தலைபோகும் தகவலைப் பரிமாறிக் கொள்கிறார்களா

05 October 2011


இன்று கையில் புத்தகம் இருக்கிறதோஇல்லையோ மாணவர்களிடையே அலைபேசிகள்தான் ஆக்கிரமித்துள்ளன. அலைபேசியும் கையுமாக அலைபவர்கள் பலர். இதனால் சொந்த பந்தங்கள்உற்றார் உறவினர்களை மறந்து போய்விட்டனர்.
பாடம் படித்த நேரம்போக மீதி நேரம் விளையாட்டுபொழுதுபோக்கு அம்சங்கள்புத்தகம் வாசித்தல் அனைத்தும் கனவாகிவிட்டன.
இப்படி விஞ்ஞான மயமாகிவிட்ட வாழ்க்கையில் மனிதனின் அனைத்து கௌரவங்களும் அவர்களது செய்கையால் நகைப்புக்கு ஆளாக வைக்கிறது.
பஸ்ரயில் இப்படிப் பயணம் செய்யும்போது பிறரைப்பற்றி கவலைப்படாமல் அலைபேசிகளில் பேசி வெறுப்பைச் சம்பாதிப்பவர்கள் ஏராளம். சொந்தப் பிரச்னைஅலுவலகம்கிண்டல் இப்படி எதுவாக இருந்தால் என்ன.. அதற்கென இடம்பொருள் பார்ப்பதைப் பலர் மறந்துவிடுகின்றனர். இது வாகன ஓட்டிகளிடம்தான் அதிகமாகக் காணப்படுகிறது.
ஏலே..மாப்ளே.. என்பதுடன் நிற்காமல் உரக்க சப்தமிட்டுப் பேசுவதால் பிற பயணிகள் முகம் சுழிக்கின்றனர்.
அதேபோல தங்களது குடும்ப ரகசியங்கள்விவரங்கள் ஆகியவற்றையும் பெருமையாகப் பேசுகின்றனர். இன்னும் சிலர் கம்பெனி நிலவரம்சக பணியாளர்கள் பற்றி மட்டரகமான விமர்சனம் என ஏகமாகப் பேசிவிடுகின்றனர்.
பல திரைப்படங்களில் இதுபோன்ற காட்சிகளைப் பார்த்திருக்கிறோம். ஆனாலும் யாரும் திருந்தியபாடில்லை. மாறாகதங்களது சுயகௌரவத்தையும்தன்மானத்தையும் இழக்கின்றனர்.
பல இடங்களில் வீடுகளில் நடைபெறும் கொள்ளைச் சம்பவங்கள் இதுபோன்ற அசட்டுத்தனமான உளறல்களால் ஏற்படுகின்றன. பொதுஇடங்களில் பேசுவதைக் கேட்டும் மர்மநபர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டுவதற்கும் இது இலகுவாக அமைந்துவிடுகிறது.
இதனால்தான் காவல்துறையினர் அவ்வப்போது வெளியூர் செல்வது குறித்தோபிற விவரங்கள் குறித்தோ பொது இடங்களிலோதொலைபேசிகளிலோ தெளிவாகப் பேச வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கின்றனர். ஆனால்அதை யாரும் காது கொடுத்துக் கேட்பதில்லை.
இது ஒருபுறம் இருக்க வாகனங்களில் செல்வோர் செய்யும் அட்டகாசம் கொஞ்சநஞ்சமல்ல. உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பயணிகளும்மாணவமாணவிகளும் பயணம் செய்கின்றனர்.
வாகனம் ஓட்டும்போது அப்படி என்ன தலைபோகும் தகவலைப் பரிமாறிக் கொள்கிறார்களோ தெரியவில்லை. இதைவிட பெரிய கொடுமை இருசக்கர வாகன ஓட்டிகளின் செயல்பாடு. தகவல் பரிமாற்றம் மிக மிக அவசியம்தான். ஆனால்அதற்கென நேரம்காலம் வேண்டும் என்பதை இவர்கள் மறந்துவிடுகிறார்கள்.
இதுதவிரஅலுவலகங்களிலும் அலைபேசி தொந்தரவு பல வேலைகளுக்கு இடையூறாக உள்ளது. இது அரசு அலுவலகங்களிலும் அதிகமாகக் காணப்படுகிறது. இதைத் தடுக்க ரேஷன் கடைகள்பாலகங்கள்மின்வாரிய அலுவலகங்கள்தொலைபேசி கட்டணம் செலுத்துமிடம்ரயில் முன்பதிவுபயணச்சீட்டு வழங்கும் இடம் உள்ளிட்ட இடங்களில் அலைபேசி பேசுவதற்குக் கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும்.
மேலும்பஸ்களில் அலைபேசி பேசுவோருக்கு நடத்துநர்கள் எச்சரிக்கை விடுக்க வேண்டும் அல்லது பிறருக்கு இடையூறு ஏற்படாதவாறு பேசுமாறு அறிவுரை வழங்கலாம்.
அலைபேசி பேசுவது அவரவர் உரிமைதான் என்றாலும்பொது இடங்களில் அநாகரிகமாக நடந்துகொள்வதைத் தவிர்க்கலாம். இவ்வாறு செய்வதால் தமக்குப் பாதுகாப்பு என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.
குறிப்பாகவாகனங்களில் செல்வோர் அலைபேசி பேசுவதை அறவே தவிர்த்தல் நலம். இப்படி அலைபேசிகளால் சில நேரங்களில்விலையாக உயிர்ப்பலிகளும் ஏற்படுவதால் அதைத் தவிர்க்கக் கற்றுக்கொள்வதே சிறந்தது.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP