மக்களை ஏமாற்றும் அரசியல் வாதிகளும், மக்களை நினைத்து செருப்பால் அடித்துக் கொண்ட நேர்மையான அதிகாரியும்
27 November 2011
குடிக்க
கூழுக்கு வழியில்லை; கொப்பளிப்பது
பன்னீரில் என்ற கதையாக இருக்கிறது. அத்தியாவசிய திட்டங்களுக்கு நிதி இல்லை என்று சொல்லிக் கொண்டு அவசியமான வைகளின் விலைகளை உயர்த்திவிட்டு, திட்டங்களை கிடப்பில் போடுகிறார்கள்.
ஆங்காகங்கே மழை நீர் தேங்கி குளம் போல் கட்சி அளிக்கிறது. வீடுகளை சுற்றி கழிவு
நீர் சேர்ந்து நாற்றம் வீசுவதால் மக்கள் நடமாட முடியாமல் அவதிப்படுகிறார்கள்.
சரியான சாலை வசதி இல்லை, குடிநீர்
வசதி கிடைக்காத கிராமங்கள் கூட இன்னும் இருக்கின்றன. இந்த லட்சணத்தில் இலவச
நாப்கின், இலவச லாப்டாப், மிக்சி, கிரைண்டர், இலவச மின்விசிறி என்று இலவசங்கள் ஒருபுறம் அரசு
கஜானாவை காலி செய்து கொண்டிருக்கின்றன. மின்சாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கும்
இந்த நேரத்தில் இலவச மின்சாரம் தேவை தானா? காசு
கொடுத்து மின்சாரத்தை பயன்படுத்துவோருக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கும்
அரசு, இலவசமாக பயன்படுத்துவோருக்கு எந்த
கட்டுப்பாடும் விதிக்காதது ஏனோ? மீட்டர்
வாங்க கூட வசதியில்லாதவர்கள் என்றால், எது
எதற்கோ தண்ட செலவு செய்யும் அரசு, மீட்டர்களையும்
இலவசமாக பொருத்தி பயனீட்டு அளவை கட்டுப்படுத்தினால் ஓரளவு மின்சாரம்
சேமிக்கப்படும் அல்லவா? நல்லவன்
சேர்த்ததை நாற வாயன் அழித்தான் என்ற கதையாக இவர்கள் ஓசியில் அனுபவிப்பதற்காக
மற்றவர்கள் எவ்வளவு காலம் தண்டம் அழுவது? ௫௦௦ ஒரு லட்ச்சம் கோடி நஷ்டம் என்பது எவ்வளவு பெரிய தொகை? இது
யார் பணம்? மக்கள்
பணம் தானே? கஷ்டப்பட்டு
சம்பாதித்து வரியாக செலுத்துவோரின் உழைப்பு வீணாக்கப்படுவது நியாயமா? வரிப்பணம் வீணாகக்கூடாது என்று
சொன்னால், அராஜக திராவிட முன்னேற்ற கழகத்தின்
அடிவருடிகள் நீ மட்டும் தான் வரி கட்டுகிறாயா? என்று
குதர்க்கம் பேசுகின்றனர். எந்த வகையிலும் உழைத்து பிழைக்க முடியாதவர்களுக்கு
இலவசமாக கொடுத்தால் நியாயம். உழைக்க தயாரில்லாத கூட்டத்துக்கு கொடுப்பது
அநியாயம். அரசுப்பணம் இப்படி வீணாகும் வரை, இது
போன்ற நஷ்டங்கள் தொடரத்தான் செய்யும். மின் வாரியத்தை நஷ்டத்திலிருந்து மீட்க, தயவு தாட்சண்யம் பார்க்காமல் இலவச
மின்சாரத்துக்கு பதில் ஒரு குறைந்த பட்ச தொகையை வசூலிக்கலாம். அரசியல்கட்சிகளின்
ஆடம்பர பொதுக்கூட்டங்களுக்கு பொது மின்சாரத்தை கட்டாயம் தடை செய்து, ஜெனரேடர் பயன்படுத்துமாறு கட்டுப்படுத்தலாம்.
இன்னும் என்னென்ன வகைகளில் எல்லாம் மின் சிக்கனத்தை கடைப்பிடிக்க முடியுமோ
அப்படியெல்லாம் செய்யலாம். மின்வாரியத்தில் தேவைக்கு
அதிகமாக இருக்கும் ஊழியர்களை கண்டறிந்து, உடனே
வீட்டுக்கு அனுப்பலாம். அரசு உடனடியாக ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட்டு, மக்களிடம் உண்மை நிலவரத்தை சொல்லி, குஜராத்தில் மோடி செய்தது போல்
தடையற்ற மின்சாரம் வேண்டுமானால், கட்டணம்
செலுத்துங்கள் என்று வெளிப்படையாக அறிவித்து விடலாம். இதே போல் தொடர்ந்து
நஷ்டத்தில் நீண்ட காலம் ஓட்ட முடியாது. ஓட்டுக்காகவும், வீம்புக்காகவும் செயல்படுவதை விடுத்து, முதல்வர் உடனடியாக களம் இறங்கி
மக்களிடம் உண்மையை எடுத்து உரைத்து, அவர்களின்
ஒத்துழைப்பை பெறுவது அவருடைய மதிப்பையும், மரியாதையையும் உயர்த்தும். அதை விட்டு விட்டு தொடர்ந்து மக்கள் மீது மேலும் மேலும் சுமத்தினால் வரும் தேர்தலில் மக்கள் பாடம் கற்பிப்பார்கள்.
செருப்பால் அடித்துக் கொண்ட நேர்மையான அதிகாரியும்
ஐஏஎஸ் அதிகாரிகளாக இருப்பவர்கள் எல்லோருமே சந்தோஷமாக வேலை பார்க்கிறார்கள் என
சொல்ல முடியாது. பல துறைகளில் மன அழுத்தம், வேலைச் சுமை, உயிர் பயத்துடன்தான் வேலை பார்த்து வருகிறார்கள். அரியானா மாநிலத்தில்
ஆக்கிரமிப்புகளை அகற்றச் சென்ற ஒரு ஐஏஎஸ் அதிகாரி, தனது ஷூவை கழட்டி தானே தலையில் அடித்துக் கொண்ட செய்தி பலருக்கு அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
அரியானா நகர்ப்புற வளர்ச்சித் துறையின் நிர்வாக
அலுவலர் பிரவீன்குமார் ஐஏஎஸ். லஞ்சம் வாங்காத நேர்மையான அதிகாரி. சிக்கந்தர்பூர்
பிரிஸ்டல் சவுக் என்ற பகுதியில் சட்டவிரோதமாக கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அகற்ற
நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. கடந்த ஞாயிற்றுக் கிழமை இரவு, சக அதிகாரிகளுடன்
சென்றிருக்கிறார். அதிகாரிகள் படையை பார்த்ததுமே விஷயத்தை புரிந்து கொண்ட அப்பகுதி
மக்கள் எதிர்ப்புக் கொடி தூக்கினர். அதிகாரி என்ற முறையில், கடமையை நிறைவேற்ற
வந்திருப்பதாக கூறிய பிரவீன்குமார், கூடியிருந்த ஒவ்வொருவரின் காலைத் தொட்டு, கடமையை நிறைவேற்ற வழிவிடும்படி மன்றாடினார்.
ஆனாலும், கூட்டம் வழி விட மறுத்தது. திடீரென்று காலில் இருந்த ஷூவை கழற்றிய
பிரவீன்குமார், தனக்கு தானே ஷூவால் அடித்துக் கொண்டார். எதிர்ப்பு தெரிவித்தவர்கள்
அதிர்ச்சியில் உறைந்து போய் ஒதுங்கிக் கொள்ள, அந்த கட்டிடத்திலேயே இரவு தங்கி, விடிந்ததும் இடிப்பு பணியை தொடங்கி முடித்து விட்டுதான் வீடு திரும்பினார்
அந்த அதிகாரி. நான் நேர்மையானவன் என்பதை நிரூபிக்க இதை விட்டால் எனக்கு வேறு வழி
தெரியவில்லை என்று கூறிய பிரவீன்குமாரை சமாதானப்படுத்த, எதிர்ப்பு தெரிவித்தவர்களே ஸ்வீட்
மற்றும் பரிசுப் பொருட்களை அளித்துள்ளனர்.
மாவட்ட கலெக்டர்கள், நிலம் கையகப்படுத்தும் அதிகாரிகள், ஆக்கிரமிப்பு அகற்றும் அதிகாரிகள், வருமான வரி அதிகாரிகள், பத்திர பதிவு துறை அதிகாரிகளில் அரசியல்வாதிகள், பணக்காரர்களின் உத்தரவுக்கும் பணத்துக்கும் பணிந்து செல்பவர்களும்
இருக்கிறார்கள். மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என நினைக்கும்
நேர்மையானவர்களும் இருக்கிறார்கள். இவர்களுக்குத்தான் கொலை மிரட்டல், டிரான்ஸ்பர் என பிரச்னை பல
ரூபங்களில் வருகிறது. அதையும் தாண்டி நேர்மையான அதிகாரிகள் இருப்பது சந்தோஷம்
தருகிறது.
0 comments:
Post a Comment