நாட்டையே உலுக்கும் முக்கிய பிரச்னை

18 October 2011


பெண் கருக்கொலையைத் தடுக்க வரதட்சிணை கொடுமையை நீக்குவதற்கான சட்டத்தை முறையாகச் செயல்படுத்த வேண்டும்பெண்களின் நலனுக்காக வரையறுக்கப்பட்டுள்ள சட்டங்கள் அனைத்தும் சரியாக பின்பற்றப்படவும், செயல்படுத்தப்படவும் வேண்டும்.  
 
2001 ஆண்டில் ஆண், பெண் விகிதத்தில் பெண்களை விட 3.5 கோடி ஆண்கள் அதிகமாக இருந்தனர். இப்போது 5 கோடியாக உயர்ந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் பல ஆண்கள் ஒரு பெண்ணை திருமணம் செய்யக்கூடிய நிலை ஏற்படும். இது நாட்டையே உலுக்கும் முக்கிய பிரச்னையாகும்.
பெண்கள் நாட்டின் பொருளாதரத்துக்கு சப்தமில்லா கொடையாளிகளாக திகழ்கின்றனர். சுய உதவிக் குழுக்கள், வர்த்தகம் என அனைத்திலும் பெண்களின் பங்கு அதிகமாக உள்ளது. ஆனாலும் சமுதாயத்தில் பெண்கள் இரண்டாம் கட்ட குடிமகன்களாகவே நடத்தப்படுகிறார்கள்.
எடை குறைந்தும், சத்து குறைந்தும் பிறக்கும் குழந்தைகளில் 75 சதவீதம் பெண் குழந்தைகளே. அதே போன்று பெண்களின் எழுத்தறிவும் வெறும் 39 சதவீதம்தான் உள்ளது.
இது போன்ற பிரச்னைகளுக்கு சட்டங்கள் நிறைவேற்றுவதால் மட்டும் தீர்வு கிடைத்துவிடாது. பொதுமக்கள், அதிகாரிகள் என அனைவரும் இணைந்து செயல்பட்டால்தான் பிரச்னைகளுக்குத் தீர்வு காண முடியும்.
பெண் கருக்கொலை நீங்க வேண்டுமானால், முதலில் வரதட்சிணைக் கொடுமைகள் நீங்க வேண்டும். பெண் குழந்தை பிறந்தால் அதிக வரதட்சிணை கொடுக்க வேண்டும் என்பது பெண் கருக்கொலைசிசுக் கொலைக்கு பிரதான காரணமாகும்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பங்கள் மட்டுமே பெண் கருக்கொலை அல்லது சிசுக்கொலையில் ஈடுபடுவதில்லை. வீட்டில் பெண் குழந்தைகள் இருந்தால் சமுதாயத்தில் தங்களுக்கு மரியாதை கிடைக்காது என்று கருதிபடித்தபணக்கார குடும்பங்கள்கூட இந்த செயலில் ஈடுபடுகின்றனர்.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP