பெண்களை பெற்றோர் தான் கண்காணிக்க வேண்டும்'

22 October 2011


சமீபகாலமாக செக்ஸ் வீடியோ கலாசாரம் அதிகரித்து வருகிறது. இன்டர்நெட் "கபே'யில் "சாட்செய்யும் இளம் பெண்கள் அறியாமையால் செய்யும் தவறுகளை பயன்படுத்திஅவர்களது புகைப்படங்களை இன்டர்நெட்டில் வெளியிட போவதாக கூறிமிரட்டல் விடுக்கும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன.

இளம் பெண்களுக்கு இன்டர்நெட் மீது தணியாத மோகம் உண்டு. வீட்டுக்கு தெரியாமல்சுதந்திரமாக   இன்டர்நெட் மூலம் நண்பர்களுக்கு, "சாட்செய்வதற்காகவும்மெயில் அனுப்புவதற்காகவும் ஏராளமான நவீன இன்டர்நெட் "கபே'க்கள்   உள்ளன.   குறிப்பிட்ட சில இளம் பெண்களுக்குதங்களது வீடுகளை விடஇன்டர்நெட் "கபே'க்களுக்கு செல்வது தான் விருப்பம் அதிகம்.

இதுபோல்,   ஒரு இன்டர்நெட் "கபே'க்கு மூன்று இளம் பெண்கள் சென்றனர். தங்களுடன் வெப் கேமராவையும் கொண்டு சென்றனர். பின்னர்தங்கள் நண்பர்களுடன் இன்டர்நெட் மூலமாக, "சாட்செய்தனர். தங்களின் மார்பழகை வெப் கேமரா முன்பாக காட்டி மகிழ்ந்தனர். பின்னர்தங்கள் வீட்டுக்கு திரும்பி விட்டனர்.ஒரு வாரத்துக்கு பின்இன்டர்நெட் "கபே'க்கு சென்ற இளம் பெண்களில் ஒருவருக்கு மர்ம நபர் ஒருவன்போன் மூலம் தொடர்பு கொண்டான். அவன், "இன்டர்நெட் "கபே'யில் வெப் கேமரா முன்உன் அழகை காட்டிய போது எடுக்கப்பட்ட புகைப்படம் என்னிடம் உள்ளது. அதை என் நண்பர்களுக்கு இன்டர்நெட்டில் வெளியிட உள்ளேன்.

இதை தவிர்க்க வேண்டுமானால்உன் அழகை வெளிப்படுத்தும் வகையில் எடுக்கப்பட்ட ஆபாச புகைப்படங்கள் எனக்கு வேண்டும்என்றான். வீட்டிலும் இதை கூற முடியாமல்போலீசாரிடம் கூற முடியாமல் அந்த பெண் மிரண்டு போனார். வேறு வழியின்றிஅந்த மர்ம நபர் கூறியபடிமேலும் சில புகைப்படங்களை அனுப்பி வைத்தார். இரண்டு முறை அந்த நபர் இவ்வாறு மிரட்டல் விடுத்தார். இறுதியாக அந்த பெண்போலீசாரின் உதவியை நாடினார். போலீசார் விரித்த வலையில் அந்த நபர் வசமாக சிக்கினான். விசாரணையில்அவன் கர்நாடகா பகுதியை சேர்ந்தவன் என்பதும்இளம் பெண்களை ஆபாசமாக வீடியோ எடுத்துஅவர்களை மிரட்டுவதை ஒரு தொழிலாகவே செய்து வருவதும் தெரிய வந்தது.

இது குறித்து போலீசார் கூறுகையில், "சமீபகாலமாக இது போன்ற ஆன்-லைன் செக்ஸ் வீடியோ கலாசாரம் அதிகரித்து வருகிறது. இளம் பெண்கள்பொழுதுபோக்குமகிழ்ச்சி என்ற பெயரில் தடம் மாறிச் செல்கின்றனர். இதை அவர்களது பெற்றோர் தான் கண்காணிக்க வேண்டும்என்றனர்.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP