கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டாதீர்கள்

24 October 2011


காடும் மலையும் இல்லையென்றால்
வீடும் நாடும் இனி யேது?
சுற்றுச் சூழல் சீர்கெட்டால்
அற்றுப் போகும் மனித இனம்!

பாதை மற்றும் சாலையோரங்களில் குப்பைகளை கொட்டக்கூடாது.  காலி மனைகளில் குப்பைகள் குவிந்து கிடப்பதால் சுகாதாரக்கேடு ஏற்படும். இப்பகுதியில் குறிப்பிட்ட இட்த்தில் உள்ள காலி மனைகளில் சிலர் குப்பைகளையும்கழிவுகளையும் கொட்டி வருவதால் எதிர்காலத்தில் உங்கள் குழந்தைகளும், பெரியவர்களும் பலவிதமான தொற்று நோய்களுக்கு ஆளாகலாம். இவ்வாறு தினந்தோறும் கொட்டப்படும் குப்பைகள்மலை போல் குவிந்து கிடக்கிறது. இப்பகுதியில் வசிப்பவர்கள் மட்டுமே காலிமனைகளில் குப்பைகளை கொட்டி விடுகின்றனர். தற்போதுமழை நாள் என்பதால் குப்பைகள் மக்கி போவதோடு மட்டுமின்றிபயங்கர துர்நாற்றமும் வீசும். இந்த வழியாக செல்பவர்கள் மூக்கைக் கட்டிக்கொண்டு தான் செல்ல வேண்டும். இப்பகுதியில் சுகாதார சீர்கேடு ஏற்படும் வாய்ப்புள்ளதோடு மட்டுமின்றி தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே காலிமனைகளில் குப்பைகளை நாமும் போடாமல், நகராட்சியினர் உடனுக்குடன் அகற்ற நடவடிக்கையும் உடனே எடுக்க வேண்டும். இப்பகுதியில் குப்பைகள் கொட்டுபவர்களுக்கு அதனால் ஏற்படும் தீமைகளை விளக்கி பொதுமக்களும் மற்றும் தனியார் நிறுவனங்களும் குப்பைகளை போடாமல் இருக்க அனைவரும் விழிப்புடன் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Return to previous page

சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது உண்மையில் சுற்றுச்சூழலைப் பேணுவதுடன் சுற்றுச் சூழலை மேம்படுத்துவதாகவும் அர்த்தப்படும். அவை மட்டுமன்றி சூழல் தொகுதிகளையும் இயற்கைச் சூழலையும் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்படும் சகல நடவடிக்கைகளும் சுற்றுச்சூழல் பாதுகாப்பினுள் அடங்கும். நகரப் பகுதிகளில் உள்ள பல வடிகால்களில் நீர் வடிந்தோடும் வேகம் குறைவடைவதற்கும் அப்புறப்படுத்தும் குப்பைகளின் அளவு அதிகரித்தமையே பிரதான காரணமாகும்.

Man Picking Up Litter - Royalty Free Clipart Picture        A Boy In a Wheelchair Throwing Trash Away - Royalty Free Clipart Picture                 A Boy In a Wheelchair Throwing Trash Away - Royalty Free Clipart Picture
மழைக்காலங்களிலே நகர்ப்பகுதிகளில் ஏற்படும் வெள்ள அனர்த்தத்துக்கான பிரதான காரணமும் இதுவாகும். அத்துடன் வடிகால்களில் சேரும் குப்பைகள் நோய்க்காவிகளான நுளம்புஎலி, கொசுக்கள் போன்றவற்றின் இனப்பெருக் கத்துக்கும் வழி வகுத்து விடுகின்றன. எலிகளினால் ஒவ்வாமை ஏற்படலாம். ஒவ்வாமை என்பது சுகாதாரமற்ற சூழலால்,  ஒரு மனிதனின் சுகாதாரம் பாதிக்கப்படுவதால் ஏற்படும் எதிர்விளைவே ஒவ்வாமையாகும். உடலுக்கு ஒவ்வாத ஒரு பொருள், உடலுக்குள் செல்லும் நிலையில், அது குறித்து உடலின் நோய் எதிர்ப்பு சக்தி உடனடியாக எதிர் தாக்குதல் நடத்துகிறது.  அதன் தாக்கத்தைத்தான் நாம் ஒவ்வாமையாக உணர்கிறோம்.
Dengue mosquito   Dengue mosquitoes
உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் டெங்கு நோயை பரப்பும் கொசுக்கள்
ஒவ்வாமையின் அறிகுறிகள் பல உள்ளன.  திடீரென ஏற்படும் தொடர் தும்மல், மூக்கு,  கண்களில் எரிச்சல்,  நீர் ஒழுகுதல், சருமத்தில் தடிப்பு, சில நேரங்களில் சளி பிடிப்பது கூட ஒவ்வாமையின் அறிகுறியாகும்.  உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்களுக்கு ஒவ்வாமை உண்டாகும்.  பொதுவாக சுகாதாரமற்ற சுற்றுச் சூழலால்தான் பெரும்பாலானோருக்கு ஒவ்வாமை உருவாகிறது.  குப்பைகளைத் திறந்த வெளியிலே கொட்டும் போது நீர்ப்பரப்புகள் மட்டுமன்றி நிலக்கீழ் நீரும் கூட மாசுபடுகிறது.
          
சிக்கன்குன்யா என்ற நோயை பரப்பும் கொசுக்கள்

கொசுக்களால் டெங்கு, சிக்- குன் குனியா காய்ச்சல், ஏடீஸ் வகை கொசுக்கள் கடிப்பதால் பரவுகின்றன. டெங்கு காய்ச்சல் பரவினால் கடும் காய்ச்சல், தலைவலி, கண்பின்புறத்தில் வலி, உடலில் தடிப்புகள் உண்டாகும். காய்ச்சல் முற்றிய நிலையில் மூக்கு மற்றும் தோல் பகுதியில் இருந்து ரத்தம் வழிய ஆரம்பிக்கும். பின் டெங்கு சாக் சின்ட்ரம் உண்டாகும். இதன் மூலம் இறப்பு உண்டாகலாம். கார்டு டெஸ்ட், எலிசா டெஸ்ட் என்ற ரத்த பரிசோதனைகள் மூலம் இதனை உறுதி செய்யலாம்.வீடு மற்றும் வீட்டை சுற்றி உள்ள பிளாஸ்டிக் டப்பாக்கள், டயர்கள், தேங்காய் ஓடுகள், உடைந்த தொட்டிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். கொசுப்புழு ஒழிக்கும் மருந்துகளை ஊற்றி கொசுக்களை ஒழிக்க வேண்டும். முதிர்ந்த கொசுக்களை கொசு மருந்து அடித்து கட்டுப்படுத்த வேண்டும். இது பற்றி மக்களிடம் எடுத்துக் கூறி நாமும் விழிப்புடன் இருக்க வேண்டும்

நம்முடைய அலட்ச்சியத்தினால் நோய்கள் ஏற்பட்டு முன்னறிவிப்பு எதுவுமில்லாமல் வந்து நிற்கும் மருத்துவச் செலவுகளால் நம்முடைய காலமும், பொருளாதாரமும் பெருமளவில் விரைய்மாவதற்கு நாமே காரணமாகி விடுகிறோ.

திறந்த வெளியிலே கொட்டப்படும் குப்பைகளை எரிப்பதால் சுவாசக்கோளாறுகளையும் வளி மாசையும் ஏற்படுத்துகிறது.

இந்த நடவடிக்கைகளில் ஈபடுவோர் சிலவேளைகளில் அடிப்படைப் பிரச்சினையைப் பற்றி சிந்திப்பதில்லை. பிரச்சினை என்று வரும்போது சம்பந்தப்பட்ட தரப்பினர் எவருமே பெரியளவில் பாதிக்கப்படாதவாறே தீர்வுகளை முன்வைக்க வேண்டும்.

இவற்றடன் எல்லாம் நாம் நின்று விடுவதில்லை. எமது எதிர்காலச் சந்ததியை மட்டுமன்றி எமது எதிர்காலத்தையும் கூடக் கருத்தில் கொள்ளாது இன்று மகிழ்வுடன் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய மனப்பாங்குடன் செயற்படுகிறோம். இது அனைவருக்கும் நல்லதல்ல.

0 comments:

Post a Comment

About This Blog

அஸ்ஸலாமு அலைக்கும். இறைவனின் சாந்தியும், சமாதானமும் அனைவரின் மீதும் பொழியட்டும். உங்கள் வருகைக்கு நன்றி

Blog Archive

  © Blogger template The Professional Template II by Ourblogtemplates.com 2009

Back to TOP