாத்தில் கூறப்படும் சாசனச் சுருள் பற்றி நமது தமிழாக்கத்தில் 271 வது விளக்கத்தில் விளக்கப்பட்டுள்ளது. அது குறித்து பிபிசி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட டாகுமென்டரி 

Playl - Download    வீடியோ_1
Playl - Download    வீடியோ_2
Playl - Download     வீடியோ_3
Playl - Download     வீடியோ_4

அதேநேரம், நம்ம ஊரில் கடற்கரைக்கு மிக அருகிலேயே கிணறு தோண்டினால் நல்ல தண்ணீர் கிடைக்கிறதே, இது எப்படி? அந்த தண்ணீர் கடல்நீரைப் போல் ஏன் உப்புக் கரிப்பதில்லை?
மழை நீரில் இயற்கையாகவே காய்ச்சி வடித்தல் செயல்பாடு நடைபெறுகிறது. முதலில் நீர்நிலைகளில் இருந்து தண்ணீர் ஆவியாகி, மேகமாகி காற்றில் இடம்பெயர்கிறது. இப்படி உருவாகும் மேகங்கள் ஓரிடத்தில் அதிகமாகச் சேர்வதால் நீராவி குளிர்ந்து திரவமாகி, மழையாகப் பொழிகிறது. இயற்கையாக உருவானாலும் மழை நீரில் கனிமங்கள் குறைவாகவே இருக்கும். ஆனால், கடலுக்கு அருகே பொழியும் மழையில் கனிமங்கள் அதிகம்.
அதிக கனிமத்துகள்களை கடல் காற்றில் தூவுவதே இதற்குக் காரணம். அவற்றுடன் தண்ணீர் மூலக்கூறுகள் வினைபுரிந்து மழை நீரில் கனிமங்கள் கலக்கின்றன. மழை நீரில் நம் உடலுக்குத் தேவையான அளவு கனிமங்கள் இல்லாவிட்டாலும், அது கடற்கரை மணலைத் துளைத்துச் சென்று நிலத்தடி நீருடன் கலந்துவிடுவதால், அது நாம் குடிப்பதற்கு ஏற்ற ஒன்றுதான்.
கடற்கரையின் அடிப்பகுதி நிலத்தைத் தோண்டினால், அது மணலாலும் உப்புப்படிவுகளாலும் நிறைந்திருக்கும்.
இந்தத் தன்மை காரணமாக அதிக நுண்துளைகள், எளிதில் ஊடுருவும் தன்மை அதற்கு உண்டு. இப்படி பொலபொலவென்று அதிக இறுக்கமின்றி இருப்பதால்தான், தோண்டியவுடன் தண்ணீர் கிடைக்கிறது. மழை பெய்யும்போது, தூய்மையான மழை நீர் இந்த நுண்துளைகளுக்குள் எளிதில் ஊடுருவி, மணலால் வடிகட்டப்பட்டு நிலத்தடி நீரோடு சென்று கலந்துவிடுகிறது.
உப்புக்கரிக்கும் நீரைக் கொண்டுள்ள கடற்கரைக்கு மிக அருகிலேயே கரையில் நல்ல தண்ணீர் கிடைப்பதற்கு மற்றொரு முக்கிய காரணம், நல்ல தண்ணீரின் அடர்த்தி செ.மீக்கு 1000 கிராம் உள்ளது. ஆனால், கடல் உவர்ப்பு நீரின் அடர்த்தி செ.மீக்கு 1.0255 கிராம். இதனால், கடலுக்கு அருகேயுள்ள நிலத்தடி நீர்மட்டத்தில் உவர்நீர் இருந்தாலும், நல்ல தண்ணீர் அதற்கு மேல் மிதக்கவே செய்யும். அடர்த்தி குறைவாக இருப்பதுதானே மேலே இருக்கும். கடற்கரையில் ஊற்று தோண்டி தண்ணீர் விற்பனை செய்பவர்கள் இந்த அறிவியலை நம்பியே தொழில் செய்கிறார்கள்.
ஆனால், சென்னையின் கடற்கரையோர பகுதிகளான திருவல்லிக்கேணி, திருவான்மியூர் பகுதிகளில் நிலத்தடி நீர் அளவுக்கு அதிகமாக உறிஞ்சப்பட்டு விட்டதால், அதை ஈடுகட்ட கடல்நீர் உள்ளே புகுந்துவிட்டது. இதனால், இப்பகுதிகளில் இந்த அறிவியல் செல்லுபடியாவதில்லை.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP