ஆரோக்கியம் அறிவோம்

15 October 2011


காலையில் உணவு உண்ணாமல் இருப்பது

காலையில் உணவு உண்ணாமல் இருப்பவர்களுக்கு ரத்தத்தில் குறைவான அளவே சர்க்கரை இருக்கும். இது மூளைக்குத் தேவையான சக்தியையும் தேவையான ஊட்டச்சத்துக்களையும் கொடுக்காமல் ஆக்கி, மூளை அழிவுக்குக் காரணமாகும்.

2. மிக அதிகமாகச் சாப்பிடுவது

இது மூளையில் இருக்கும் ரத்த நாளங்கள் இறுகக் காரணமாகி, மூளையின் சக்தி குறைவுக்குக் காரணமாகும்.

3. புகை பிடித்தல்

மூளை சுருங்கவும், அல்ûஸமர்ஸ் வியாதி வருவதற்கும் காரணமாகிறது.

4. நிறைய சர்க்கரை சாப்பிடுதல்

நிறைய சர்க்கரை சாப்பிடுவது, புரோட்டின் நமது உடலில் சேர்வதைத் தடுக்கிறது. இதுவும் மூளை வளர்ச்சிக்கு பாதிப்பாகிறது.

5. மாசு நிறைந்த காற்று

மாசு நிறைந்த காற்றை சுவாசித்தல், நமக்குத் தேவையான ஆக்ஸிஜனை நாம் பெறுவதிலிருந்துதடை செய்கிறது. மூளைக்கு ஆக்ஸிஜன் செல்லா விட்டால், மூளை பாதிப்படையும்.

6. தூக்கமின்மை

நல்ல தூக்கம் நம் மூளைக்கு ஓய்வு கொடுக்கும். வெகுகாலம் தேவையானஅளவு தூங்காமலிருப்பது மூளைக்கு நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும்.

7. தலையை மூடிக்கொண்டு தூங்குவது

தலையை மூடிக்கொண்டு தூங்குவது, போர்வைக்குள் கரியமிலவாயு அதிகரிக்க வைக்கிறது. இது நீங்கள்; சுவாசிக்கும் ஆக்ஸிஜனை குறைக்கிறது. குறைவான ஆக்ஸிஜன் மூளையைப் பாதிக்கிறது.

8. நோயுற்ற காலத்தில் மூளைக்கு வேலை கொடுப்பது

உடல் நோயுற்ற காலத்தில் மிக அதிகமாக மூளைக்கு வேலை கொடுப்பதும், தீவிரமாகப் படிப்பதும் மூளையைப் பாதிக்கும். உடல் சரியாக ஆனபின்னால், மூளைக்கு வேலை கொடுப்பதே சிறந்தது.

9. மூளைக்கு வேலை கொடுக்கும் சிந்தனைகளை மேற்கொள்ளாமல் இருப்பது

மூளையை அதிகமாக உபயோகப்படுத்தும் சிந்தனைகளை மேற்கொள்வதால், மூளையில் புதுப்புது இணைப்புகள் உருவாகின்றன. அதனால், மூளை வலிமையான உறுப்பாக ஆகிறது.

10. பேசாமல் இருப்பது

அறிவுப்பூர்வமான உரையாடல்களை மேற்கொள்வது மூளையின் வலிமையை அதிகரிக்கிறது.


பூண்டு ஒரு அபூர்வ மருத்துவ சக்தியாயும் சிறந்த கிருமி நாசினியாயும் செயல்படுகிறது.

இதன் மருத்துவ குணங்கள்:

வியர்வையை பெருக்கும்.உடற் சக்தியை அதிகப்படுத்தும்.சிறுநீர் தாராளமாக பிரிய வகைச்செய்யும்.தாய்ப்பாலை விருத்தி செய்யும்.ரத்தக்கொதிப்பை தணிக்கும்.

பூண்டை உப்பு சேர்த்து இடித்து சுளுக்கினால் பாதிக்கப்பட்ட இடத்தில் தடவினால் சுளுக்கு நீங்கும்.

ஒரு வெள்ளை பூண்டு,ஏழு மிளகு,ஒன்பது மிளகாய் இலை இவைகளை சேர்த்து காலை மாலை சாப்பிட்டால் குளிர் காய்ச்சல் போய்விடும்.

பல்வலியால் அவதிப்படுபவர்கள் இரண்டு பூண்டு பரலை உரித்து வலி உள்ள இடத்தில் வைத்துக்கொண்டால் பல்வலி பறந்து விடும்.

நான்கு பூண்டு பல்லை பசும்பாலுடன்,கற்கண்டு,தேன் கலந்து மூன்று மணி நேரத்திற்கு ஒரு முறை உண்டால் சீதபேதி குண்மாகும்.

பூண்டுடன் மிளகு,பெருங்காயம் இரண்டையும் சேர்த்து உண்டால் வாயுத்தொல்லை நீங்கும்.

ரத்த அழுத்தம் அதிகமாக உள்ளவர்கள் தினமும் இரவு படுக்கச்செல்லும்போது பூண்டுப்பால் பருக வேண்டும்.அதாவது பூண்டை பசும்பாலில் கொதிக்கவைத்தபின் பூண்டுடன் பாலை பருகி வந்தால் ரத்த அழுத்தம் குறையும்.ஆஸ்துமாவை குணப்படுத்த தூதுவளையுடன் பூண்டை சேர்த்து உண்ண வேண்டும்.

பூண்டையும் இஞ்சியையும் சிறிது வென்னீரில் சேர்த்து அரைத்து காலை மாலை இரு வேளைகளிலும் சாப்பிட்டு வந்தால் நெஞ்சு வலி குணமாகும்.

பூண்டு கைகால் மூட்டுவலி,பித்தம்,ஒற்றைத்தலைவலி இவற்றை போக்கும்.

ரத்தத்தை தூய்மை படுத்தும்.மூளையை பலம்பெறச் செய்யும்.


 

தேங்காய் பலவித பலன்களைக் கொண்டது.  மக்கள் ஆரோக்கியத்தோடு இருப்பதற்கும் புத்தி கூர்மையோடு செயல்படுவதற்கும் தேங்காய்யும் காரணம். தேங்காயை மட்டுமே காலை உணவாகச் சாப்பிட்டு வாழ்க்கையை நடத்தும் இயற்கைநல வாதிகள் (சமைக்காமல் உண்பவர்கள்) உலகெங்கும் உண்டு. சமைக்காத தேங்காயில் கொலஸ்ட்ரால் குறைவு. இளநீரின் பயன்கள் எண்ணற்றவை. நம் உடல் உஷ்ணத்தைப் போக்குகிறது. களைப்பை நீக்குகிறது. நரம்புகளுக்கு பலத்தைத் தருகிறது. மூல நோயைக் கட்டுப்படுத்துகிறது. மலச்சிக்கலை நீக்குகிறது. ஜீரண உறுப்புகள் நன்கு வேலை செய்ய உதவுகிறது. காலை முதல் இரவு வரை சுறுசுறுப்புடனும் புத்துணர்ச்சியுடனும் செயல்பட பெரிதும் உதவுகிறது.
ரத்தத்தை சுத்தமாக்கி புதிய ரத்தசெல்களை உருவாக்குகிறது. வாய்ப்புண் ஆற வேண்டுமா? தேங்காய்ப்பாலை காலை வேளையில் உணவுக்கு முன் பருகிவந்தால் ஒரு வாரத்தில் குணமாகும். ஞாபகசக்தி வேண்டுமா? தேங்காயுடன் பாதாம்பருப்பு, வேர்க்கடலை இவைகளை சேர்த்து சாப்பிட்டால் ஞாபகசக்தி வளரும்.







0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP